இஸ்லாம் குறித்த கேள்வி பதில்

இந்த புத்தகம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், இம்மாபெரும் மார்க்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதையும், காலவோட்டத்தில் பல்வேறுபட்ட நாகரிகங்கள் மற்றும் மக்களை உள்வாங்கி, சமகால நிகழ்வுகளுடனும், முன்னேற்றங்களுடன் ஒன்றித்துத் செல்வதில் அதன் தனித்துவம், வேறுபாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகிய விடயங்களைக் குறித்துக்காட்டுவதையும், இம்மாபெரும் மார்க்கத்தின் முகவரியை கொச்சைபடுத்தி சிதைக்கும் பல முயற்சிகள் இருக்கும் நிலையில் இம்மார்க்கத்தின் நீடித்து நிலைக்கும் திறனை எடுத்துக் காட்டுவதையும், இம்மார்க்கத்தை பயங்கரவாதம் என வர்ணித்து இதற்கெதிராக மக்களை தூண்டும் பயங்கரமான எதிர்மறை பிரச்சாரத்தை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடும் திறன் இம்மார்க்கத்திற்கு உண்டு என்பதைத் தெளிவு படுத்துவதையும் இந்நூல் இலக்காகக் கொள்கின்றது.

About author

ஒரு மனிதரைப் பொருத்தவரை ஏதோ ஒரு கடவுளை அவன் ஏற்றாக வேண்டும். அது உண்மைக் கடவுளாகவோ அல்லது (பொய்யான) கடவுளாகக்க கூட இருக்கலாம். அதனை கடவுள் என்றோ அல்லது வேறு ஏதாவது பெயர் கொண்டோ அழைக்கலாம், அதாவது அவர்கள் ஏற்றுக்கொண்ட அக்கடவுள் சிலவேளை ஒரு மரமாக, வானத்தில் உள்ள ஒரு நட்சத்திரமாக, ஒரு பெண்ணாக, தனக்கு தொழிலொன்றை அளித்த தலைவராக, அறிவியல் கோட்பாடாக, ஏன் தனது மனோ இச்சையாகக் கூட இருக்கலாம். ஆனால்; மனிதன் என்ற வகையில் ஏதோ ஒன்றை விசுவாசித்து அதனை ஏற்றுப்பின்பற்றி, புனிதப்படுத்தி வாழ்க்கைப் பயணத்தின் எல்லா நிலைகளிலும் அதனிடம் சரணடைந்து அதற்காகவே சில வேளை இன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் ஆழமான நம்பிக்கை நிலை இருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றை நம்பி தன்னை மாய்த்துக்கொள்ளும் நிலையையே நாம் வணக்கவழிபாடு என்ற பெயரால் அழைக்கிறோம். எனவே உண்மைக்கடவுளை -இறைவனை- வணங்கி வழிபடுதல் ஒரு மனிதன் மற்றவர்களுக்கு அல்லது சமூகத்திற்கு அடிமைப்படுவதிலிருந்து விடுதலையை பெற்றுத் தருகிறது.

உண்மையான கடவுள் படைப்பாளர் ஆவார். ஆக, உண்மையான கடவுள் அல்லாது பிறிதொன்றை வழிபடுவது அவர்களும் கடவுள்கள் என்று வாதிடுவதை பொதிந்திருக்கிறது. மேலும் கடவுள் ஒரு படைப்பாளராக இருக்க வேண்டும். கடவுள் படைப்பாளர் என்பதற்கான சான்று, அவர் பிரபஞ்சத்தில் படைத்திருப்பதை பார்ப்பதன் மூலம்; அல்லது தான் படைப்பாளர்-சிருஷ்டி கர்த்தா என நிரூபணமான கடவுளின் இறைச்செய்தி மூலம் இருக்கும். அவ்வாறு இவர்கள் கூறும் கடவுள் பற்றிய இக்கூற்றுக்கு கற்புலனாகும் இந்ந பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் இருந்தோ அல்லது படைத்த கடவுளின் வார்த்தைகளில் இருந்தோ ஆதாரம் இல்லை என்றால் வணங்கப்படும் இந்தக் கடவுள்கள் யாவும் பொய்யானவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒரு மனிதன் தான் எதிர்நோக்கும் கஷ்டம் மற்றும் துன்பத்தின் போது ஒரு யதார்த்தத்தைக் நோக்கி நகர்வதை நாம் அவதானிக்கிறோம். அதுதான், அவன் பல கடவுள்களை ஏற்று வணங்கினும் ஒரு கடவுளை மாத்திரமே நாடிச்சென்று தனது துன்பத்தை முறையிடுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை, தோற்றப்பாடுகளை அறிந்து அடையாளம் காண்பதன் மூலமும், இவ்வுலகின் விவகாரங்களில் உள்ள ஒத்த தன்மையினூடாகவும் பிரபஞ்சத்தில் காணப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கையும் சடப்பொருளின் ஒத்ததன்மையையும் அறிவியல் விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. (ஆகவே இப்பிரபஞ்ஞத்தின் இயக்கம் ஒருவனின் வல்லமையினூடாக இயக்கப்படும் பேருண்மையை இதனூடாக அறிந்து கொள்கிறோம்.)

ஒரு குடும்பத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதாவது குடும்பம் சம்பந்தமாக ஒரு தீர்க்கமான முடிவை எய்துகொள்வதில் தந்தைக்கும் தாய்க்கும்; (கணவன் மனைவிக்கு மத்தியில்) கருத்து வேறுபாடு, சிக்கல் ஏற்பட்டால், அவர்களின் கருத்து வேறுபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் நாசமாகி விடும் என்பதை சற்று சிந்திப்போமேயானால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடவுள்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிப்பதினால் ஏற்படும் சீர்குழைவு எப்படி இருக்கும்?!... More

மத்திய கிழக்கில் வாழும் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் யாவரும் அல்லாஹ் என்ற வார்த்தையை கடவுளுக்குப் பயண்படுத்துகின்றனர். இது 'உண்மையான ஏக இறைவனைக் குறிக்கிறது. அல்லாஹ்வே மூஸா மற்றும் ஈஸாவின் (அவர்கள் இருவருக்கும் சாந்தி உண்டாவதாக) கடவுளாவான். அல்லாஹ் தனது திருமறை அல் குர்ஆனில் 'அல்லாஹ்' என்ற பெயராலும் மற்றும் வேறு (அழகிய) பெயர்கள் பண்புகளாலும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளான். பைபிளின் பழைய ஏற்பாட்டில் பழைய பிரதியில் 89 தடவைகள் அல்லாஹ் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் பண்புகளுள் படைப்பாளன் ' அல் காலிக்' என்பதும் ஒன்றாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

"அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன்". (ஹஷ்ர் : 24). (அல் ஹஷ்ர் : 24)... More

இக்கேள்வியானது "படைப்பாளன் படைப்பினங்களுக்கு ஒப்பானவன்" என்ற தவறான கருதுகோளின் -யூகத்தின்- விளைவாக எழுந்ந கேள்வியாகும். இக்கருதுகோளானது பகுத்தறிவு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் நிராகரிக்கப்பட்டதாகும். அதனை பின்வருமாறு தெளிவுபடுத்திட முடியும்.

ஒரு மனிதனிடம் சிவப்பு நிறத்தின் மனம் என்ன என ஒரு எளிய வினாவை தொடுத்தால் அவனால் பதிலளிக்க முடியுமா? நிச்சயமாக, இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை, ஏனென்றால் சிவப்பு நிறமானது நுகரப்படும் வாசனை பொருட்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படவில்லை.

உதாரணத்திற்கு தொலைக்காட்சி அல்லது குளிர்சாதனப் பெட்டி போன்றபொருளைத் தயாரிக்கும் நிறுவனம், குறித்த சாதனத்தைப் பயன்படுத்தும் முறையை விளக்கிட அறிவுறுத்தல்கள், ஒழுங்குகள் வரையரையரைகள் அடங்கிய ஒரு கையேட்டை அத்துடன் இணைக்கிறது. உற்பத்தி செய்யும் குறித்த நிறுவனம் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டிருக்காத நிலையில், வேண்டப்பட்ட விதத்தில் சாதனத்தில் இருந்து பயனடைய விரும்பும் நுகர்வோர் இந்த அறிவுருத்தல்களை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் இல்லாவிட்டால் குறித்த சாதனத்திலிருந்து பயனை அடையமுடியாது என்பது தெளிவான விடயமாகும்.... More

படைப்பாளனை நம்புவது என்பது எந்தப் பொருட்களும் எவ்விதக்காரணமுமின்றி தோற்றம் பெற முடியாது (காரணமின்றி காரியமில்லை) என்ற அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. உயிரினங்களால் நிரம்பியிருக்கின்ற இம்மாபெரும் பிரபஞ்சமும் அதில் உள்ள உயிரினங்களும் கண்ணுக்குப் புலனாகா (தொட்டுணர முடியா) உணர்வைக் கொண்டுள்ளன என்பதையும் சடப்பொருளல்லாத கணிதவியல் கோட்பாட்டு விதிகளுக்கு உட்படுகின்றன என்பதைக் குறிப்பிட தேவையில்லை. வரையறுக்கப்பட்ட பொருளான பிரபஞ்சத்தின் இருப்பை விளக்குவதற்கு, நமக்கு ஒரு தனியான ஆதாரம் தேவைபடுகிறது.

தற்செயல் நிகழ்வே பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று கூறுவதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது. ஏனெனில் தற்செயல் நிகழ்வு என்பது ஒரு முதன்மைக் காரணம் அல்ல, மாறாக ஒரு இரண்டாம் நிலை முடிவாகும். அதாவது ஒரு விடயம் திடீரென நிகழ்வதற்கு அடிப்படைக் கூறுகளான (காலம், இடம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் தேவையும்) அதற்குரிய காரணிகளும் இருப்பது அவசியமாகும். 'தற்செயல்' என்ற வார்த்தையை எதையும் விளக்குவதற்கோ பொருள்கோடல் செய்யவோ பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது அர்த்தமற்ற வார்த்தையாகும்.

உதாரணத்திற்கு, ஒரு நபர் தனது அறைக்குள் செல்கிறார் அங்கே யன்னல் கண்ணாடி உடைந்திருப்பதைக் கண்கிறார், உடனே அவர் யன்னல் கண்ணாடியை உடைத்தது யார் என்று தனது குடும்பத்தினரைக் கேட்க அதற்கு, அவர்கள் இது தானாக உடைந்து விட்டது என்று பதில் அளித்தால் அந்தப்பதில் தவறானது. ஏனென்றால் யன்னல் எப்படி உடைந்தது என்று அவர் கேட்கவில்லை, மாறாக யன்னலை உடைத்தது யார் என்றே கேட்டார். தற்செயல் என்பது ஒரு செயலின் பண்பே தவிர அச்செயலைச்செய்தவர் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குரிய சரியான பதில் இவ்வாறு அமைதல் வேண்டும். அதாவது கண்ணாடியை இன்னார் உடைத்தார் என்று கூறிவிட்டு. பின்னர் அதனை உடைத்தவர் தவறி தற்செயலாக உடைத்தார் அல்லது வேண்டுமென்றே உடைத்தார் என்று தெளிவு படுத்த வேண்டும். இந்நிலை இப்பிரபஞ்சம், உயிரினங்கள் அனைதிற்க்கும் பொருந்தும்.... More

நாம் எமது வெற்றுக்கண்களால் வானவில் மற்றும் காணல் நீரைக் காண்கிறோம். ஆனால் அதற்கென்று ஒரு இருப்பு அல்லது யதார்த்தம் கிடையாது! ஆனால் வெறுமனே இயற்கை விஞ்ஞானம் புவியீர்ப்பு விசை இருப்பதை நிரூபித்திருப்பதால் அதனை நாம் காணமலே நம்புகிறோம். இதே போல் கடவுளை (இறைவனை) நம் வெற்றுக் கண்களுக்கு புலப்படவில்லை என்பதால் அவன் இருப்பை மறுக்க முடியாவதல்லவா?

"பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன், மிக்க அறிந்தவன்".(அன்ஆம் : 103). تقدم

இக்கருத்தை விளக்க பின்வவரும் எடுத்துக்காட்டை குறிப்பிட முடியும். அதாவது 'சிந்தனை' என்ற சடப்பொருளல்லாத ஒன்றை எடுத்துக்கொள்வோம். ஒரு மனிதனால் பொருளற்ற இவ்வாறான ஒன்றின் நிறையை கிரேமிலோ அதன் நீளத்தை சென்டிமீட்டரிலோ, அதில் உள்ளடங்கியுள்ள இரசாயன கலவையையோ, நிறத்தையோ, அதன் உள்ளே காணப்படும் அழுத்தத்தையோ, தோற்றத்தையோ வடிவத்தையோ விவரிக்க முடியாது.!... More

விளக்கத்திற்காக மாத்திரம்- உயர்வான பண்பு அல்லாஹ்விற்கு மாத்திரமே- ஒரு உதாரணத்தை குறிப்பிடுகிறேன். ஒரு மனிதன் இலக்ட்ரோனிக் கருவியொன்றை பயன்படுத்தும் வேளை அவன் அதனை வெளியிலிருந்தே கட்டுப்படுத்துகிறான். இயக்குகிறான். அவன் ஒரு போதும் எந்த நிலையிலும் அதனுள் போவதில்லை என்பதை நாம் அறிவோம்

ஒரு சாதாரன கருவியை இயக்குவதற்கு சாதாரண ஒரு மனிதனின் நிலை இவ்வாறு இருக்கையில் நாம் அல்லாஹ்வுக்கு இதனை விட பண்மடங்காக செய்வதற்கு இயலும் என்று கூறக் காரணம் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருப்பதினாலாகும். ஆகவே நாம் படைப்பாளனான இறைவன் ஒருவன் என்றும் அவன் தனித்துவமானவன் என்றும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான பண்புள்ள ஒருவன் அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமற்றதை செய்யமாட்டான் என்பதையும் நாம் புரிய வேண்டும். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து அவனது மகிமைக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்தைவிட்டும் அவன் மேலானவனாக உள்ளான்.

இன்னோர் உதாரணத்தை அவதானிப்போம். ஒரு மத போதகர் அல்லது மதரீதியான மரியாதையைப் பெற்ற ஒருவர் ஒரு போதும் பொதுப்பாதையில் நிர்வாணமாக திரியமாட்டார். அவருக்கு இதனை செய்யவதற்கு இயலுமை இருந்தும் மக்கள் முன் இவ்வாறான தோற்றத்தில் வரமாட்டார். காரணம் அவர் பெற்றிருக்கும் மதரீதியான அந்தஸ்த்து இச்செய்யற்பாட்டிட்ற்கு பொருந்தாது என்பதினாலாகும். ஆகவே மனிதனின் தோற்றத்தில் அல்லது படைப்பின் தோற்றத்தில் படைப்பாளன் -இறைவன்- தோன்ற வேண்டும் என்பது அறிவுபூர்வமற்ற ஒரு கேள்வி என்பதைப் புரிந்திருப்பீர்கள்.... More

மனித சட்டத்தில் அரசனின் அல்லது அதிகாரம் படைத்தோரின் உரிமையை மீறுவது ஏனைய குற்றங்களுக்கு சமமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவ்வாறு மனித சட்டமே அதிகாரம் பெற்ற மனிதனின் உரிமையை மீறி நடக்கும் போது அதனை மிகப்பெரும் குற்றமாக கருதும் போது அரசர்களுக்கு எல்லாம் அரசனான அல்லாஹ்வின் உரிமையை மீறுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. ஆகவே நபியவர்கள் குறிப்பிட்டது போன்று அடியார்கள் அல்லாஹ்வுக்கு- இறைவனுக்கு- செலுத்த வேண்டிய கடமை அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதாகும் . இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில் "அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனை வணங்கி வழிபடுவதுடன் அவனுக்கு எதனையும் இணைவைக்காது இருப்பதுமாகும். இக்கடமையை அடியார்கள் நிறைவேற்றினால் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி உனக்குத் தெரியுமா? என கேட்க, அதற்கு நான் இது குறித்து மிகவும் அறிந்தோர் அல்லாஹ்வும் அவனின் தூதருமாவார்கள். என்றேன். அதற்கு நபியவர்கள்: அடியார்களை வேதனை செய்யாது நரகத்திலிருந்து காப்பதுதான் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை" என்று நபியவர்கள் கூறியதாக முஆத் (ரலி) கூறினார்கள்.

அத்துடன் இவ்வாறு நாம் சிந்தித்தாலே இக்கேள்விக்கான சரியான பதிலை கண்டு கொள்ள முடியும். அதாவது நாம் ஒருவருக்கு ஒரு அன்பளிப்பை வழங்குகிறோம், அவரோ வேறொவருக்கு நன்றி கூறி அவரைப்பாராட்டுகிறார் என்றால் எம்மால் அதனை ஏற்க முடியுமா என்று சிந்தித்தால் நாம் இவ்விடயத்தில் தெளிவு பெற போதுமான சான்றாக இது அமைந்துவிடும். உயர் பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, இந்த விடயத்தில் அடியார்களும் தங்களின் படைப்பாளனுடன் இவ்வாறுதான் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு கணக்கிட முடியாத அருள்களை வழங்கியுள்ளான், அவர்களோ அவனல்லாத மற்றவர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் படைப்பாளனான இறைவன் எல்லா நிலைகளிலும் தேவையற்றவன்.

அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில் 'நாங்கள்' என்று அல்குர்ஆன் வசனங்களின் பயன்படுத்துவதானது, அவன் மாத்திரமே மேன்மை மற்றும் அழகு ஆகிய பண்புகளில் முழுவைதையும் ஒன்று சேர பெற்றிருப்பதினாலாகும். அரபு மொழியில் இப்பிரயோகம் பலம் -சக்தி- வல்லமை மேன்மை போன்ற அர்த்தத்தைக் காட்டவல்லது. அதே போல் ஆங்கில மொழியில் நாம் என்பது உடமை, சொந்தம், அதிகாரம் போன்ற கருத்தைக் காட்டும். அதாவது பன்மை பிரதிப் பெயரானது உயர் பதவியில் உள்ள நபரை சுட்டிக்காட்ட பயன் படுத்தப்படுகிறது. (உதாரணத்திற்கு அரசர், இளவரசர் அல்லது அதிகாரம் படைத்தவர்) என்றாலும் அல்குர்ஆன் எப்போதும் வணக்கம் வழிபாடு தொடர்பானவற்றில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை கடுமையாக வலியுறுத்துவதைக் காணமுடியும்.

"சத்தியம் உங்களின் இரட்சகனிடமிருந்தே வந்துள்ளது. ஆகவே விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும், விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக". (அல் கஹ்ப் : 29). تقدم

படைப்பாளனான அல்லாஹ்வுக்கு எம்மை அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவும், வணங்கிவழிபடவும் நிர்ப்பந்திக்க முடியும். என்றாலும் நிர்ப்பந்தித்தல் மனித படைப்பின் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்துகொள்ள வழிவகுக்காது.

ஆக,தெய்வீக ஞானம், ஆதமை படைத்ததிலும், அறிவால் அவரை தனித்துவப்படுத்துவதிலும் பிரதிபலிக்கிறது.... More

இதனை உதாரணம் ஒன்றின் மூலம் விளக்கலாம். அதாவது ஒரு மனிதன் தன்னை ஒரு பெரிய செல்வந்தனாகவும் தயாள குணமுடையவானாகவும் வல்லாலாக காணும் வேளை அவன் தனது நண்பர்களையும் விருப்புக்குரியவர்களையும் உண்ணவும் பருகவும் அழைப்பான்.

எங்களில் காணப்படும் இந்தப் பண்புகள் அல்லாஹ்வுடன் ஒப்பிடுகையில் அவனில் காணப்படுபவற்றில் மிகவும் சாதாரணமாகும். ஆக அல்லாஹ்வுக்கே கண்ணியம் மற்றும் அழகின் பண்புகள் உரியன. அவன் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் தாராளாமாக வழங்குபவனாகவும் உள்ளான். எம்மை அவனுக்கு வனங்கி வழிபடவே படைத்துள்ளான். நாம் எப்போது அவனுக்கு தூய்மையான முறையில் வணக்கத்தை செலுத்தி அவனின் கட்டளைகளை ஏற்று அடிபணிந்து நடந்தால் அவன் நிச்சயமாக எமக்கு அன்பு காட்டுவான் எம்மை மகிழ்வித்து எமக்கான அனைத்தையும் தருவான். இந்த வகையில் மனிதனின் அழகான பண்புகள் யாவும் அவனின் பண்புகளிலிருந்து பிரிந்து வந்ததாகும்.

அல்லாஹ் எம்மைப் படைத்து, தெரிவுரிமை ஆற்றலை வழங்கினான். இதன் மூலம் அவனுக்கு கட்டுப்படுதல், வணங்குதல் போன்ற பாதையை தெரிவு செய்யலாம், அல்லது அல்லாஹ்வின் இருப்பை மறுத்து அத்துமீறுதல் மற்றும் அவனைப் புறக்கணித்து மாறுசெய்தல் எனும் பதையை தெரிவு செய்யலாம். இவ்விரு பாதைகளில் ஒன்றை தெரிவு செய்து வாழும் உரிமை எமக்கே உள்ளது.... More

மனிதர்கள் இவ்வுலக வாழ்வின் இருப்பை அவர்கள் இல்லாத நிலையில் (இங்கு வர முன்னரே) தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை படைப்பாளன் கொடுக்க விரும்பியிருந்தால் அவர்களின் இருப்புக்கான ஆரம்பம் ஒன்று இருந்திருக்க வேண்டும். மனிதன் இல்லாமையில் இருக்கும் நிலையில் அவனுக்கென்று எப்படி சுய அபிப்பிரயாம் ஒன்று இருந்திருக்க முடியும்;? இங்குள்ள பிரச்சினை இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையிலான பிரச்சினையாகும். ஒருவருக்கு வாழ்க்கையின் மீதுள்ள பற்றுதலும், அதன் மீதான பயமும் இந்த அருளை அவர் திருப்தியோடு ஏற்றிருப்பதற்கான மிகப்பெரிய சான்றாகும்.

நிச்சயமாக வாழ்வெனும் அருளானது அல்லாஹ்வை வெறுத்து புறக்கணித்து வாழும் மோசமான மனிதனிலிருந்து அல்லாஹ்வை நேசித்து வாழும் சிறந்த மனிதனை வேறுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பரீட்சையாகும். ஆகவே, இறைபடைப்பின் நோக்கம் யாதெனில் அவனை ஏற்றுக் கொண்டோருக்கு மறுமையில் சுவர்க்கத்தை வழங்குவதே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட இந்த கேள்வியானது, சந்தேகம் மனதில் ஆழமாக பதிந்து விட்டால் தர்க்கரீதியாக சிந்திப்பதை தடுத்து விடும் என்பதை அறிவிக்கிறது. இது அல்குர்ஆனின் அற்புத சான்றுகளில் ஒன்றுமாகும்.... More

மார்க்கம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். அது மனிதனை தனது படைப்பாளன் மற்றும் அவனை சூழவுள்ளவர்களுடனான தொடர்பை ஒழுங்குபடுத்துகிறது. அதுவே மறுமைக்கான ஒரே வழியாகவும் உள்ளது.

உணவு மற்றும் குடிபானத்திற்கான தேவையை விட மார்க்கத்தின் தேவை மிகவும் அவசியமாகும். அந்த வகையில் மனிதன் இயல்பிலேயே ஒரு மத(மார்க்க)வாதியாவன். எனவே அவன் சத்திய மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றவில்லையெனில் மனிதர்கள் கண்டுபிடித்த சிலைவணக்கம் சார்ந்த மதங்களில் நடந்தது போல,அவனும் புதிதாக ஒரு மார்க்கத்தை உருவாக்கிடுவான். அத்துடன் மனிதனைப் பொருத்தவரை அவனின் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்வில் எப்படி பாதுகாப்பு தேவையோ அதே போல இந்த உலகத்திலும் அவனுக்கு பாதுகாப்புத் தேவையாகும்.

சத்தியமார்க்கமே அதனை ஏற்றுக்கொண்டோருக்கு ஈருலகிலும் பூரண பாதுகாப்பை வழங்குகிறது. இதனை பின்வரும் உதாரணங்களின் மூலம் விளக்க முடியும் :

1- நாம் ஒரு பாதையில் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அப்பாதை எங்கு சென்று முடிவடைகிறது என்பதை நாம் அறியாதிருந்தால் எமக்கு முன் இரு தெரிவுகள் இருக்கும். ஒன்று பாதையில் போடப்பட்டிருக்கின்ற பதாகைகளின் அறிவுறுத்தல் பிரகாரம் செல்வது, அல்லது யூகித்து செல்ல முயற்சிப்பது. அவ்வாறு யூகித்து செல்வது சில போது இழப்பிற்கும் உயிராபத்திற்கும் வழிவகுத்துவிடலாம் என்பதே உண்மை.... More

சத்தியமார்க்கமானது இடைத்தரகர்களின் எந்த ஒரு தலையீடுமின்றி படைப்பாளனுடன் மாத்திரம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய மனிதனின் முதல்-ஆரம்ப- உள்ளுணர்வுடன் இணங்கிச் செல்வதாக இருப்பதுடன் மனிதனில் நற்பண்புகளையும் சிறந்த குண இயல்புகளையும் பிரதிபலிக்க வேண்டும்.

அது எல்லா இடத்திற்கும் காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதோடு இலகுவானதாகவும் எளிமையானதாகவும், புரிந்து கொள்ளக் கூடியதாகவும், சிக்கலற்றதாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலத்திலும் மனித தேவைகேற்ப சட்டங்களின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, எல்லா வகையான மனிதர்களுக்கும் தேசத்திற்கும், பரம்பரையினருக்குமான உறுதியான மார்க்கமாக இருக்க வேண்டும். பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளில் உள்ளதைப் போல, மனித விருப்பத்திற்கு ஏற்ப மார்க்கத்தில் ஒரு விடயத்தை அதிகரிப்பதையோ குறைப்பதையோ ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகவும் இருக்க வேண்டும்.... More

மனித இனம் அழிந்ததும் நித்திய ஜீவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் இப்பிரபஞ்ஞத்தில் எஞ்சியிருக்காது. மார்க்கத்தின் நிழலின் கீழ் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகுவது முக்கியமல்ல என்று கூறுபவர் 12 வருடமாக வகுப்பறையில் படித்துவிட்டு இறுதியில் கல்விச் சான்றிதழ் தேவையில்லை என்று கூறுபவருக்கு ஒப்பான ஒருவராகவே கருதப்படுவார்.

"(இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம் (பயனற்றதாக ஆக்கி விடுவோம்)" (ஃபுர்கான் : 23). تقدم

பூமியை வளப்படுத்தலும், நற்பண்பும் இம்மார்க்கத்தின் பிரதான இலக்கு அல்ல. யதார்தத்தில் அவை இரண்டும் சாதனமே! ஆகவே மனிதன் தனது இரட்சகனைப் பற்றியும் பின் அவனின் இருப்பு மற்றும் அவன் செல்லும் பாதை அவன் இறுதியில் சென்றடையவிருக்கும் இடம் பற்றி அறிமுகப்படுத்துவதே இம்மார்ககத்தின் நோக்கமாகும். அகிலங்களின் இரட்சகனை வணங்கி அவனின் திருப்தியை பெறுவதினூடாக மாத்திரமே நல்ல முடிவும் சிறந்த பேறும் கிடைக்கிறது. ஆகவே பூமியை வளப்படுத்துவதும் நன்னடத்தையும் இதற்கான சிறந்த வழிகளாகும். அத்துடன், இதனுடன் இணைந்ததாக அடியார்களின் செயற்பாடுகள் யாவும் அல்லாஹ்வின் திருப்தியை மைய்யபடுத்தியதாகவே இருப்பது அவசியமாகும். இதற்கு பின்வரும் உதாரணத்தை குறிப்பிடலாம்.... More

உண்மையில் பகுத்தறிவின் பங்களிப்பு என்பது நடக்கும் விவகாரகங்களில் தீர்ப்புக்கூறி அதனை உண்மைப் படுத்துவதாகும். உதாரணத்திற்கு பகுத்தறிவு மனித இருப்பின் இலக்கை அடைந்து கொள்ள இயலாமல் இருப்பது அதன் பங்களிப்பை ஒரு பொழுதும் இரத்து செய்துவிடாது. மாறாக தனக்கு புரிந்து கொள்ள இயலாதவற்றை புரிந்து கொள்ள மார்க்கத்திற்கு இதற்கான அவகாசத்தை வழங்குகிறது. மார்க்கமானது படைப்பாளன் பற்றியும் மனிதனின் அடிப்படை குறித்தும் இவ்வுலகின் அவனது இருப்பின் நோக்கம் குறித்தும் கற்றுக் கொடுக்கிறது. இதனை பகுத்தறிவானது புரிந்து தீர்ப்பளித்து அத்தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம் படைப்பாளனின் இருப்பை ஏற்றுக்கொள்வது ஒருபோதும் பகுத்தறிவைiயும் தர்க்கத்தையும் செயலிழக்கச்செய்து விடாது என்பதே யதார்த்தமாகும்.

தற்காலத்தில் அதிகமான மனிதர்கள், ஒளியானது காலத்திற்கு அப்பால் பட்ட ஒரு விடயம் என நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படைப்பாளனான இறைவன் காலம் மற்றும் இடம் ஆகிய விதிகளுக்கு உட்படாதவன் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது அல்லாஹ் எல்லாப் பொருட்களும் படைக்கபட முன் ஆரம்ப கர்த்தாவாகவும் எல்லாப் படைப்பினங்களின் இறுதியானவனாகவும் உள்ளான். அவனின் படைப்புக்கள் எதனாலும் அவனை முழுமையாக அறிந்திட முடியாது.

அத்துடன் இணைக்கப்பட்ட மூலக்கூறுகள், சிலவற்றிலிருந்து சிலது பிரிக்கப்படும் வேளை அவை தொடர்ந்தும் ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன என பலர் நம்புகிறார்கள். அதே போன்று படைப்பாளனான இறைவன் தனது அறிவால் அடியார்களுடன் -அவர்கள் எங்கு சென்றாலும்-இருக்கிறான் என்ற கருத்தை நம்புவதில்லை! ஒருவருக்கு புத்தியுள்ளது என்பதை காணாமலே ஏற்கும் பலர் இறைவனை காணாது நம்புவதை ஏற்க மறுப்பது ஆச்சரியமான விடயமாகும்.

வேற்றுக் கிரகங்கள் இருப்பதை காணாமலே ஏற்கும் பலர் சுவர்க்கம் நரகம் இருப்பதை ஏற்றுகொள்ள மறுக்கின்றனர்!. பௌதீக அறிவியலானது காணல் போன்ற அடிப்படையிலே இல்லாத ஒன்றை ஏற்று நம்புமாறு கூறுகையில் அதனை நம்பி மனிதன் ஏற்றுக்கொள்கிறான். ஆனால் மரணத்தின் போது அவர்களுக்கு இல்லை என்று நிரூபிக்க பயன்பட்ட பௌதிகவியலோ (உயிரியல்), இராசயனவியலோ (வேதியல்) மனிதனுக்கு ஒரு போதும் பயனளிக்கமாட்டாது.... More

உண்மை என்னவென்றால், சன்மார்க்கம் -மதம்- ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும். அது மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது, மேலும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயத்திலும் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளும் படி விசுவாசியை தூண்டுகிறது. விசுவாசி தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் அண்டை வீட்டாருக்கும், பாதையில் செல்லும் வழிப்போக்கனுக்கும் கூட பொறுப்பானவனாவான். அவன் தான் விரும்பும் விடயங்களை அடைந்து கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் கடவுளின் மீது அக்காரியங்களை ஒப்படைக்கிறான், இவ்வாறான செயற்பாடு அபினுக்கு அடிமையானோரின் குணாதிசயங்களில் ஒன்று என்று நான் நினைக்கவில்லை. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.). அபின் என்பது ஹெராயின் தயாரிக்கப் பயன்படும் கசகசா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு போதைப் பொருளாகும்.

மக்களின் உண்மையான அபின் போதை மத நம்பிக்கையல்ல, மாறாக நாத்திகவாதமாகும். நாத்திகம் தன்னைப் பின்பற்றுபவர்களை சடவாதத்திற்கு அழைக்கிறது. மதத்தை நிராகரிப்பதன் மூலமும், பொறுப்புகளையும் கடமைகளையும் கைவிட்டு, அதன் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வாழும் தருணத்தை அனுபவிக்கும்படி அவர்களைத் தூண்டுவதன் மூலமும் இறைத்தண்டனையைப் பொருட்படுத்தாது படைப்பாளனுடனான அவர்களின் உறவை புறந்தள்ளுகிறது. உலகத் தண்டனையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நிலை இருக்கையில் தன்னை கண்காணிக்கவும் விசாரிக்கவும் எவரும் கிடையாது, மற்றும் மரணத்தின் பின் உயிர்த்தெழுதல் மறுமை விசாரணை ஆகியன இல்லை என்ற நம்பிக்கையில் அவர்கள் விரும்பியதை செய்வரார்கள். அது உண்மையில் அபினுக்கு அடிமையானோரின் பண்புகளில் உள்ளவையல்லவா?

ஏனைய மதங்களிலிருந்து உண்மை மார்க்கத்தை பின்வரும் மூன்று விடயங்களினூடாக வேறுபடுத்தி அறிந்திட முடியும் : تقدم

இந்த மார்க்கத்தின் படைப்பாளனின் பண்புகள் அல்லது கடவுளின் பண்புகள்.

இறைத்தூதர் அல்லது தீர்க்கதரிசியின் பண்புகள்.... More

சீரிய இயல்பு –உள்ளுணர்வு அல்லது சீரான பகுத்தறிவு என்ற ஒரு விடயம் உண்டு. சீரிய இயல்புக்கும் தர்க்த்திற்கும் சரியான பகுத்தறிவிற்கும் இணங்கியதாக அமையும் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே! சிக்கல் நிறைந்தவை அனைத்தும் மனிதனிடமிருந்து வந்தவை என்பதை புரிய வேண்டும்.

இதனைப் பின்வருமாறு விளக்கலாம் :

ஒரு முஸ்லிம்; அல்லது கிறிஸ்தவ அல்லது இந்து மத அல்லது ஏதாவது மதத்தின் அறிஞர் வந்து இந்தப்பிரபஞ்சத்திற்கு ஏகனான ஒரே படைப்பாளன் உள்ளான் என்றும், அவனுக்கு நிகராகனவர் எவரும் கிடையாது எனவும், அவனுக்கு சந்ததி எவரும் கிடையாது எனவும், அவன் இப்பூமிக்கு மனித வடிவில்; அல்லது மிருக வடிவில் அல்லது கல்லின் வடிவில் அல்லது சிலை வடிவில் வரமாட்டான், ஆதலால் அவனை மாத்திரமே வணங்கி வழிபடுவதுடன்; பேரிடர்களின் போது அவனிடமே புகழிடம் தேட வேண்டும் என்று கூறினால் உண்மையில் அதுவே அல்லாஹ்வின் மார்க்கமாகும். ஆனால் முஸ்லிம்; அல்லது கிறிஸ்தவ அல்லது இந்து மத அறிஞர் ஒருவர் அல்லாஹ் (கடவுள்) மனிதர்களுகளுக்கு தெரிந்த எந்த ஒரு தோற்றத்திலும்-வடிவத்திலும்-தோன்ற முடியும், அவ்வாறான கடவுளை ஏற்று அவனை வணங்குவதும் அவனிடம் ஒரு நபரினூடாகவோ அல்லது தீர்கதரிசியினூடகவோ அல்லது ஒரு மத குருவினூடாகவோ அல்லது புனிதரினூடாகவோ புகழிடம் தேடிச் செல்வதும் அவசியம் என்று ஒரு கருத்தை முன்வைத்தால் இது மனித சிந்தனையிலிருந்து உதித்த ஒரு வகையான புதிராக காணப்படுகிறது.... More

இஸ்லாத்தின் போதனைகள் யாவும் நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவையாகவும், அவை வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் அவைகள் யாவும் அல்லாஹ் மனிதனை எந்த இயல்பூக்கத்துடன் படைத்தானோ அதனுடன் இணைந்து செல்வதாகவும் காணப்படுகிறது. இதனடிப்படையில்; இம்மார்க்கம் மனித உள்ளுணர்வுடன் இணைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அவை பின்வருமாறு :

கடவுள் ஒருவன் அவன் தனித்தவன் என்றும் அவனே சிருஷ்டி கர்த்தா அவனுக்கு நிகராக எவரும் இல்லையென்றும் அவனுக்கு எந்தச் சந்ததியும் கிடையாது என்றும், அவன் ஒருபோதும் மனிதனின், அல்லது மிருகத்தின் சிலையின் அல்லது கல்லின் தோற்றத்தில்-வடிவில்- அவதரிக்கமாட்டான் என்றும் முக்கடவுள் தத்துவத்தைத் சார்ந்தவனல்ல என்றும் உறுதியாக நம்புதல். எந்த இடைத்தரகருமின்றி இந்தப் படைப்பாளனை நேரடியாக வணங்குதல். அவன் இப்பிரபஞ்சத்தினதும் அதில் உள்ளவற்றினதும் படைப்பாளன், அவனைப்போன்ற எதுவும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது. தனது குற்றத்திற்கு மன்னிப்புக்கோரும் போதும் அல்லது உதவி கோரும்போதும் அவனை நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் அவனை மாத்திரம் வணங்குவது மனிதனின் மீதுள்ள கடமையாகும். இந்த விவகாரத்தில் ஒரு மதப்போதகரையோ அல்லது ஒரு மகானையோ அல்லது இடைத்தரகர்களையோ நாடிச்செல்வது கூடாது. அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் ஒரு தாய் தனது பிள்ளைகளுடன் அன்பு பாராட்டுவதை விட தனது படைப்பினங்களுடன் அதிக கருணையுள்ளவனாக உள்ளான். எனவே அவன் தன்னிடம் பாவமீட்சி கோரி வருவோரை மன்னித்து கருணைகாட்டுகிறான். சிருஷ்டிகர்த்தாவை மாத்திரம் வணங்குவது அவனுக்கு வழங்க வேண்டிய உரிமைகளில் ஒன்றாகும. மனிதனைப் பொருத்தவரை தனது இரட்சகனுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது அவனுக்குரிய கடமையாகும்.

இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடானது ஆதரங்களினால் நிரூபிக்கப்பட்ட தெளிவான இலகுவான ஒரு மார்க்கமாகும். அதில் கண் மூடித்தனாமான நம்பிக்கைகள் எதுவும் கிடையாது இஸ்லாம் இதயத்துடனும், உணர்வுடனும் மாத்திரம் உறவாடி அவை இரண்டு மாத்திரம் நம்பிக்கைக்கான அடிப்படையாக இருக்க வேண்டும் எனக் கருதவில்லை. மாறாக, அது தனது கொள்கைகளை முன்வைப்பதில் உறுதியானதும் மறுக்க முடியாதுதமான, மிகத் தெளிவான ஆதரங்களை அடிப்படையாகக் கொண்டும், பகுத்தறிவு புரிந்து ஏற்றுக்கொள்ளத்தக்க சரியான காரணங்களினூடகவும் தனது கோட்பாடுகளை முன்வைப்பதில் பல அடிப்படைகளைப் பின்பற்றுகிறது :... More

ஈமானின் அடிப்படைகள் பின்வருமாறு :

அல்லாஹ்வை நம்புதல்: அல்லாஹ் ஒருவனே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தினதும் இரட்சகனாகவும், சொந்தக்காரனாகவும் உள்ளான் என்றும், அவன் ஒருவன் மாத்திரமே படைப்பாளன் என்றும், அவன் மாத்திரமே வணக்கத்திற்கும், பணிந்து கட்டுப்படவும் மிகத்தகுதியானவன் என்றும் அவன் எவ்விதக் குறைகளுமற்ற நிறைவான பண்புகளைப் பெற்றவன் என்றும் ஆழமாக நம்பி அதன் அடிப்படையில் செயல்படுவதைக்குறிக்கும். (ஆதார நூல் : ஸியாஜுல் அகீதா- அல்ஈமானு பில்லாஹ்- ஆசிரியர் அப்துல் அஸீஸ் அர்ராஜிஹி பக்கம் (9)). تقدم

மலக்குகளை நம்புதல் : அதாவது அவர்களின் இருப்பையும், அவர்கள் ஒளியால் படைக்கப்பட்ட ஒரு படைப்பினம் என்றும் நம்புதல். அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதுடன் அவனுக்கு ஒரு போதும் மாறு செய்ய மாட்டாரக்கள். அவ்வளவு அற்புதமான ஒரு படைப்பே இவர்கள்.... More

மனித இனத்திற்காக அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் எவ்வித வேறுபாடுமின்றி நம்புவது ஒரு முஸ்லிமின் இறைவிசுவாசத்தில் காணப்பட வேண்டிய முக்கிய அடிப்படையாகும். இவ்வாறு அவன் நம்பவில்லையென்றால் அவனின் ஈமான் எனும் இறைவிசுவாசம் சரியானதாக அமையமாட்டாது. தெளிவாகக் குறிப்பிடுவதாயின் அவன் ஒரு முஸ்லிமே அல்ல என்பதுவே இதன் கருத்தாகும். எந்த ஒரு தூதரையோ அல்லது தீர்க்கதரிசியையோ மறுப்பது மார்க்கத்தின் அடிப்படைகளுடன் மோதுகின்ற விடயமாகும். காரணம் அனைத்து நபிமார்களும் -தீர்க்கதரிசிகளும்-இறுதித்தூதரான முஹம்மத் அலைஹிஸ்ஸாம் அவர்களின் வருகையை குறித்து முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் அதிகமான நபிமார்களையும், ரஸூல்மார்களையும் அல்லாஹ் பல்வேறுபட்ட சமூகங்களுக்கு அனுப்பியுள்ளான், இவர்களின் பெயர்கள் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு (நூஹ் இப்ராஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் யஃகூப், யூஸுப், மூஸா, தாவூத், ஸுலைமான், ஈஸா போன்றோர் அவர்களுள் சிலராவர்) மேலும் பல நபிமார்கள் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள ராமர், கிரிஷ்னர், கௌதம புத்தர் போன்ற மதப் பிரதானிகள் யாவரும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளாக இருப்பதற்கு சாத்தியம் இருந்தாலும், அல்குர்ஆனில் அதற்கான எந்த சான்றும் கிடையாது என்பதனால் ஒரு முஸ்லிம் அவர்களை தீர்க்கதரிசி என நம்பமாட்டான். மக்கள் எப்போது அல்லாஹ்வை விட்டுவிட்டு தமக்கு வழிகாட்டியாய் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை வணங்க தலைப்பட்டதோ அப்போதிருந்தே மதங்களுக்கு மத்தியில் வித்தியாசங்களும், வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்து விட்டன.

"நபியே உமக்கு முன்னர் நாம் பல தூதர்களை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலர் பற்றி உமக்கு கூறியுள்ளோம். இன்னும் அவர்களில் சிலர் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தூதரும் எந்த ஓர் அத்தாட்சியையும் கொண்டுவர முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் (மறுமை நிகழ்ந்துவிட்டால்) நீதியைக் கொண்டு தீர்ப்பளிக்கப்படும். அங்கே வீணர்கள் நஷ்டமடைவார்கள்".(ஃகாபிர் :78). تقدم

''இத்தூதரும் தமது இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளனர். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர் (அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும், நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறு பாடுகாட்டமாட்டோம். நாம் செவியேற்றோம் கட்டுப்பட்டோம்.எங்கள் இரசட்சகனே ! உனது மன்னிப்பைக் கோருகின்றோம் உன்னிடமே மீழுதல் உள்ளது என்று அவர்கள் கூறினார்கள்". (அல் பகரா : 285). تقدم... More

மலக்குகள் என்போர் அல்லாஹ்வின் மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பு. அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், நன்மையான காரியங்களில் ஈடுபடுவதற்கென கட்டமைக்கப்பட்வர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள். அல்லாஹ்வை துதிசெய்து கொண்டும் வணங்கிக் கொண்டும் இருப்போர். அவர்கள் சோர்வடையோ, களைப்புரவோ மாட்டார்கள்.

“அவர்கள் சோர்வடையாது இரவு பகலாக (அவனைத்) துதித்துக் கொண்டிருப்பார்கள்“(அன்பியா :20). تقدم

''அல்லாஹ் அவர்களுக்கு செய்யுமாறு கட்டளையிட்டவற்றில் அவனுக்கு மாறு செய்யாது, அவர்களுக்கு அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பார்கள்''.(அத்தஹ்ரீம் : 6). تقدم... More

அகிலத்தின் புறவய நிகழ்வுகள், ஆதாரங்கள் யாவும் வாழ்க்கையில் எப்போதும் மீள் கட்டமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான உதாரணங்கள் அதிகமாகும். அவற்றுள் வரண்ட பூமியை மழையால் உயிர்ப்பித்தல் என்பது ஒரு உதாரணமாகும்.

''அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான். பூமி வரண்டு போன பின் அதனை உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்''. (அர்ரூம் :19). تقدم

மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு எழுப்பப்படுதல் சாத்தியம் என்பதற்கு இன்னொரு உதாரணம், எவ்விதக் கோளாறுமில்லாது நேர்த்தியாகவும் ஓழுங்குமுறைப்படியும் இயங்கும் இப்பிரபஞ்சத்தைக் குறிப்பிட முடியும். ஒரு அணுவில் காணப்படுகின்ற மிகச்சிறிய எலக்ட்ரான் கூட ஒரு சுற்றுப்பாதையில் இருந்து மற்றொரு சுற்றுப்பாதைக்கு அதன் இயக்கத்திற்கு சமமான ஆற்றளை பெற்றாலே தவிர சிறிதும் நகர முடியாது. அனுவில் அடங்கியிருக்கும் மிகவும் நுன்னிய இப்பொருளுக்கே இந்நிலையென்றால் கொலைகாரன் அல்லது அநியாயக்காரன் அகிலங்களின் இரட்சகனிடமிருந்து எந்த விசாரணையோ அல்லது தண்டனையோ இன்றி தப்பி ஓடுவதை கற்பனை செய்ய முடியுமா?... More

அல்லாஹ் முதலில் எவ்வாறு அவர்களை உயிர்கொடுத்து படைத்தானோ அவ்வாறே மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான் :

''மனிதர்களே! (மரணித்த பின்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு கருவரைச்சுவரில் ஒட்டிக்கொள்ளக் கூடியதிலிருந்தும் பின்னர் வடிவமைக்கப் பட்டதும் வடிவமைக்கப்படாததுமான சதைப் பின்டத்திலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தரிபடுத்துகிறோம். பின்பு உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். அறிந்த பின் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள், அதன் மீது நாம் (மழை) நீரைப் பொழியச்செய்தால் அது அதிர்வுற்று வளமாகி அழகான பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது". (ஹஜ் : 05). تقدم... More

அடியார்களுக்கு ஒரே நேரத்தில் உணவளிப்பது போல் அவர்களை மறுமையில் ஒரே நேரத்தில் விசாரிப்பான்.

"மனிதர்களே! (ஆரம்பத்தில்) உங்களை படைப்பதும், (மரணித்த பின்) உங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனுக்கு, உங்களில் ஒருவரை (ஆரம்பத்தில்) படை(த்து உயிர் கொடு)ப்பது போலவே தவிர வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் உற்று நோக்குபவனும் ஆவான்". (லுக்மான் : 28). تقدم

இந்த பிரபஞ்சம் முழுதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஆளுகையின் கீழ் உள்ளது. ஆகவே அவன் மாத்திரமே தனது விருப்பத்திற்கு அமைவாக அனைத்தையும் அடிபணியவைக்கக்க கூடிய முழுமையான அறிவையும், ஆற்றளையும், திறனையும் பெற்றுள்ளான். சூரியன், கோள்கள் மற்றும் (விண்மீன் திரள்கள்) பால்வெளிமண்டளங்கள் ஆகியவை படைப்பின் துவக்கம் முதல் மிகத்துல்லியத்துடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த நுணுக்கமும் திறனும் மனிதர்களின் உருவாக்கத்திற்குப் பொருந்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மனித உடல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பானது, மனித உடலிலிருந்து வெளியேறிய ஆன்மாக்களை –உயிர்களை- விலங்குகளின் உடலில் குடிகொள்ளச் செய்ய முடியாது என்பதையும், தாவரங்கள் மற்றும் பூச்சிகள் அல்லது மனிதர்களிடையே கூட ஊடாடல் செய்ய முடியாது என்பதையும் காட்டுகிறது. மேலும் அல்லாஹ் மனிதனை பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் தனித்துவப்படுத்தி, அவனை பூமியில் ஒரு கலீஃபாவாக -பிரதிநிதியாக- ஆக்கி ஏனைய பல உயிரனங்களை விட அவனை சிறப்பாக்கி கண்ணியப்படுத்தி அவனது அந்தஸ்தை உயர்த்தியுள்ளான். படைப்பாளனான அல்லாஹ் மரணத்தின் பின் மீண்டும் உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் மறுமை நாளை ஏற்படுத்தி உயிரினங்கள் அனைத்தையும் அவன் விசாரித்து தீர்ப்பளிப்பதும், அதன்படி அவர்களின் தலைவிதி சொர்க்கம் அல்லது நரகம் என்பதை தீர்மானிப்பதும், அனைத்து நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அந்நாளில் மதிப்பிடப்படுவதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஞானத்திற்கும் அவனின் நீதிக்குமான சான்றாக அமைந்துள்ளது.

''ஆகவே எவர் ஒரு அணுவளவேனும் நன்மை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார். எவர் ஒரு அணுவளவேனும் தீமை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார்''. (அல்ஸல்ஸலா :7-8). تقدم

உதாரணமாக, ஒரு நபர் கடையில் ஏதாவது வாங்க விரும்பினால், அந்தப் பொருளை வாங்குவதற்கு தனது மூத்த மகனை அனுப்ப முடிவு செய்வார், காரணம் அவரின் அந்த மகன் புத்திசாலி என்றும் அவர் உடனே சென்று தந்தை விரும்புவதை வாங்குவார் என்றும் அவருக்கு முன்பே தெரியும். ஆனால்அவரின் அடுத்த மகனைப் பொருத்தவரை தனது நண்பர்களுடன் விளையாடுவதில் ஈடுபட்டு பணத்தை தொலைத்து விடுவார் என்பதனால் அவரிடம் இப்பொறுப்தை ஒப்படைக்க விரும்பமாட்டார். இது உண்மையில் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தந்தை தனது தீர்ப்பை கட்டமைத்துள்ளார் என்பது புரிகிறது.

ஆகவே விதிகள் பற்றிய பூரணமாக அறிந்திருப்பது ஒரு போதும் எமது தெரிவிற்கு முரணாக அமைவதில்லை. காரணம் எமது தெரிவுகள் மற்றும் விருப்புகள் பற்றிய அவனின் முழுமையான அறிவிற்கேட்ப எமது செயல்களை அல்லாஹ் அறிந்துள்ளான் என்பதே இதன் கருத்தாகும். அத்துடன் மனித இயல்பை அறிவதில் அவனை விஞ்சிட யாரும் கிடையாது. அவனே எம்மைப் படைத்தவன், எம் இதயத்தில் நாம் விரும்பும் நன்மையான மற்றும் தீமையான விடயங்களை அவன் அறிந்திருப்பதோடு, நம் செயல்களையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றான். இவ்வாவறு அவன் நம்மைப் பற்றி அறிந்தவற்றை அவனிடம் பதிவு செய்து வைத்திருப்பது நம் விருப்பத்திற்கு முரணாக மாற மாட்டாது. காரணம் அல்லாஹ்வுக்கே –கடவுளுக்கே- முழுமையான அறிவு இருக்கிறது என்பதையும், மனித அறிவு குறை நிறைந்தவை அவனின் எதிர்பார்ப்புகள் சரியானதாகவோ அல்லது தவறனதாகவோ அமைய முடியும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் .

ஒரு மனிதன் அல்லாஹ் விரும்பாத வகையில் செயற்படுவது சாத்தியமான விடயம். ஆனால் அவனின் செயற்பாடானது ஒரு போதும் இறை நாட்டத்திற்கு எதிரானதாக அமையாது. ஏனெனில் அல்லாஹ் அவனுக்கு தெரிவு செய்வதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளான். அவனின் அந்தச் செயற்பாடானது அவனுக்கு பாவமானதாக இருந்தாலும் அவன் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு உட்பட்டவனாகவே உள்ளான். இதற்கு முரணாக அவனால் இருக்க முடியாது ஏனெனின் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறிச் செல்லும் அதிகாரத்தை அவனுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.... More

உண்மையில் உலக வாழ்வின் அடிப்படை இலக்கு தற்செயலாக உணர்வு பிரவாகிக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பது அல்ல. மாறாக அல்லாஹ்வை –கடவுளை- அறிந்து அவனுக்கு வழிப்படுவதன் ஊடாக அடைந்து கொள்ளும் ஆழமான அக நிம்மதியை எய்துகொள்வதாகும்.

இந்த இறை இலக்கை எய்து கொள்வதே –நித்திய சுகத்தையும் யதார்த்தமான நிரந்த மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ள காரணமாக அமையும். ஆக, இதுவே எங்களது அடிப்படை குறிக்கோளாக இருந்தால் இந்த இலக்கை அடைந்து கொள்வதில் ஏற்படும் எந்தக் கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகள் இருப்பினும் அவற்றை எதிர்கொள்வது அற்பமாகிவிடும்.

வாழ்வில் எந்தத் துன்பத்தையோ கஷ்டத்தையோ எதிர்கொள்ளாத ஒரு மனிதனின் ஆடம்பரமான வாழ்வு குறித்து சிந்திப்போமானால் இவ்வாறான ஒரு மனிதன் தனது ஆடம்பர வாழ்வின் காரணமாக அல்லாஹ்வை மறந்து அவன் படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்தவனாவான். இவ்வாறான ஒரு மனிதனை, கஷ்டம் மற்றும் துன்பம் நிறைந்த அனுபவங்கள் அல்லாஹ்வின்பால் இட்டுச்சென்று தனது வாழ்வின் இலக்கை உண்மையில் அடைந்து கொண்ட ஒரு மனிதனோடு ஒப்பிட்டுப்பாருங்கள். இருவரும் சமமாவார்களா? இஸ்லாமிய போதனைகளின் கண்ணோட்டத்தில் துன்பங்களை அனுபவித்து அல்லாஹ்வின் பால் சென்ற மனிதன், எவ்விதக் கஷ்டத்தையும் அனுபவிக்காது இவ்வுலகின் சுகபோகங்களில் திழைத்து, சுகபோகமான வாழ்வு அல்லாஹ்வை விட்டும் தூரப்படுத்தி இருந்தவனை விட சிறந்தவனாவான்.... More

பரீட்சையானது புதிய கல்வி வாழ்வை எதிர்கொள்வதற்காக, மாணவர்களின் தராதரத்தை மதிப்பிட்டு வேறுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். பரீட்சை குறுகியதாக இருந்தாலும், புது வாழ்வை எதிர் நோக்கியிருக்கும் மாணவரின் தலைவிதியை அது தீர்மானிக்கிறது. அதேபோன்று தான் மறுமை வாழ்வை முனனோக்கிச் செல்வோரின் தராதரத்தை வேறுபடுத்துவதற்காக இவ்வுலக வாழ்வு மனிதர்களுக்கான தேர்வாகவும் சோதனை களமாகவும் இருக்கிறது. உண்மையில் மனிதன் அவன் திரட்டிவைத்த பொருட்களுடன் இவ்வுலகைவிட்டு பிரிந்து செல்லாது தான் செய்த நல்வினைகளுடனும் செயற்பாடுகளுடனுமே பிரிந்து செல்கிறான். ஆகவே மறுமை வாழ்வையும், அங்கு கிடைக்கவிருக்கும் வெகுமதியையும் நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதை மனிதன் புரிந்துகொள்வது அவசியமாகும்.

அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனின் விதியை ஏற்றுக்கொள்வதன் மூலமே மனிதனுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.

எல்லா விடயங்களும் அடிப்படையில் அர்த்தமற்றவை என்றும். அத்துடன் ஒரு நிறைவான வாழ்வை அடைந்து கொள்வதற்கு தமக்கென ஒரு கருத்தை சிருஷ்டித்துக்கொள்வதற்கான சுதந்திரம் இருப்பதாகவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வுலகில் எமது இருப்புக்கான நோக்கத்தை மறுப்பது உண்மையில் தன்னையே ஏமாற்றிக்கொள்வதற்கு நிகரான விடயமாகும். அதாவது இவ்வுலக வாழ்வில் எமக்கு ஒரு இலக்கு உண்டு என நாம் போலியாக எமக்குள்ளே கூறிக்கொள்வதை ஒத்ததாகும். எமது இந்நிலையானது குழந்தைகள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் போது வைத்தியர்கள், செவிலியர்கள், தாய் தந்தையர்கள் என நடிப்பதை போன்றதாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். வாழ்வில் எமது இலக்கை தெரிந்து கொள்ளாது விடின் மகிழ்ச்சியை ஒரு போதும் அடைந்து கொள்ளவே முடியாது என்பதே யதார்த்தமாகும்.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் தனது விருப்பத்திற்கு மாறாக மிகவும் ஒரு ஆடம்பரமான தொடரூந்தில் முதல் தர வகுப்பில் ஏற்றப்பட்டிருப்பதை காண்கிறார். இது ஒரு மிக உயர்ந்த அனுபவமாகவும் ஆடம்பரத்தின் உச்சமாகவும் அவரைப் பொருத்தவரை இருக்கலாம். என்றாலும் நான் எப்படி இந்த தொடரூந்தில் ஏறினேன்? இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன? இது எங்கு செல்கிறது? போன்ற அவரின் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடை காணாது அவரின் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்குமா? மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான எந்தப்பதிலும் கிடைக்கவில்லையாயின் அவரால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அவர் தனது வசம் உள்ள அனைத்து ஆடம்பரங்களையும் அனுபவிக்கத் தொடங்கினாலும், அவர் ஒருபோதும் உண்மையான, அர்த்தமுள்ள மகிழ்ச்சியை அடைய மாட்டார். இந்தக் கேள்விகளை அவர் மறக்கச் செய்ய இந்தப் பயணத்தின் சுவையான உணவு மாத்திரம் போதுமா? இந்த வகையான மகிழ்ச்சி தற்காலிகமானதும் போலியானதுமாகும். இந்த முக்கிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவதை வேண்டுமென்றே பொருட்படுத்தாது இருப்பதன் மூலம் மட்டுமே அதனை பெற்றுக்கொள்ள முடியும். இது குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்படும் தற்காலிக போலி பரவச நிலையைப் ஒத்தது. அது குடிப்பழக்கத்திற்கு உட்பட்ட அந்நபரை அழிவுக்கே இட்டுச் செல்லும். அத்துடன் மனித இருப்பின் இன்றிமையா கேள்விகளான இவைகளுக்கு விடை காணாத வரையில் யதார்த்தமான உண்மையான மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதே ஒரு பேருண்மையாகும்.... More

ஆம், இஸ்லாம் அனைவருக்கும் சாத்தியமானது. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உண்மை மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த நிலையில் எவ்வித இடைத்தரகருமின்றி முஸ்லிமாகவே பிறக்கின்றனர். அந்தக் குழந்தையானது தனது குடும்பம், அல்லது பாடசாலை அல்லது எந்த மத அமைப்புக்களினதும் தலையீடுகளுமின்றி பருவ வயதை அடையும் வரையில் நேரடியாக அல்லாஹ்வையே வணங்கிக் கொண்டிருக்கிறது. அவன் பருவவயதை அடைந்ததும் தனது செயல்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவனாகவும் அது குறித்து விசாரணைக்குட்படக்கூடியவனாகவும் மாறிவிடுகிறான். அந்தக் குழந்தை பருவவயதை அடைந்தபின் ஈஸாவை தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவன் கிறிஸ்தவனாகவும், புத்தரை மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் பௌத்தனாகவும், கிரிஷ்னனை தனது மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு இந்துவாகவும் மாறிவிடுகிறான். அல்லது முஹம்மதை மத்தியஸ்தராக ஏற்று இஸ்லாத்திலிருந்து முற்றிலும் விலகி நடப்பதற்கோ, அல்லது அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி இயற்கை மார்க்கத்தில் நிலைத்திருக்க்கூடியவானகவோ மாறிவிடுகிறான். முஹம்மத் நபியவர்கள் தனது இரட்சகனிடமிருந்து கொண்டுவந்த இறைத்தூதைப் பின்பற்றுவர் சீரிய இயல்புணர்வுக்கு ஒத்துப்போகும் உண்மை மார்க்கத்தையே பின்பற்றுகிறார். இது தவிர அனைத்துக் கொள்கைகளும் வழிகேடும் நெறிபிறழ்வுமாகும். உதாரணத்திற்கு மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் முஹம்மதை மத்தியஸ்தராக எடுத்துக்கொண்டாலும் சரியே!

"எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலே பிறக்கின்றன. அந்தக் குழந்தையின் பெற்றோரே அக்குழந்தையை யூதனாகவோ அல்லது கிறிஸ்துவனாகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுகின்றனர்". (ஆதாரம் : முஸ்லிம் (1218)). تقدم

படைப்பாளனான அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண்மை மார்க்கம் ஒன்றே தவிர வேறொன்றும் இல்லை. அந்த சத்திய மார்க்கமானது ஏகனும் தனித்தவனுமான படைப்பாளனை விசுவாசித்து அவனை மாத்திரமே வணங்குவதுமாகும். இவை தவிரவுள்ள அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டவைகளாகும். உதாரணத்திற்கு நாம் இந்தியாவுக்கு சென்று அங்கிருக்கும் மக்கள் மத்தியில் இறைவன் ஒருவனாவான் என்று கூறினால் அவர்கள் அனைவரும் ஆம் கடவுள் ஓன்றே என்று ஒரே குரலில் விடையளிப்பார்கள். உண்மையில் இதுவே அவர்களின் வேதங்களில் எழுதிவைக்கப்பட்ட விடயமாகும். என்றாலும் அவர்கள் அனைவரும் வேதம் கூறும் கடவுட் கொள்கைக்கு முரண்பட்டு இருப்பதுடன் இதில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். மேலும் இறைவன் பூமிக்கு எந்த வடிவத்தில் அல்லது தோற்றித்தில் வருகிறான் என்ற ஒரு அடிப்படை புள்ளியில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் முரண்பட்டு நிற்கின்றனர். உதாரணமாக, இந்திய கிறிஸ்தவர் கடவுள் குறித்து இவ்வாறு கூறுவார்: கடவுள் ஒருவனே, ஆனால் அவர் மூன்று நபர்களில் (பிதா,மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்) பிரதிபலிக்கிறார் எனத் திரித்துவக் கொள்கையை குறிப்பிடுவார். இந்து மதத்தவராயின் அவர் கடவுளானவர் விலங்கு, அல்லது மனிதன் அல்லது சிலை வடிவத்தில் வருகிறார் எனக் கூறுவார். இந்து மதத்தில் : (சாந்தோக்கிய உபநிடதம் 6:1-2) 'கடவுள் ஒருவன் மட்டுமே இரண்டாவது ஒருவன் கிடையாது'( வேதம் : சுவேதா சுவேத்தரா உபநிடதத்தில் (4: 19 ,4:20, 9:6) ' கடவுளுக்கு பெற்றோரோ தலைவரோ கிடையாது' 'அவனை காணவும் முடியாது. மேலும் கண்ணால் அவனை பார்க்கவும் முடியாது'அவனுக்கு ஒப்பாக எவரும் கிடையாது (யஜுர் வேதம் 9:40) 'ஐம்பூதங்களை (காற்று,நீர்,நெருப்பு போன்றவை) வணங்குவர்கள் இருளில் நுழைந்து இருளில் மூழ்கிப்போனோராவர். இவர்கள் மனிதனால் படைக்கப்பட்டவற்றையே (சிலை மற்றும் கற்கள் போன்ற கையினால் செய்யப்பட்டவற்றை) வணங்குகின்றனர். கிறிஸ்தவத்தில் : (மத்தேயு 4:10) 'அப்பொழுது இயேசு அவனை நோக்கி: போ, சாத்தானே, ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள், அவனை மட்டுமே சேவிப்பாயாக என்று எழுதப்பட்டுள்ளது' (யாத்திராகமம் 20:3) -5).என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன். 'என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்க வேண்டாம், நீங்கள் செதுக்கப்பட்ட ஒரு உருவத்தையோ, மேலே வானத்தில் உள்ளதையோ, கீழே பூமியில் உள்ளதையோ, பூமிக்குக் கீழே உள்ள தண்ணீரில் உள்ளதையோ நீங்கள் உருவாக்க வேண்டாம். அவர்களுக்கு பணிவிடை செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ரோஷமிக்கவர் என்னைப் பகைக்கும் தந்தையர்களின் பாவங்களை மூன்றாம் நானகாம் தலைமுறையிலும் விசாரிக்கிறோன்.

மதப்பிரிவுகளுக்கு மத்தியில் அல்லது மதங்களுக்குள்ளே காணப்படுகின்ற அனைத்து வித்தியாசங்களும் வேறுபாடுகளும் பிரச்சினைகளுக்குமான அடிப்படை காரணம், மனிதர்கள் தங்களுக்கும் இறைவனுக்கும் மத்தியில் மத்தியஸ்தர்களை எடுத்துக் கொண்டமையே, என்பதை மனிதன் மிக ஆழமாக சிந்தித்தால் உணர்ந்து கொள்வான். உதாரணத்திற்கு கத்தோலிக்க மற்றும் புரடஸ்தான்த் பிரிவினரும் இந்து மதப் பிரிவினரும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும் முறையில் வித்தியாசப்படுகின்றனர். படைப்பாளன் ஒருவன் உள்ளான் என்பதிலல்ல. இவர்கள் அனைவரும் நேரடியாக இறைவனை –அல்லாஹ்வை- வணங்கினால் அவர்கள் அனைவரும் அவனை ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்களாகி விடுவர். இறைவனின் இலட்சணங்கள் குறித்து இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கு உதராணமொன்றை குறிப்பிடலாம். அதாவது நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் படைப்பாளனான ஒரே கடவுளை யார் வணங்கினாரோ அவர் புனித இஸ்லாம் மார்க்கத்தில் இருந்தார் அதுவே உண்மை மார்க்கமாகும்.என்றாலும் யார் ஒரு மதப்போதகரை அல்லது புண்ணியவானை தனக்கும் படைப்பாளனுக்குமிடையில் எடுத்துக் கொண்டாரோ அவர் அசத்திய மார்க்கத்தில் உள்ளார் என்பதாகும். எனவே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியோரும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும். அதாவது அவர்கள் அல்லாஹவைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் வேறு யாரும் கிடையாது என்றும் இப்ராஹீம் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர்கள் சான்றுபக்ர்ந்து ஏற்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபி இப்ராஹீம் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்துவதற்காக அனுப்பினான். இந்த வகையில் நபி இப்ராஹீமை பின்பற்றியோர் இந்த புதிய நபியை ஏற்றுக் கொள்ளவது அவசியமாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக் கூடிய இறைவன் வேறு யாரும் கிடையாது என்றும் மூஸா மற்றும் இப்ராஹீம் அல்லாஹ்வின் தூதர்கள் என்றும் அவர்கள் சான்று பக்ர்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். எடுத்துக்காட்டிட்காக இந்த நேரத்தில் யார் காளை மாட்டை வணங்கக்கூடியவர்களாக இருந்தார்களோ அவர்கள் பிழையான அசத்ததிய மார்க்கத்தில் இருந்தார்கள் என்பது இதன் கருத்தாகும்.... More

இஸ்லாமிய மார்க்கம் அழைப்பு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு (சகிப்புத்தன்மை) அழகிய முறையில் தர்க்கம் செய்தல் பேன்ற விடயங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

"(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்". (அந்நஹ்ல் :125). تقدم

புனித குர்ஆன் இறுதி வேதமாகவும், தீர்க்கதரிசிகளில் முஹம்மது இறுதி தீர்க்கதரிசியாகவும் இருப்பதால் இஸ்லாமிய மார்க்க சட்டத்துரையானது மார்க்க அடிப்படைகள் மற்றும் கொள்கைகள் குறித்து உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான வழியை அனைவருக்கும் திறந்து கொடுத்துள்ளது. இந்த வகையில் 'மார்க்கத்தில் எந்தவொரு நிர்ப்பந்தமும் கிடையாது' என்ற கோட்பாடானது இஸ்லாமிய மார்க்த்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அரசு தங்களுக்கு பாதுகாப்பளித்து தங்களின் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வதற்கான உரிமையை வழங்கியமைக்கு பதிலாக அந்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி பிறரின் கௌரவத்தை மதிக்கும் நிலை இருக்கும் பட்சத்தில் சீரிய இஸ்லாத்தின் இயற்கை இறையியல் கோட்பாட்டை ஏற்க வேண்டும் என்று எவரையும் அது நிர்ப்பந்திக்காது.... More

அறிவொளி பற்றிய இஸ்லாமிய கருத்தானது, இறை விசுவாசம் மற்றும் அறிவின் உறுதியான அடித்தளத்தில் அமையப்பெற்றுள்ளது. அதாவது முதலில் அல்லாஹ் பற்றிய (கடவுள்) நம்பிக்கை மற்றும் அந் நம்பிக்கையிலிருந்து பிரிக்க முடியாத அறிவு ஆகியவற்றின் மூலம் அறிவொளியையும் இதய ஒளியையும் ஒருங்கே பெற்றுள்ளது.

ஐரோப்பிய அறிவொளிக் கருத்து மற்ற மேற்கத்திய கருத்துகளைப் போலவே இஸ்லாமிய சமூகங்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டது. இஸ்லாமிய கருத்தோட்டத்தில் (Enlightenment) அறிவொளியானது இறைவிசுவாசத்தின் ஒளியைப் பெறாத வெறுமனே பகுத்தறிவில் மாத்திரம் நம்பிக்கை கொண்ட ஒரு விடயமல்ல. அதே வேளை இந்தப் பூமியில் வாழ்வதற்கும் மக்கள் பயன் பெறும் விதத்திலும் பொது நலனை அடைந்து கொள்ளும் விதத்திலும் விவகாரங்களை கையாள்தல் சிந்தித்தல், நோட்டமிடுதல், கூர்ந்து அவதானித்தல் போன்ற விடயங்களில் அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடையான பகுத்தறிவை அவன் பயன்படுத்தாது விட்டால் அவனின் இறைவிசுவாசம் அவனுக்குப் எந்தப்பயனையும் அளிக்கமாட்டாது.

மத்திய கால நூற்றாண்டுகளில் கான்ஸ்டான்டினோப்பிளில் உட்பட மேற்கு மற்றும் கிழக்கத்திய அனைத்து தேசங்களிலும் அணைந்திருந்த நாகரித்தையும் பண்பாட்டையும் முஸ்லிம்களே மீண்டும் கட்டியெழுப்பி அவற்றிற்கு ஒளி பாய்ச்சினர்.... More

இயற்கைத் தேர்வுக்கோட்பாட்டை (ஒரு பகுத்தறிவற்ற இயற்பியல் செயல்முறை) என்றும் ஒரு தனித்துவமான புத்தாக்கப் படைப்பு சக்தியாகக் கருதும் சில டார்வினிஸ்டுகள், எந்தவொரு உண்மையான அனுபவ அடிப்படையும் இல்லாமல் அனைத்து கடினமான பரிணாமச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு தனித்துவம் நிறைந்த புத்தாக்க சக்தியாக கருதுகின்றனர். இதனடிப்டையில் பாக்டீரியா உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டில் உள்ள வடிவமைப்பின் சிக்கலான தன்மையை அவர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். அவர்கள் 'ஸ்மார்ட்' பாக்டீரியா, 'நுண்ணுயிர் நுண்ணறிவு', 'முடிவுகாணுதல்-(முடிவெடுத்தல்)' மற்றும் 'சிக்கல் தீர்க்கும் பாக்டீரியா' போன்ற சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், பாக்டீரியா அவர்களின் புதிய கடவுளாக மாறியது. (theism a giant leap of faith Dr. Raida Jarrar).

இயற்கைத் தேர்வுக் கோட்பாடானது குறிப்பிடும் பாக்டீரியா நுண்ணறிவின் செயற்பாடுகள் யாவும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வின் நுண்ணறிவு மற்றும் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதை படைப்பாளனான அல்லாஹ் தனது வேதத்தினூடாகவும் தனது தூதரினூடாகவும் தெளிவு படுத்துகிறான்.

"அல்லாஹ்வே அனைத்துப்பொருட்களினதும் படைப்பாளனும் யாவற்றிற்கும் அவனே பொறுப்பாளனுமாவான்". (அஸ்ஸுமர் : 62). تقدم... More

இஸ்லாம் இந்தக் கருத்தை முழுமையாக மறுக்கின்றது, மனிதனை கண்ணியப்படுத்தி இந்தப்பூமியின் இறை பிரதிநிதியாக அவனை ஆக்குவதில் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வின் உயரிய நோக்கை நிறைவேற்றுவதற்காக ஆதாமை ஏனைய எல்லாப் படைப்பினங்களிருந்தும் தனித்துவமாகப் படைத்து வேறுபடுத்தினான் என அல்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

டார்வின்வாதிகள் படைப்பாளனை விசுவாசிக்கும் -நம்பும் - விசுவாசியை அவன் நேரில் காணாத ஒன்றை நம்புகிறான் என்பதற்காக அவனை ஒரு பிற்போக்குவாதியாக கருதுகின்றனர். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொருத்தவரை அவன் தனது அந்தஸ்தையும் கௌரவத்தையும் உயர்த்தி மேலோங்கச் செய்யக்கூடிய ஒன்றையே விசுவாசம் கொண்டுள்ளான். அவர்களே தனது நிலையையும் அந்தஸ்த்தையும் குறைத்து தமது நிலைகளை தாழ்த்திக்கொள்ளக்கூடிய ஒன்றை நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கை எவ்வாறாக இருந்தாலும் தற்போது வாழும் குரங்குகள் மனிதனாக மாறி விருத்தியடையாதது ஏன்? என்ற கேள்வி இக்கோட்பாடு சார்ந்தோரிடம் முன்வைக்கப்படுகிறது. இதற்கான பதிலை இன்னும் அவர்களால் கூற முடியவில்லை!

இக்கோட்பாடு சில கருதுகோள்களின் தொகுப்பாகும், மேலும் இந்த கருதுகோள்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நேரடியாக பார்ப்பதன் மூலமும் அல்லது ஒரு குறிப்பிட்ட புறவயமான ஒன்றை குறித்து ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமும் நிகழ்கிறது, மேலும் இந்த கருதுகோள்களை நிரூபிப்பதற்கு அதி சிறந்த சோதனைகள் அல்லது கருதுகோளின் உண்மைத் தன்மையை சான்றாகவைத்து நேரடி அவதானிப்பும் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால்; இந்தக் கோட்பாட்டுடன் இணைந்தாக கருதப்படும் கருதுகோள்களில் ஒன்றை ஆய்வு மூலமோ அல்லது நேரடி அவதானிப்பு மூலமோ நிரூபிக்க முடியாத போது இக்கோட்பாட்டையே முழுமையாக மறுபரீசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.... More

பொதுவான தோற்றம் -அடிப்படை- குறித்த பரிணாமாவியல் கருத்திற்கான திருப்தியான ஆதாரங்களை அறிவியல் முன்வைக்கிறது. அதனையே அல்குர்ஆனும் குறிப்பிடுகிறது.

''உயிருள்ள அனைத்தையும் நீரிலிருந்தே நாம் படைத்தோம், அவர்கள் நம்ப வேண்டாமா?'' (அன்பியாஃ : 30). تقدم

அல்லாஹ் உயிரினங்களை திறன்வாய்ந்ததாகவும், இயல்பில் தமது சூழலுடன் இயைந்து செல்லக் கூடியதாகவும் படைத்துள்ளான். அவைகளின் அளவு, தோற்றம் மற்றும் நீளம் போன்றவை விருத்தியடைய முடியும். உதாரணத்திற்கு செம்மறியாட்டை எடுத்துக் கொள்வோம். அவை குளிரான பிரதேசத்தில் வாழ்பவையாக இருப்பின் அக்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குரிய தோலையும் பெற்றிருக்கும். சீதோசன வெப்ப நிலைக்கேட்ப -அதன் உரோமங்கள் -கம்பளி குறைவாகவோ அல்லது அதிகமானதாகவே இருக்கலாம். ஆகவே வடிவங்களும் வகைகளும் சூழல் வேறுபாட்டிற்கேட்ப வித்தியாசப்படும். இவ்விவகாரத்தில் மனிதர்களும் கூட அவர்களின் நிறம், குணம், மொழி, வடிவம் ஆகியவற்றில் வேறுபட்டுள்ளனர். அந்தவகையில் ஒரு மனிதனை ஒத்த இன்னொரு மனிதன் இருக்க முடியாது. என்றாலும் அவர்கள் அனைவரும் மனிதர்களாவே உள்ளனர். விலங்குளின் இன்னொரு வகையினராக மாறமாட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான் :... More

அல்குர்ஆன் முதல் மனிதர் ஆதத்தின் சம்பவத்தை குறிப்பிடுவதனூடாக மனித பரிணாமக் கோட்பாட்டின் கருத்தியலை பின் வரும் விடயங்களின் ஊடாக சரிசெய்தது :

மனிதன் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எப்பொருளாகவும் இருக்கவில்லை.

"திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?". (அல் இன்ஸான் : 1) . تقدم... More

மக்களிடையே பல்வேறு கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் இருப்பது மிகச்சரியான உண்மை ஒன்று இல்லை என்பதற்கு அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, கருப்பு கார் வைத்திருக்கும் ஒருவர் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனம் குறித்து பலரின் கருத்துக்கள் மற்றும் யூகங்களும் வித்தியாசமானதாக இருந்தாலும், அவர் கருப்பு கார் வைத்திருக்கிறார் என்ற உண்மையை மறுப்பதிற்கில்லை. அத்துடன் முழு உலகமும் அந்த நபரின் கார் சிவப்பு நிறமானது என நம்பினாலும், அந்த நம்பிக்கை அதை சிவப்பு நிறமாக்காது என்பதே யதார்த்தமான விடயம். ஆகவே இங்கே அவரிடம் ஒரு கருப்பு கார் உள்ளது என்ற ஒரு யதார்தத்தை அனைவரும் ஏற்றாக வேண்டும்.

ஆக, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து பல்வேறுவகையான வேறுபட்ட கருத்துக்களும், யூகங்கங்களும் இருந்தாலும், அக்குறிப்பிட்ட பொருள் பெற்றுள்ள ஒரே யதார்தத்தை மறுத்து விட முடியாது.

இப்பிரபஞ்சத்தின் அடிப்படை குறித்து பல்வேறுவகையான மனித கண்ணோட்டங்களும், கருத்துக்களும் இருப்பினும், கடவுளுக்கென்று மனிதர்கள் அறிந்து வைத்துள்ள தோற்றம் எதுவும் கிடையாது. அவனோ எந்த இணையோ, சந்ததியோ அற்ற ஏக படைப்பாளன் என்ற ஒரே யதார்தத்தை அவை நிராகரித்திடமாட்டாது. இந்த கருதுகோளின் அடிப்படையில் உலகம் முழுவதுமே படைப்பாளனை ஒரு மிருக வடிவிலும் அல்லது மனிதவடிவிலும் கட்டமைத்தாலும் அது யதார்தத்திற்கு அப்பால் பட்ட விடயமாகும். இதிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவனாக உள்ளான்.... More

மனிதனின் இச்சைக்கேட்ப பாலியல் பலாத்காரம் தீயதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது நியாயமற்றது. மாறாக, பலாத்காரத்தில் மனித உரிமை மீறல் உள்ளது என்பதும், அவனது மதிப்பு மற்றும் சுதந்திரம் மீறப்படுவதும் தெளிவாகிறது. இதுவே கற்பழிப்பு தீமை என்பதற்கான ஆதாரமாகும். அதே போல் ஓரினச்சேர்க்கை. இது பிரபஞ்ச விதிமுறைகளை மீறும் செயற்பாடு மாத்திரமன்றி; முறையான திருமணத்திற்கு அப்பாட்பட்ட தொடர்புமாகும். முழு உலகமும் இது செல்லுபடியற்றது என முடிவு செய்தாலும் இதுவே சரியான முறையாகும். அதாவது முறையான ஆண் பெண் திருமணமே சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். மனித குலம் அனைவரும் ஓரினச்சேர்கையானது சரி என்பதை ஏற்றுக்கொண்டாலும் அது பட்டவர்த்தனமான தவறாகும் என்பதை ஏற்றாக வேண்டும்.

அதேபோல் வரலாற்றின், ஒவ்வொரு காலமும் அவரவர் கண்ணோட்டத்திற்கும் பார்வைக்கும் வாசிப்புக்கேட்ப எழுதப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொருவரினதும் மதிப்பீடும் அவர் முக்கியம் எனக் கருதிய ஏனைய காலகட்டத்தின் மதிப்பீட்டிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவ்வாறான பல வரலாற்று நிகழ்வுகள் குறித்த மதீப்பீடானது வரலாற்று சார்பியத்தை உருவாக்கிடமாட்டாது. ஏனெனில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஒரு யதார்த்தம் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது என்பதே பேருண்மையாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட வரலாற்றியலானது அதன் நிகழ்வுகள் மன விருப்பத்திற்கேட்ப அமையப்பெற்றிருப்பதால் உருக்குழைவு மற்றும் துல்லியமற்ற தன்மைக்கு உட்படக்கூடியவை. அவை உலக இரட்சகனான அல்லாஹ்வின் வரலாற்றியலைப் போன்று இருக்காது, அல்லாஹ்வின் வராற்று குறிப்பானது முக்காலங்கள் பற்றிய துல்லியமான விடயங்களை கொண்டதாக இருக்கும்.

அதிகமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "முழுமையான உண்மை இல்லை" என்ற கூற்றானது உண்மையில் எது சரி எது தவறு என்பது பற்றிய நம்பிக்கையாகும். அவர்கள் அதை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் நடத்தைக்கான அளவுகோளொன்றை கட்டமைத்து அனைவரும் அதைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று நம்பிய விடயத்தை மீறுவதுடன் இது ஒரு சுய-முரண்பாடான நிலையாக கொள்ளப்படுகிறது.

பொது உண்மை அல்லது யாதார்த்தம் இருப்பதற்கான ஆதாரம் பின்வருமாறு :

மனசாட்சி (உள்ளகரீதியான கட்டுப்பாடு) : மனித நடத்தையை கட்டுப்படுத்தும் தார்மீக வழிகாட்டுதல்களின் தொகுப்பான மனசாட்சி, உலகம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுகிறது என்பதற்கும், அங்கே சரியானவையும் மற்றும் தவறானவையும் உண்டு என்பதற்குமான சான்றாகும். இந்த நெறிமுறைக் கோட்பாடுகள் சர்ச்சைக்கு உட்படாத அல்லது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத சமூகக் கடமைகளாகும். அவை சமூகத்தின் உள்ளடக்கத்திற்கும் மற்றும் கருத்துக்கும் இன்றியமையாத சமூக யதார்த்தங்களாகும். உதாரணமாக, பெற்றோரை மதிக்காமை அல்லது திருடுவது என்பது உலகளவில் கண்டிக்கத்தக்க நடத்தையாக பார்க்கப்படுகிறது. அது உண்மையான நல்ல விடயம் என்றோ மரியாதைமிக்க விடயம் என்றோ நியாயப்படுத்த முடியாது. பொதுவாக இது எல்லாக் காலத்திற்கும் அனைத்து கலாச்சாரங்ளுக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய விடயமாகும்.... More

இதனை பின்வருமாறு விளக்க முடியும். அதாவது இப்புவிப் பந்தில் வாழும் மனிதர்கள் ஆகாயத்தில் பறப்பவர்களை ஒத்தவர்கள். உதாரணத்திற்கு பல்வேறு கலாச்சாரப் பின்புலங்களைக் கொண்டோர் ஒரு விமானத்தில் ஏறுகிறார்கள் எனக் கொள்வோம், அந்த விமானம் அவர்களை எங்கு கொண்டு செல்கிறது, அதனை ஓட்டிச்செல்பவர் யார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது, அது மத்திமரமின்றி எல்லா காரியங்களையும் தாங்களே சுயமாக செய்து கொள்ளவேண்டும், விமானத்தின் உள்ளே ஏற்படும் அசௌகரியங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

அவ்வேளை விமானியிடமிருந்து விமானப்பணியாளர் குழு ஒருவர் மூலமாக ஒரு செய்தி அவர்களுக்கு கிடைக்கிறது. அவர் அவர்களிடம் வந்து விமானத்தில் இருப்பதன் நோக்கம் குறித்தும் அவர்கள் செல்லும் இடம் குறித்தும் விமானம் இறங்கும் இடம் குறித்தும் விவரிப்பதுடன், விமானியின் ஆளுமைப்பண்புகள் குறித்தும் அவருடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளையும் தெளிவு படுத்துகிறார் என்று நாம் வைத்துக்கொண்டால் இது குறித்த பயணிகளின் கருத்துக்கள் பின்வருமாறு அமையும்.

அதில் முதலாம் பயணி : உண்மையில் இந்த விமானத்திற்கு ஒரு விமானி (பைலட்) உள்ளார் என்றும் அவர் இரக்கசுபாவம் கொண்டவர் என்றும் நாம் தடுமாற்றத்தில் இருக்காது இருப்பதற்காக எமது சந்தேகங்களுக்கு பதிலளிக்கவே இவரை அனுப்பியுள்ளார் என்று கூறுகிறார்.... More

அவ்வாறு அமையாது. உதாரணத்திற்கு ஒரு முஸ்லீம் திரித்துவக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளாததால்; அவர் இறைராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார் என்ற அடிப்படையில் அவரை ஒரு காஃபிர் -கிறிஸ்துவத்தை ஏற்காதவர்- என்று கிறிஸ்தவர் கருதுகிறார்களே! இதே போன்றுதான் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்காதவர் யாராயினும் அவர்களுக்கு அரபு மொழியில் காபிர் என்ற வார்தை பயன்படுத்தப்படுகிறது. 'குப்ர்' என்ற வார்த்தைக்கு உண்மையை அல்லது சத்தியத்தை மறுப்பது என்று பொருள், முஸ்லீம்களுக்கு உண்மை, சத்தியம் என்பது ஏகத்துவமாகும். கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை அவர்களது மதத்தின் அடிப்படையில் சத்தியம் என்பது திரித்துவமாகும்.

அல்குர்ஆன் என்பது அகிலத்தின் இரட்சகனிடமிருந்து அனுப்பட்ட வேதங்களில் இறுதி வேதமாகும். முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்குர்ஆனுக்கு முன் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களையும் அதாவது இப்ராஹீம் அலை அவர்களின் ஸுஹுபுகள் உட்பட ஸபூர் தவ்ராத் இன்ஜீல் அவை அல்லாத இறைவேதங்களை நம்புகின்றனர். அத்துடன் எல்லா இறைவேதங்களும் தூய ஏகத்துவத்தை அதாவது "அல்லாஹ்வை இறைவனாக நம்பி வணக்கத்தை அவனுக்கு மாத்திரமே செலுத்தல்" என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட உண்மை செய்தியை –தூதுத்துவத்தை உள்ளடக்கியதாக இருந்தது என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இருப்பினும் அல்குர்ஆன் முந்தைய இறைவேதங்களைப் போன்று, குறிப்பிட்ட குழு அல்லது பிரிவினருக்கு மாத்திரம் ஏகபோக உரிமை கொண்டதாக இல்லை. அதே போன்று பல்வேறு வித்தியாசமான பிரதிகளும் கிடையாது. அது எந்த மாற்றத்திற்கும் உட்படவுமில்லை, மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே பிரதியாக மாத்திரமே காணப்படுகிறது. அல்குர்ஆன் வாசகம் எந்த மாற்றமோ அல்லது திரிபோ இன்றி அதன் அஸல் (அடிப்படை) மொழியான அறபு மொழியிலேயே காணப்படுகிறது. அது இன்று வரையிலும் பாதுகாக்கப் பட்டதாகவே தொடர்ந்தும் உள்ளது, எதிர்காலத்திலும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ் வாக்களித்தது போன்று இப்பூவுலகம் அழிக்கப்படும் வரையில் அது நிலைத்திருக்கும். அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களினதும் கைகளில் பரிமாறப்படும் ஒரு நூலாக இருப்பதுடன், அதிகமானோரின் உள்ளங்களில் பதியவைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மக்களின் புலக்கத்தில் பரவாலாக உள்ளன. அவைகள் யாவும் அல்குர்ஆனின் கருத்துக்களை பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பு மாத்திரமே என்பதை கருத்திற் கொள்ளவும். அன்றைய அரேபியர்கள் சொற்பொழிவு, சொல்லாட்சி, கவிதை போன்றவற்றில் தலைசிறந்தவர்களாக இருந்த போதிலும், குர்ஆன் போன்ற ஒன்றைத் கொண்டுவருமாறு அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் சவால் விடுத்தான். இருப்பினும், இந்த குர்ஆன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமிருந்தும் வர முடியாது என்பதை அவர்கள் உறுதியாக ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் இந்த சவால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தும், எவரும் இச்சவாலை எதிர்கொள்ள முடியவில்லை. இதுவொன்றே இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வேதம் என்பதற்கு மிகப் பெரிய சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

அவ்வாறு தவ்ராத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டு யூதர்களிடமிருந்து இந்த அல்குர்ஆன் வந்திருந்தால் மனிதர்களில் அதனை தங்களுக்குரியது என்பதாக உரிமை பாராட்டுவதில் அவர்கள் முந்திக்கொண்டிருப்பர். வேத இறைவெளிப்பாடு (வஹி) இறங்கிய காலத்தில் இவ்வாறான வாதமொன்றை அவர்கள் முன்வைத்தனரா என்று நாம் கேள்வியெழுப்பினால் அதற்கு இல்லையென்பதே பதிலாகும்.

அத்துடன் இன்னோரு வகையில் சிந்திப்பின், தொழுகை ஹஜ் மற்றும் ஸகாத் போன்ற ஷரீஆ மற்றும் கொடுக்கல்வாங்கல் சட்டங்கள் வித்தியாசப்படுபவனாக இல்லையா? மேலும், மற்ற வேதங்களுடன் ஒப்பிடுகையில் குர்ஆனின் தனித்துவம் மற்றும் அதன் மனிதகையாடல்களுக்கு உட்படாத தன்மை மற்றும் அறிவியல் அற்புதங்களை உள்ளடக்கியது குறித்து முஸ்லிமல்லாதவர்களின் சாட்சியத்தை நோக்க வேண்டியதும் அவசியமாகும். ஒரு கொள்கையுடையவர் தன்னுடைய கொள்கைக்கு முரணான ஒரு கோட்பாட்டினை சரியென ஏற்றுக்கொண்டால், அதுவே அதன் உண்மைக்கு மிகப்பெரிய சான்றாகும். ஆகவே அகிலத்தாரிடமிருந்து கிடைத்த ஒரே தூதாக இது இருப்பதால் இது ஒன்றாக இருப்பதே அவசியமாகும். நபியவர்கள் கொண்டுவந்த இவ்விறைவேதமானது மோசடிக்கான ஆதாரமன்று! மாறாக அவரின் நேர்மைக்கான ஆதாரமாகும். அல்லாஹ் அறபு அணியிலக்கினக்கலையில் திறன்மிக்கோராக கருதப்பட்ட அறபுகள் மற்றும் அறபுகள் அல்லாதோரிடமும் இவ்வேதத்தைப் போன்ற அல்லது இது போன்று ஒரு வசனத்தையேனும் கொண்டு வருமாறு சவால் விடுத்தான். அவர்கள் அச்சாவாலுக்கு முகம் கொடுக்க இயலாது தோற்றுப்போனார்கள் என்பதே வரலாறாகும். அந்த சவால் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!.

புராதன –பண்டைய நாகரிங்களில் சரியான சில விடயங்கள் காணப்பட்டன. அதில் மிகவும் அதிகமானவை கட்டுக்கதைகளும், புனைவுகளுமே. வரண்ட பாலை நிலத்தில் வளர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத ஒரு தீர்கதரிசிக்கு இவ்வாறான நாகரிங்களில் உள்ள (சிறப்பான) சரியான விடயங்களை மாத்திரம் (நகல் செய்து) பிரதி செய்துவிட்டு கட்டுக்கதைகளையும் புராணங்களையும் விட்டு விடுவதற்கு எவ்வாறு முடிந்தது? என்பது சிந்திக்கத் தக்க விடயமல்லவா!?.

உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகளும், வழக்கு மொழிகளும் பரவலாக காணப்படும் ஒரு விடயாமாகும். இவ்வாறாக காணப்படும் எந்த மொழியில் அல்குர்ஆன் இறக்கப் பட்டாலும் ஏன் மற்றைய மொழியொன்றில் இறக்கப்பட்டிருக்கக் கூடாது, அல்லது இறங்கியிருக்க வேண்டுமே என்ற கேள்வியை சாதாரணமாக மக்கள் கேட்கவே செய்வர். உண்மையில் அல்லாஹ் தனது தூதர்களாக அவர்களின் சமூகத்தாரின் மொழியை பேசக்கூடியவரையே அனுப்பி வைத்தான் இந்த அடிப்படையில் இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களை தேர்வு செய்தான். எனவே நபியவர்களினதும் அவர்களின் சமூகத்தின் மொழியும் அறபாக இருந்தது ஆகையால் அவர்களின் மொழியான அறபு மொழியில் அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கினான். அதனை மறுமை நாள் வரையில் எந்த திரிபுமின்றி பாதுகப்பான். இதே போல் அல்லாஹ் ஈஸா அலை அவர்களின் வேதநூலின் மொழியாக அராமிக் மொழியை தெரிவு செய்தான்.

''நாம் எந்தத் தூதரையும் அவர் தனது சமூகத்திற்கு தெளிவு படுத்துவதற்கு அவர்களது மொழியிலேயே தவிர அனுப்பவில்லை''. (இப்ராஹீம் : 4). تقدم

அந்நாஸிஹ் வல்மன்ஸுஹ் கோட்பாடானது இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களில்- தீர்ப்புகளில் ஏற்பட்ட ஒரு வளர்ச்சியாகும். இக்கோட்பாடானது முன்னைய ஒரு சட்டத்தீர்ப்பின் செயற்பாட்டை நிறுத்துவது, அல்லது குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக வந்த புதிய சட்டத்தை அனுமதித்தல் அல்லது பொதுவாக குறிப்பிடப்பட்ட ஒரு விடயத்தை வரையறுத்தல் அல்லது குறிப்பாக வந்துள்ள ஒரு தீர்ப்பை பொதுமைப்படுத்தல் போன்ற விடயங்களை முன்வைக்கும். இது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவரகள் முதல் முன்னைய சட்டங்களில் காணப்பட்ட எல்லோராலும் அறியப்பட்ட ஒரு விவகராமாகும். இதற்கு உதாரணமாக பின்வரும் விடயங்களை குறிப்பிட முடியும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் நலனை கருத்திற்கு கொண்டு ஒரு சகோதரர் தனது சொந்த சகோதரியை திருமணம் முடித்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஏனைய காலங்களில் வந்த இறை சட்டதிட்டங்களில் இது தீமையாக கருதப்பட்டு மாற்றப்பட்டது. அதே போன்று சனிக்கிழமை அன்று உழைத்தல் என்பது நலன் என்ற அடிப்படையில் இப்ராஹீம் அலை அவர்களினது ஷரீஆவிலும் முன்பிருந்த நபிமார்கள் மற்றும் ஏனைய எல்லா இறைசட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமாக இருந்து வந்தது. அந்த நலவானாது மூஸாஅலை அவர்களின் சட்டத்தில் தீங்காக மாறியது. அதாவது அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போன்று அல்லாஹ் இஸ்ரவேலர்கள் காளை மாட்டின் கன்றை வணங்கியமைக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களையே மாய்த்துக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த சட்டம் அதன் பின்னர் நீக்கப்பட்டது. இவையல்லாத இது போன்ற உதாரணங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆக ஒரே மார்க்கச்சட்டத்தில் ஒரு சட்டத்தீர்ப்பு இன்னொரு சட்டத்தீர்ப்பின் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அல்லது இரு தனித்தனியான மார்க்கச்சட்டங்களுக்கு இடையில் மார்க்கத் தீர்ப்புகளில் வித்தியாசம் இடம்பெற்றுள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து விளங்கிக்கொள்கிறோம்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட வைத்தியரொருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு குறிப்பிட்ட சில மருந்துகளின் மூலம் சிகிச்சையை துவங்குவார். காலம் செல்ல குறித்த நோயாளியின் சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் படிமுறை மாற்றத்தின் காரணமாக அந்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது அதனை குறைத்து விடுவார். இவ்வாறாக இருக்கும் ஒரு மருத்துவரை பெரும் ஞானியாகவல்வா குறிப்பிடுகிறோம். அவ்வாறு இருக்கையில் அல்லாஹ் மனித நலன்களையெல்லாம் அறிந்தவன் என்ற அடிப்படையில் அவனுக்கே உயர் முன்மாதிரி உண்டு. அந்த வகையில் இஸ்லாமிய சட்டங்களில் -தீர்ப்புகளில் புதிய சட்டம் பழைய சட்டம் - என்றிருப்பது அல்லாஹ்வின் உயர்ஞானத்தை பறைசாட்டும் ஒரு விடயமாகும்.

உண்மையில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளல் அவசியம். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்கள் ஓதுவதற்காகவும் பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் அல்குர்ஆனை பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகவே விட்டுச்சென்றார்கள். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் பல ஏடுகளில் தொகுக்கப்பட்டதை பார்ப்பதற்கு இலகுபடுத்தல் என்ற நோக்கில் ஒரே இடத்தில் சேகரிக்குமாறு பணித்தார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் நகரங்களில் வசித்து வந்த ஸஹாபாக்களிடம், பல்வேறு அரேபிய வழக்குமொழிகளில் காணப்பட்ட ஏடுகளையும் பிரதிகளையும் ஏரித்து விடுமாறு பணிப்புரை விடுத்து, நபியவர்கள் விட்டுச்சென்ற மூலப்பிரதியான அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் ஒன்று திரட்டப்பட்டு வைக்கப்பட்ட அல்குர்ஆனின் புதிய பிரதிகளை அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதன் மூலம் நபியவர்கள் விட்டுச்சென்ற ஒரே மூலப் பிரதியை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அனைத்து நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.

ஆக அல்குர்ஆன் எந்த மாற்றமுமின்றி அதன் மூல வடிவில் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது. அது முஸ்லிம்களின் வாழ்வோட்டத்தில் எல்லாக் காலங்களிலும் இணைபிரியா ஒரு அம்சமாகவும் காணப்படுகிறது. அவர்கள் அதனை தங்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வதுடன் அதனை தொழுகைகளிலும் அன்றாடம் ஓதியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இஸ்லாம் ஒரு போதும் பிரயோக விஞ்ஞானத்துடன் முரண்படுவதில்லை. மாறாக அல்லாஹ்வை இறைவனை ஏற்றுக்கொள்ளாத மேற்குலக விஞ்ஞானிகளில் பலர் தங்களது அறிவியல் ஆய்வின் மூலமாக படைப்பாளனின் இருப்பு இன்றியமையாத ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வறிவியல் ஆய்வே அவர்களை இந்த யதார்த்தத்தின் பால் அழைத்துச்சென்றுள்ளது. இஸ்லாம் பகுத்தறிவு மற்றும் சாதாரண சிந்தனை சார் தர்க்கவியலை மிகைத்து பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திக்கவும் கூர்ந்து அவதானிக்கவும் அது தூண்டுகிறது.

மேலும், இஸ்லாம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் பிரபஞ்சத்தின் அற்புதமான படைப்புகளையும் சிந்திக்குமாறு அனைத்து மனிதர்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு இந்தப் பூமியில் சுற்றித்திரிந்து, பிரபஞ்சத்தைக் நோட்டமிடுமாறும், பகுத்தறிவு,சிந்தனை மற்றும் சிந்தனை சார் தர்க்கத்தைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது. மேலும், இந்தப்பிரபஞ்சம் மற்றும் ஆன்மா குறித்த அற்புதங்களை பல தடவைகள் மீட்டிப்பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறது. இவற்றிற்கான பதில்களை தேடுவோர் இப்பிரபஞ்ச காரணகர்த்தாவை நிச்சயம் கண்டு கொள்வர் என்பதில் எவ்விதச் சந்தேகமில்லை. மேலும் இந்த பிரபஞ்சம் மிக நுணுக்கமாக, உயரிய நோக்கத்துடனும் நாட்டத்துடனும் வசப்படுத்தப்பட்டதாக உருவாக்கப்பட்ட ஒன்று என்ற முழுமையான உறுதிமிக்க முடிவுக்கு வருவதுடன், இறுதியில் இஸ்லாம் அழைப்புவிடுக்கும் அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் எவரும் கிடையாது என்ற முடிவுக்கு வந்து விடுவர்.

"அவனே ஏழு வானங்களையும் தட்டுத் தட்டாகப் படைத்தான். மகா கருணையாளனான அவனின் படைப்பில் நீ எவ்விதக் குறைபாட்டையும் காணமாட்டீர். அவ்வாறாயின் உனது பார்வையை அதனை நோக்கி செலுத்துவீராக, அவற்றில் ஏதேனும் அவற்றில் ஏதேனும் கோளாறுகளைக் காண்கிறீரா? மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்". (அல்முல்க்:3-4). تقدم... More

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ்வின் மகனாவார். அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனாவார், அப்துல் முத்தலிப் ஹாஷிமின் மகனாவார். மக்காவில் வசித்துக்கொண்டிருந்த அறபிக்கோத்திரமான குறைஷிக்குலத்தை சார்ந்தவர் இவர். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான இஸ்மாஈல் அவர்களின் வழித்தோன்றலுமாவார்.

பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவதாகவும், அவரின் வழித்தோன்றில் மிகப்பெரும் சமூகத்தை உருவாக்குவான் எனவும் உறுதியளித்தான்.

'இஸ்மவேலைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், இதோ, நான் அவரை ஆசீர்வதித்து, அவரைப் பலுகச் செய்து, அவரை மிக அதிகமாகப்பெருகச் செய்வேன், அவர் பன்னிரண்டு இளவரசர்களைப் பெற்றெடுப்பார், அவரைப் பெரிய தேசமாக்குவேன் (பழைய ஏற்பாடு, ஆதியாகமம் (17:20)). تقدم... More

நவீன தொழில்நுட்பமானது மனித குரல்களையும், படங்களையும் ஒரு நொடியில் கடத்தி இன்னொருவருக்கு சென்றடையச் செய்கிறது.1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தை உருவாக்கிய இறைவன் தனது நபியை, உடல் மற்றும் ஆன்மாவுடன் வானத்திற்கு உயர்த்தியிருக்க முடியாதா? புராக் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வாகனத்தின் மீது ஏறிச்சென்றார்கள். புராக் என்பது ஒரு வெள்ளை நிறமான பிராணி கழுதையை விட சற்று உயரமான கோவேரிக் கழுதையை விட உயரம் குறைந்த ஒரு வாகனமாகும்.(பிராணியாகும்;) அந்தப் பிராணி தன் பார்வை எட்டிய தூரம் வரை தனது கால்களை எடுத்து வைக்கும் அந்த அளவுக்கு வேகமாக பிரயாணம் செய்யும்! அதற்கு கடிவாளமும் விளக்கும் உண்டு அதில் நபிமார்கள் பிரயாணம் செய்துள்ளனர்.

இஸ்ரா மிஃராஜ் விண்ணுலகப்பயணமானது முழுமையாக இறைவல்லமை மற்றும் இறைநாட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அதிசய நிகழ்வாகும். அது எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு என்பதுடன் நாம் அறிந்து வைத்துள்ள அனைத்து பிரபஞ்ச விதிகளிலிருந்து வித்தியாசப்படும் ஒரு நிகழ்வு. இப்பிரபஞ்ச விதிகளை இயற்றியவன் இறைவன் என்றவகையில் அகிலங்களின் இரட்சகனின் அத்தாட்சிகளில் ஒன்றாகவும் சான்றாதாரமாகவும் இது காணப்படுகிறது.

ஆயிஷா அம்மையார் நபியவர்களை மிகவும் விரும்பினார்கள் என்றும் அவர்கள் இந்த திருமணத்தினால் எந்தப் பிரச்சினையும் கொள்ளவில்லை என்பது குறித்து பேசும் ஹதீஸ்களை ஹதீஸ் கிரந்தங்களில் மிகவும் தரம் வாய்ந்த ஹதீஸ்களை கொண்ட ஸஹீஹ் அல் புஹாரி கிரந்தத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், நபியவர்களின் காலத்தில் இருந்த எதிரிகள் முஹம்மது நபியை மிக அசிங்கமான முறையில் அவர் ஒரு கவிஞர் மற்றும் பைத்தியக்காரர் என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். ஆனால் ஒரு போதும் இந்த திருமண நிகழ்வு குறித்து அவரை யாரும் குறை கூறவில்லை, எவரும் இது குறித்து பேசவுமில்லை. ஆனால் தற்காலத்தில் இருக்கும் சில உள்நோக்கம் கொண்ட சில அற்பர்கள்தான் இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக இதனைக் குறித்துப் பேசுகிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை மக்கள் அக்கால வழமை சார்ந்த பொதுவான நிகழ்வாகவே கருதினர். பல அரசர்கள் மிகச்சிறிய வயதினரை திருமணம் செய்துள்ளனர் என்ற விவரங்கள் வரலாற்றில் காணப்படுகிறது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுக்க முன் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களை ஒரு தொன்னூறு வயது நிரம்பிய மனிதருக்கு திருமணம் பேசியதான தகவல் கிறிஸ்துவ நம்பிக்கையில் காணப்படுகிறது. இதனடிப்படையில் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வயது நபியவர்களை திருமணம் முடிக்கையில் மேற்குறித்த வயதிற்கு நெருக்கமாக இருந்ததை அவதானிக்க முடிகிறது. அல்லது பதினோராம் நூற்றாண்டில் இங்கிலாந்து மகாராணியான எஸ்போலா தனது எட்டாம் வயதில் திருமணம் முடித்த நிகழ்வு வரலாற்றில் பதிவாகியுள்ளது. (http://muslimvilla.smfforfree.com/index.php...https://liguopedia.wordpress.com/.../19/agnes-de-france/...). ஆனால் இவர்கள் கற்பனை செய்வது போன்று நபியவர்களின் திருமண நிகழ்வு நடைபெறவில்லை என்தே யதார்த்தமாகும்! تقدم

யூத சமூகத்தினரான பனு குரைழா, உடன்படிக்கையை மீறி, இணைவைப்பாளர்களுடன் இணைந்து முஸ்லிம்களை அழிப்பதற்கு கூட்டுச்சேர்ந்தார்கள். இந்த தூரோகச் செயல் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. எனவே அவர்களின் ஷரீஆவின் -மத சட்டதிட்டத்தின்-அடிப்படையில் துரோகம் மற்றும் உடன்படிக்கை மீறலுக்கான தண்டணை அமுல்படுத்தப்பட்டது. இதனை நபியவர்கள் அவர்களின் உடன்பாட்டின் அடிப்படையில் நிறைவேற்றினார்கள். அதாவது அவர்களிடமே இந்த விவகாரம் குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு ஒருவரை நியமிக்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்கள் நபித்தோழர் ஒருவரை நியமித்தார்கள். அவர் இந்த விவகாரத்தில் அவர்களின் மதச்சட்டம் குறிப்பிடும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார். அதனடிப்படையிலேதான் இத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. (தாரீகுல் இஸ்லாம் : (2:307-318)). تقدم

இன்றைய ஐக்கிய நாட்டுச்சபையின் சட்டவிதிகளில் துரோகிகள், உடன்படிக்கை மீறுவோருக்கான தண்டனை என்ன? ஒரு குழு உம்மையும், உமது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து உமது செல்வத்தை அபகரிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளனர் என வைத்துக்கொண்டால் நீ அவர்களுக்கு என்ன செய்வாய்? பனு குரைழா யூதர்கள் உடன்படிக்கை முறித்து, முஸ்லிம்களை துவம்சம் செய்ய இணைவைப்பாளர்களுடன் கூட்டுச்சேர்ந்தனர். இந்நிலையில் தம்மை பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம்கள் எதை செய்ய வேண்டியிருக்கும்? இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம்கள் செய்தவை சாதாரண மனிதப்புத்தியும் ஏற்கக்கூடிய தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு நடவடிக்கையாகும்.

முதலாம் வசனம்: "இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது''. (அல் பகரா :256). - இந்த வசனமானது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள செய்வதில் நிர்ப்பந்தத்தை (வற்புருத்தலை) பிரயோகித்தலை தடை செய்தல் எனும் மார்க்கத்தின் மிகப்பெரும் இஸ்லாமிய அடிப்படையொன்றை நிறுவுகிறது. அதே வேளை இரண்டாவது வசனமானது : ''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களோடு போராடுங்குள்'' என்று குறிப்பிடுகிறது. (அத்தவ்பா : 29). குறிப்பு: 'இந்த வசனத்தை முழுமையாக படிப்பதன் மூலம் இந்த வசனம் குறிப்பிட வந்த விடயத்தை புரிந்து கொள்ளலாம்' இந்த வசனம் குறிப்பிடும் கருத்து பிரத்தியேகமானதே தவிர பொதுவானதல்ல. அதாவது இஸ்லாத்தை எதிர்த்து, இஸ்லாமிய பிரச்சாரத்தை பிறர் ஏற்றுக்கொள்வதை தடுப்பவர்களுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த வகையில் இரண்டு வசனங்களுக்குமிடையில் உண்மையில் எவ்வித முரண்பாடுமில்லை. تقدم تقدم

ஈமான் (இறைவிசுவாசம்) என்பது அடியானுக்கும் அவனின் இரட்சகனுக்குமிடையிலான தொடர்பாகும். எப்போது இத்தொடர்பை ஒருவர் முறித்துக்கொள்ள விரும்புகிறாரோ அவரின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் யார் இதனை பகிரங்கப் படுத்தி இஸ்லாத்தை எதிர்ப்பதற்கும் அதன் தோற்றத்தை சிதைத்து கொச்சைப்படுத்தவும் (மத நிந்தனை செயற்பாட்டில்) அதற்கு துரோகம் இழைப்பதற்கும் நாடுகிறாரோ மனிதனால் இயற்றப்பட்ட சாதாரண போர்விதிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அவன் கொல்லப்படவேண்டும் என்பதே தீர்ப்பாகும். இதில் யாரும் மாற்றுக்கருத்துக் கொள்ளமாட்டர்கள் என்பதே அடிப்படையாகும்.

மதமாற்றத்திற்கான தண்டனை பற்றிய குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினையின் அடிப்படை விடயம் என்னவென்றால் இக்குற்றச்சாட்டை சுமத்துவோர் அனைவரும் எல்லா மதங்களும் உண்மையானவை, ஒரே தரமானவை என்று யூகிப்பதாகும். மேலும், படைப்பாளனை நம்பி, அவனுக்கே வணக்கத்தை செலுத்தி அனைத்து வகையான குறைகளை விட்டும் தூய்மைப்படுத்துவதும், அவன் இருப்பை நம்ப மறுப்பதும், அல்லது அவன் ஒரு மனித மற்றும் கல்லின் வடிவத்தில் பிரதிபலிக்கிறான், அவனுக்கு சந்ததி உண்டு என நம்புவதும் ஒன்றே என்று கருதியதினால் ஏற்பட்ட விளைவாகும். இவ்வாறான கற்பிதங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் அல்லாஹ் மிகத்தூயவானாக உள்ளான். இந்த மாயைக்கு இன்னொரு காரணம் மத சார்பியம் அல்லது எம்மதமும் சம்மதம் என்ற நிலைப்பாடாகும். அதாவது, எல்லா மதங்களும் சரியாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையானது தர்க்கத்தின் சாதாரண அடிப்படைகளை அறிந்தவர் கூட ஏற்காத அல்லது இக்கருத்துடன் ஒத்துப்போகாத விடயமாகும். ஈமானானது -இறைவனை நம்புதல்- நாஸ்திகம் மற்றும் இறைமறுப்புடன் முரண்படுகிறது என்பது மிகத்தெளிவான விடயமாகும். இதனால் சீரிய நம்பிக்கையை ஏற்ற ஒருவர் -இறைவன் ஒருவன் என ஏற்றவன்- உண்மை சார்பியம் -ஒப்பீட்டு உண்மை- குறித்த கூற்றை ஒரு தர்கரீதியான தவறும் மடமைத்தனமுமாகும் என்றே கருதுவார். இதன் அடிப்படையில், இரண்டு முரண்பட்டட நம்பிக்கைகள் ஒரே நேரத்தில் சத்தியத்தில் உள்ளது எனக் குறிப்பிடுவதில் எந்த உண்மையும் கிடையாது.

சத்தியத்தை ஏற்றதன் பின் மார்க்கத்தை விட்டுவிலகிச் சென்றோர் யாவரும், தமது மதமாற்றத்தை பிரகடனப்படுத்தும் வரையில் இத்தண்டனைக்கு உட்படுவோர் அல்லர். இதனை அவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். என்றாலும் அவர்கள் தங்களை இம்மார்க்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரபுருஷர்களாக தன்னைக் காட்டிக்கொண்டு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏளனம் செய்து பரப்புரை செய்வதற்கு முஸ்லிம் சமூகம் வழி திறக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதுடன் மற்றவர்களை இறைமறுப்பு மற்றும் ஒழுக்கமின்மை போன்றவற்றிற்கு தூண்டுகிறார்கள். இவர்களின் இச்செயற்பாட்டிற்கு பின்வரும் உதாரணத்தைக் குறிப்பிடமுடியும். பூமியில் உள்ள எந்த அரசனும் -ஆட்சியாளரும்- தனது இராட்சியத்தில், ஒரு அரசன் இருப்பதை ஏற்றுக்கொள்ளாதிருத்தல் அல்லது அவரை அல்லது அவரது பரிவாரங்களை கேலி செய்வது அல்லது அரசனின் பதவிக்கு பொருந்தாத ஒன்றை அவருக்கு கூறுவது போன்ற விடயங்களை எந்த அரசனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சாதாரண விடயமாகும். இது இவ்வாறிருக்க அரசர்களுக்கெல்லாம் அரசனும் யாவற்றையும் படைத்தவனுமாகிய இறைவனுக்கு எவ்வாறு பொருந்தும்؟... More

மூஸா மற்றும் தாவூத் அலைஹிமஸ்ஸலாம் இருவரும் போராளிகளாக இருந்தனர். மூஸாவும் முஹம்மதும் (அலைஹிமஸ்ஸலாம்) அரசியல் மற்றும் உலக விவகாரங்களில் பல பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர். இருவரும் சிலைவணக்கம் நிறைந்த சமூகத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். மூஸா நபி தனது சமூகத்தாருடன் எகிப்தைவிட்டு வெளியேறினார். தனது சொந்த தேசத்தின் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்தலிருந்து விடுபட்டு தனது மார்க்கத்தை பாதுகாக்க முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யத்ரிபுக்கு -மதீனாவுக்குச்- சென்றார்கள். அதற்கு முன் தனது தோழர்கள் அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திருந்தனர். மூஸா மற்றும் முஹம்மத் ஆகியோரின் பிரச்சாரங்கள் எகிப்திலும் அரபு நாட்டிலும் காணப்பட்டன. அவ்விரண்டு சூழல்களும் விக்கிரக வழிபாட்டு சார்ந்த சூழலாகும். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சிலை வணங்கிகள் அல்லாத யூத சமூகத்திற்கானதாக இருந்தது. இதுவே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சற்று வித்தியசப்படக் காரணம். அத்துடன் அவர் இருந்த சூழ்நிலையும் மிகக் கடினமானதாகக் காணப்பட்டது. மூஸா மற்றும் முஹம்மத் அலைஹிமஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரப் பொறுப்பானது சிலை வணக்கத்திலிருந்து ஏகத்துவத்தின் பால் மாற்றுகின்ற மிகப்பாரியதும் அடிப்படையுமான ஒன்றாகக் காணப்பட்டது.

அத்துடன் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் நடைபெற்ற போர்களில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை. அக்காலத்தில் நடைபெற்ற போர்கள் யாவும் தற்காப்பு, அத்துமீறலைத் தடுத்தல் அல்லது மதத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை ஏனைய மதங்களில் மதத்தின் பெயரால் நடைபெற்ற போர்களில் பலியானோர் எண்ணிக்கை பல மில்லியன்களாகும்!

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கருணை மக்காவின் அதிகாரம் கிடைத்த அந்நாளில் வெளிப்பட்டது. அவ்வேளை அவர்கள் இன்றைய தினம் கருணையின் தினமாகும் எனக் கூறி முஸ்லிம்களுக்கு நோவினையும் தொல்லையும் கொடுப்பதில் அயராது ஈடுபாடுட்ட குறைஷியருக்கு பொது மன்னிப்பபை பிரகடனப்படுத்தி கௌரவப்படுத்தினார்கள். இதன் மூலம் உபத்திரத்திற்கு பதிலாக உபகாகரத்தையும்; கொடுமை செய்வதற்குப் பதிலாக நல்ல முறையில் நடந்துகொள்வதையும் சன்மானமாக வழங்கினார்கள்.... More

ஜிஹாத் என்பது பாவங்களை தவிர்ப்பதில் ஆன்மாவுடன் போராடுதலைக் குறிக்கும் மேலும் ஒரு தாய் தனது பிள்ளையை சுமக்கும் வேளை வலிகளை தாங்கிக் கொள்வது தாயின் ஜிஹாதாகும் ஒரு மாணவன் தனது கற்றலின் போது அயராது உழைப்பதும் ஜிஹாதாகும் தனது செல்வம் மானம் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக போராடுவதும் ஜிஹாதாகும். இவைகள் மாத்திரமின்றி தொழுகை நோன்பு போன்ற ஈபாதத்துகளில் -வணக்க வழிபாடுகளில்- அதற்குரிய நேரத்தில் தன்னை அயராது ஈடுபடுத்திக்கொள்வது ஜிஹாதின் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆகவே ஜிஹாத் என்பதன் அர்த்தம் சிலர் விளங்கியிருப்பது போன்று முஸ்லிம் அல்லாத அப்பாவிகளையும், இணக்கப்பாட்டுடனும் சமாதானமாகவும் வாழுவோரையும் கொலை செய்தல் என்பதல்ல என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

இஸ்லாம் உயிரை மதிக்கும் மார்க்கமாகும். இதன் அடிப்படையில் சமாதானமாக வாழுவோர் மற்றும் சிவிலியன்களை கொலை செய்வதை தடை செய்வதுடன், போரின்போது கூட இவ்வாறானோரின் உடமைகளையும், குழந்தைகள் மற்றும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அது மட்டுமல்லாது போரில் கொலைசெய்யப்பட்ட எதிரிகளின் உடல்களை சிதைத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்றவற்றை கண்டிப்பதுடன் அவை இஸ்லாமியப் பண்பாடுகள் அல்ல என்பதை வலியுறுத்தி குறிப்பிடுகிறது.... More

உயிரை கொடையாய் அளித்தவன், உயிரைப்பெற்றவனிடம் அதனை அழித்துக்கொள்ளவும் எந்தக்குற்றமுமின்றி உள்ள அப்பாவிகளின் உயிர்களை துவம்சம் செய்யவும் உத்தரவு பிரப்பிப்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். உயிரை கொடையாய் அளித்த வல்லோன் இவ்வாறு கூறுகிறான்: ''உங்களின் உயிர்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்''. (அந்நிஸா:29). - இவ்வசனமும் இதுபோன்ற அதிகமான வசனங்களும் மதத்திற்கோ அதன் நோக்கங்களுக்கோ தொடர்பில்லாத குழுக்களின் நலனுக்காக, புனிதங்களை மீறாமல், ஒருவரின் உயிரைப் பணயம் வைக்காமல் அல்லது அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாமல், பழிவாங்குதல் அல்லது அத்துமீறலைத் தடுத்தல் போன்ற நியாயமான காரணங்களுக்காக அன்றி ஒரு உயிரைக் கொல்வதை தடைசெய்கிறது. இதுவே இந்த மகத்தான மார்க்கத்தின் உயரிய நெறிமுறையாகும். ஹுருல்ஈன் பெண்களை அடைந்துகௌ்ளல் எனும் குறுகிய நோக்கத்திற்காக மாத்திரம் சுவர்க்கம் நிறுவப்பட வில்லை. சுவர்க்க இன்பம் என்பது கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திராத பேரின்பமாகும். تقدم

பொருளாதார சூழ்நிலைகள், திருமணம் முடிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இன்றைய இளைஞர்களே இச்சிந்தனையை ஊக்குவிப்போரின் பசப்பு வார்த்தையில் மயங்கி இவ்வாறான ஈனத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்செல்கிறார்கள். குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையானோர் மற்றும் மனக்குழப்பத்திற்கு ஆற்பட்டோர் இதில் அடங்குவர். ஆக,இவ்வாறான கருத்தை ஊக்குவிப்போர் உண்மையாளர்களாக இருந்தால் இப்பணிக்காக இளைஞர்களை அனுப்பமுன் தாங்களே இதனை செய்வதற்கு முன்வர வேண்மல்லவா.!

முதலாவது வாள் என்ற வார்த்தை அல்குர்ஆனில் ஒரு தடவையேனும் குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் போரே நிகழாத நாடுகளில்தான் உலக முஸ்லிம்களின் பெருந்தொகையினர் வசித்து வருகின்றனர். இதற்கு இன்துநேஷியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் சிறந்த உதாரணமாகும். முஸ்லிம்கள் வெற்றிகொண்ட தேசங்களில் இன்றுவரையில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஏனையோரும் வாழ்ந்து வருவது, இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை என்பதற்கான சான்றாகும். அதே வேளை முஸ்லிம் அல்லாதோரால் காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளில் முஸ்லிம்கள் சிறு தொகையினரே உள்ளனர். கூட்டுப் படுகொலையும், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தமது மதத்தை ஏற்குமாறு பலவந்தப் படுத்தியமையும் இதற்குக் காரணமாகும். சிலுவைப்போர் இதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகிறது.

ஜெனீவா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் எட்வார்ட் மான்டெட் தமது விரிவுரையொன்றில் இவ்வாறு கூறினார்: 'இஸ்லாம் ஒரு வேகமாக பரவி வரும் மதம், இது நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகளின் எந்த ஊக்குவிப்பு ஏதுமின்றி தானாகவே பரவுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு முஸ்லிமும் இயல்பிலேயே மதப்பிரச்சாரகர்களாவர். முஸ்லிமைப் பொருத்தவரை அவர்; இறைவிசுவாசத்தில் மிகவும் உறுதியானவர். அவருடைய இறைவிசுவாசத்தின் பலமானது அவரது இதயத்தையும் பகுத்தறிவையும் ஆகர்சித்துள்ளது. இது ஏனைய மதத்தில் உள்ள ஒருவருக்கு இல்லாத இஸ்லாத்திற்கேயுரிய ஒரு தனித்துவமாகும். இதன் காரணமாக இறைவிசுவாசத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு ஈமான் நிரம்பிய ஒரு முஸ்லிம் எங்கு சென்றாலும், எங்கு தங்கினாலும் தனது மதத்தைப் பிரச்சாரம் செய்பவராகவே திகழ்வார். அத்துடன் இவ்வாறான பலமான இறைவிசுவாசமிக்க முஸ்லிமுடன் தொடர்பு கொள்ளும் பலதெய்வ விசுவாசிகளிடத்திலும் இந்த நம்பிக்கை சென்றடையும். இறைநம்பிக்கையுடன் சேர்த்து, இஸ்லாம் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் இணைந்து செல்வதுடன், இந்த பலமான மார்க்கம் வேண்டிநிற்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை அனுசரித்து, இம்மார்க்கம் வாழும் சூழலை மாற்றியமைக்கும் அற்புதமான திறனையும் கொண்டுள்ளது'. (நூல் ஹதீகா ஆசிரியர் :ஸுலைமான இப்னு ஸாலிஹ் அல் கராஷி). تقدم

ஒரு முஸ்லிம் சான்றோரினதும், இறைதூதரின் தோழர் வழியையும் பின்பற்றி நடப்பதுடன், இவ்வாறான புனிதர்களை நேசித்து, இவர்களைப் போன்று நல்லவராக இருக்க வேண்டு என முயற்சி செய்து அவர்கள் நடந்து கொண்டது போல் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும். ஆனால் அவர்களை கடவுளின் நிலைமையில் வைத்து புனிதப்படுத்துவதோ, அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையில் ஒரு இடைத்த தரகராக வைத்துக் கொள்வதோ கூடாது.

"அல்லாஹ்வையன்றி எங்களில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளவும்மாட்டோம்". (ஆல இம்ரான் : 64). تقدم

முஹம்மத் நபி அவர்கள் ஸுன்னியாகவோ ஷீஆவாகவோ இருக்கவில்லை. மாறாக சத்தியமார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் ஒரு உண்மை முஸ்லிமாகவே இருந்தார். ஈஸா அவர்கள் ஒரு கத்தோலிக்கராகவே, அல்லது வேறு எந்தவொன்றின் அங்கத்தவராவோ இருக்கவில்லை. இவர்கள் இருவரும் எந்த தரகரும் இல்லாது இறைவனை (அல்லாஹ்வை) மாத்திரம் வணங்கும் உண்மை முஸ்லிம்களாகவே இருந்தனர். ஈஸா (அலை) அவர்கள் தன்னையோ தனது தாயையோ வணங்குபவராக இருக்கவில்லை. அதே போன்று முஹம்மத் நபியும் தன்னையோ தனது பெண்பிள்ளையையோ, அல்லது தனது மகளின் கணவரையோ வணங்குபவராக இருக்கவில்லை.

அரசியல் பிரச்சினைகளும், சரியான மார்க்க வழிமுறைகளை விட்டு நெறிபிரழ்ந்து சென்றமையும், மற்றும் வேறு பல காரணங்களின் விளைவாக இஸ்லாமிய வரலாற்றில் வழிகெட்ட பிரிவினர் தோன்றத்தான் செய்தன. இப்பிரிவுகளுக்கும், தெளிவான மற்றும் மிகவும் எளிய மார்க்கமாகிய உண்மை மார்க்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. பொதுவாக எல்லா சந்தர்ப்பத்திலும் 'ஸுன்னா' எனும் வார்த்தையானது நபியவர்களின் வழிமுறையை முழுமையாக பின்பற்றுதல் என்ற கருத்தையே குறித்து நிற்கிறது. 'ஷீஆ' எனும் வார்த்தை பொது முஸ்லிம்கள் பின்பற்றி நடக்கும் வழிமுறைகளிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் குழுவைக் குறிக்கும். அத்துடன், 'ஸுன்னி முஸ்லிம்கள்' தூதரின் வழிமுறையைப் பின்பற்றுவோராகவும், பொதுவாக அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாத்தின் சரியான அணுகுமுறையைப் பின்பற்றிச் செல்வோராகவும் உள்ளனர். ஆனால் ஷியாக்களோ இஸ்லாத்தின் சரியான அணுகுமுறையிலிருந்து விலகிய ஒரு பிரிவினர்.

''எவர்கள் தனது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவினர்களாக ஆனார்களோ அவர்களின் எவரிடத்திலும் நீர் இல்லை. அவர்களின் விடயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்''. (அல் அன்ஆம்: 159). تقدم... More

இமாம் என்ற வார்த்தையின் அர்த்தம், மக்களுக்கு தொழுகை வழிபாட்டை முன்னின்று நடத்துபர் அல்லது அவர்களின் விவகாரங்களில் தலைமை தாங்கி வழி நடத்துபவரையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். இது குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட, அல்லது மட்டுப்படுத்தப்பட்ட மத அந்தஸ்த்து -தகுதி- கிடையாது. மார்க்கம் அனைவருக்குமானது என்ற வகையில் இஸ்லாத்தில் வர்க்கமோ அல்லது புரோகிதமோ (சமயகுருப்பதவியோ) இல்லை. குறிப்பு : பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரையும் நாட்டுத் தலைமையையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். மேலும் இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான விடயங்களை ஆளமாக கற்று மக்களுக்கு அவற்றை கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பார். இஸ்லாத்தில் மனிதர்கள் யாவரும் அல்லாஹ்வின் முன் சீப்பின் பற்களைப்போல் சமமானவர்கள். ஆகையால் இறையச்சம் நற்செயல் ஆகியவைகளின் மூலமேயன்றி, அரபி,அரபி அல்லாதவர் என்ற வேறுபாடுகிடையாது. மக்களுக்கு தொழுகை நடாத்துவதற்கு மிகவும் தகுதியானவர் அல்குர்ஆனில் பெரும் பகுதியை மனனம் செய்தவரும், தொழுகை வழிபாட்டுடன் தொடர்பான சட்டதிட்டங்களில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவற்றை கற்றறிந்தவருமாவார். முஸ்லிம்களிடத்தில் ஒரு இமாம் எவ்வளவு மதிப்புக்குரியவராக இருந்தாலும் பாதிரியாரைப் போன்று அவரால் பாவ ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கவோ பாவங்களை மன்னிக்கவோ முடியாது.

"இவர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்". (அத்தவ்பா : 31). تقدم

நபிமார்கள் தங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எத்திவைக்கப்பட்ட விடயங்களில் தவறுசெய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என இஸ்லாம் வலியுறுத்துவதுடன், மதப்புனிதருக்கோ அல்லது பாதிரிக்கோ இறைவெளிப்பாடு –வஹ்யு- மற்றும் தவறுகளிருந்து பாதுகாப்பு என்ற நிலை கிடையாது என்றும் குறிப்பிடுகிறது. உதவிதேடுதல், கோரிக்கை ஒன்றை முன்வைத்தல் போன்ற விடயங்களில், குறித்த வேண்டுதல் நபிமார்களிடத்திலாயினும் அல்லாஹ் அல்லாதோரை நாடுதல் இஸ்லாத்தில் முற்றாக தடை செய்யப்பட்ட விடயமாகும். ஏனெனில் தன்னிடம் இல்லாத ஒன்றை எவருக்கும் கொடுக்கமுடியாது அல்லவா!. தனக்கே உதவிக்கொள்ள இயலாத நிலையில், ஒரு மனிதன் பிறரிடம் உதவியை தனக்கென எவ்வாறு கோர முடியும்? இறைவனிடம் உதவி கோரல் உயர்வாகும். அவன் அல்லாதோரிடத்தில் உதவி கோருவது இழிவாகும். ஒரு வேண்டுதலை அரசனிடத்தில் முன்வைப்பதும், சாமான்ய மக்களிடத்தில் முன்வைப்பதும் சமமானது என்பது பகுத்தறிவுக்குட்பட்ட ஒரு விடயமாகுமா? ஆக இந்த கருத்தை பகுத்தறிவும் தர்கவியலும் முற்றாக நிராகரிக்குமல்லவா!? அல்லாஹ்வி (கடவுளி) ன் இருப்பை விசுவாசித்து அவன் அனைத்து விடயங்களிலும் வல்லமை படைத்தவன் என்ற கோட்பாட்டுன் அவன் அல்லாதோரிடம் வேண்டுதலை முன்வைப்பது ஒரு வகை சிறுமைத்தனமாகும். இது இஸ்லாத்திற்கு முரணான இணைவைத்தல் எனும் மிகப்பெரும் குற்றமாகும்.... More

நபி என்பவர் இறைவெளிப்பாட்டை (வஹியை) பெற்றவர், புதிய ஒரு தூதுத்துவத்தையோ அல்லது வழிமுறையையோ கொண்டுவரவில்லை அர்ரசூல் என்ற இறைத்தூதர் தமது சமூகத்தாருக்கு பொருத்தமான வழிமுறை மற்றும் சட்டதிட்டங்களுடன் அல்லாஹ்வால் அனுப்பட்டவரைக் குறிக்கும். குறிப்பு: மேற்குறிப்பிட்ட இரு சொற்களும் இறை ஆணையை –தூதை- இவ்வுலகில் மக்களுக்கு எத்திவைப்பதற்காக அனுப்பபட்ட இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதப் பிரதிநிதிகளைக் குறிக்கும். நபி மூஸாவிற்கு தவ்ராதும், நபி ஈஸாவிற்கு இன்ஜீலும், நபி முஹம்மதிற்கு அல்குர்ஆனும், நபி இப்ராஹிமிற்கு ஸுஹுபுகளும், நபி தாவுதிற்கு ஸபூர் வேதமும் இறக்கியருளப்பட்டதை இதற்கு உதாரணமாக் கூறலாம்.

மனிதர்களுக்கு பொருத்தமானவர் அவர்களைப்போன்று தங்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவராவார். மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட வானவரை ஒரு தூதராக அவர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு சிரமமான காரியங்களை செய்திருந்தால் வானவர் செய்யும் காரியத்தை தங்களால் செய்ய முடியாது என நியாயம் கூறி அவர் கொண்டு வந்த தூதை நிராகரித்து விடுவர்.

"(அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)''. (அல் இஸ்ராஃ: 95). تقدم

"(அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். இன்னும் அவர்கள் குழம்பிக் கொள்ளும் விடயத்தில் அப்பொழுதும் அவர்களுக்கு நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்". (அல்அன்ஆம் :9). - تقدم... More

வஹியின் மூலம் தனது படைப்புகளுடன் அல்லாஹ் தொடர்பு கொள்கிறான் என்பதற்கான சில சான்றுகள் :

1- ஞானம்: அறிவு : உதாரணத்திற்கு ஒரு மனிதன் வீடோன்றை கட்டி தானோ அல்லது பிறரோ அல்லது தனது பிள்ளைகள் கூட பயன் பெறாது அதனை விட்டுவிட்டால், இயல்பாகவே நாம் அவரைப் பார்த்து அறிவில்லாதவர் அல்லது நல்லவர் அல்லர் எனக் தீர்ப்பளித்து விடுவோம். ஆனால் அல்லாஹ் மிக உயர்வானவன். எல்லோருக்கும் முன்மாதிரிமிக்கவன். அந்தவகையில் இந்தப் பிரபஞ்சத்தை படைத்து, வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்ததில் அவனின் நுட்பத்தையும் மிகப்பெரும் ஞானத்தையும் மிகத் தெளிவாக அறியமுடியுமாக உள்ளது.

2- இயல்பூக்கம் : தனது அடிப்படையையும், இருப்பின் மூலத்தையும், நோக்கத்தையும் அறிவதற்கான ஒரு வலுவான உள்ளார்ந்த தூண்டுதல் மனித ஆன்மாவினுள்ளே காணப்படுகிறது. அதையே நாம் பித்ரா என்று குறிப்பிடுகிறோம். மனித (ஃபித்ரா) இயல்பூக்கமானது எப்போதும் அவனது இருப்புக்கான காரணத்தைத் தேடத் தூண்டுகிறது. என்றாலும், ஒரு மறைமுக சக்தியின் தலையீடு இல்லாது மனிதனால் மாத்திரம் தனது படைப்பாளனின் பண்புகளையும், தனது இருப்பின் நோக்கத்தையும், இறுதி முடிவையும் அறிந்து கொள்ள முடியாது. இதனை தூதர்களை அனுப்புவதினூடகவே தெளிவுபடுத்த முடியும்.... More

தடை செய்யப்பட்ட மரத்தின் கணியை சாப்பிட்டதின் காரணமாக மனித குலத் தந்தை ஆதத்தின் தவ்பாவை ஏற்றுக்கொண்டதன் மூலம் மனிதனுக்கு மிகப்பெரும் பாடத்தைக் கற்றுத்தருகிறான். அதுதான் மனித குலத்தின் இரட்சகன் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய முதல் மன்னிப்பாகும். ஒருவரின் பாவத்தை -குற்றத்தை- இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற அடிப்படையில் கிறிஸ்துவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஆதமிடமிருந்து அனந்தரமாக பெற்ற பாவம் என்ற நம்பிக்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் அவரவர் பாவத்தையே சுமக்கிறார். இது இறைவன் எம்மீது செய்த கருணையாகும். அதாவது மனிதன் எவ்விதக்குற்றமும் பாவமுமின்றி தூய்மையாகவே பிறக்கிறான். அவன் பருவ வயதை அடைந்ததிலிருந்தே அவனின் செயலுக்கு வகைகூறுபவனாக மாறுகிறான்.

ஒரு மனிதன் அவன் செய்யாத குற்றத்திற்கு விசாரிக்கப்படவும் மாட்டான். அதே போல் இறைவிசுவாசம் மற்றும் நற்செயல் இன்றி ஒரு போதும் வெற்றியடையவும் முடியாது. அல்லாஹ் மனிதனுக்கு உயிரை -வாழ்க்கை- கொடுத்து, அவனை சோதிப்பதற்காகவும், பரீட்சிக்கவும் வேண்டி விருப்பத்தை- நாட்டத்தை வழங்கினான். எனவே அவனின் நடவடிக்கைகளுக்கு அவன் மாத்திரமே பொறுப்புக்கூறக் கூற வேண்டியவனாக உள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :... More

சிருஷ்டிகர்த்தாவான இறைவன் நித்திய ஜீவன், எல்லாவற்றையும் நிர்வகிப்பவன், எவ்விதத் தேவையுமற்றவன், சக்கியுள்ளவன். இவ்வாறான பண்புகளைப் பெற்றவனுக்கு, கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் மனிதர்களுக்காக இயசுவின் தோற்றத்தில் ஒருவரை பிரதிபலிக்கச் செய்து அவரை சிலுவையில் அறைந்து மரணிக்கச் செய்யவேண்டும் என்ற எந்தத் தேவையும் அவனுக்குக் கிடையாது. அவனே உயிரைக் கொடுக்கிறான், மேலும் அதனை பரிக்கவும் செய்கிறான், இதனால் அவன் ஒரு போதும் மரணிப்பதில்லை. அதே போன்று மீண்டும் உயிர்த்தெழுவதுமில்லை. அவனின் தூரதர்களான இப்ராஹீமை நெருப்புக் குண்டத்திலிருந்தும், மூஸாவை பிர்அவ்ன் மற்றும் அவனின் படைகளிடமிருந்து காப்பாற்றியது போல் அவனின் தூதரான இயேசுவையும் கொலை மற்றும் சிலுவையில் அறையப் படுவதிலிருந்து அவனே காப்பாற்றினான். இவ்வாறே அல்லாஹ் தனது நல்லடியார்களை எப்போதும் பாதுகாத்த வண்ணம் உள்ளான்.

"மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும், (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை". எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்". (அந்நிஸா : 157-158) . تقدم

ஒரு முஸ்லிம் கணவர் தனது கிறிஸ்தவ அல்லது யூத மனைவியையும் அவளின் வேதத்தையும், அவளின் தூதரையும் மதித்து நடப்பார். இதன் மூலமே அவரின் இறைவிசுவாசம் உறுதிப் படுத்தப்படுகிறது. மேலும் தனது மனைவி மார்க்கக்கிரிகைகளை செய்வதற்கான சுதந்திரத்தையும் வழங்குவார். ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு முஸ்லிம் பெண் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டதல்ல. மாறாக எப்போது ஒரு கிறிஸ்தவர் அல்லது யூதர் அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடியவன் வேறுயாறும் கிடையாது என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நம்பி ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நாம் எமது பெண்மக்களை திருமணம் முடித்துக் கொடுப்போம்.

இஸ்லாம் என்பது நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான மேலதிக அம்சமும், முழுமை பெறுவதற்கான ஒரு அடிப்படையாகும். உதாரணமாக, ஒரு முஸ்லிம் கிறிஸ்தவத்தைத் தழுவ விரும்பினால், அவர் முஹம்மது மற்றும் அல் குர்ஆன் மீதான நம்பிக்கையைத் துறக்க வேண்டும். மேலும் அவர் திரித்துவத்தை நம்பி, பாதிரியார்கள் மற்றும் மதகுருமார்கள் இவர்கள் அல்லாதோரை நாடுவதன் மூலம் பிரபஞ்சத்தின் இறைவனுடனான நேரடி உறவை இழந்து விடுகிறார். அவர் யூத மதத்தைத் தழுவ விரும்பினால், இயேசுவின் மீதும் சரியான இன்ஜீலின் மீதான தனது நம்பிக்கையைத் துறக்க வேண்டும். இருப்பினும் யூத மதத்திற்கு மாறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல, காரணம் அது ஒரு தேசிய தனி மதமாகும், உலகலாவிய மதம் அல்ல என்பது அதன் தேசிய அடிப்படைவாதத்தின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

உண்மையில் இஸ்லாமிய நாகரீகமானது படைப்பாளனுடனான உறவை மிகச் சிறப்பான முறையில் பேணுவதுடன், படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலான உறவையும்; மிகச்சரியான இடத்தில் வைத்துள்ளது. அதே வேளை ஏனைய மனித நாகரீகங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடுகளில் இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு நிகராக ஆக்கி, இறைவனின் கண்ணியம் மற்றும் புகழுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத விதத்தில் அவனுடைய அந்தஸ்தை குறைத்து அவனுடன் உறவு பேணுவதில் தவறாக நடந்து கொண்டுள்ளது.

உண்மையான முஸ்லிம் நாகரீகம் மற்றும் நகரமாயக்கல் விஷயங்களுக்கு மத்தியில் குழப்பமடைய மாட்டான். சிந்தனைகள் மற்றும் அறிவியலை கையாளும் முறையை வரையறுப்பதில் நடுநிலை கோட்பாட்டை பின்பற்றுவார். நாகரீகம் மற்றும் பண்பாடு (குடிமை) ஆகியவற்றிற்கிடையில் பின்வருமாறு வேறுபடுத்துவார் :

நாகரீகக் காரணி (கூறு) : இது மத மற்றும் அறிவு, சிந்தனை நடத்தை மற்றும் பண்பாட்டியல் பெருமானங்களை உள்ளடக்கியது.... More

இஸ்லாமிய மார்க்கம் சிறந்த பண்பாடுகளை கடைப்பிடித்து, தீய செயற்பாடுகளை விட்டும் விலகி நடக்குமாறு அழைப்பு விடுக்கிறது. அத்துடன் சில முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்ற தவறான நடத்தையானது, அவை அவர்களின் கலாச்சார பழக்கவழக்கங்கள்; அல்லது மார்க்கம் குறித்த அவர்களின் அறியாமை, சரியான மார்க்த்தை விட்டு விலகியிருத்தல் போன்றவைகளால் ஏற்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயத்தில் எவ்வித முரண்பாடுமில்லை என்பதற்கு பின்வரும் உதாரணத்தை குறிப்பிட முடியும். ஆடம்பரமான உயர்ரக கார் ஒட்னர் ஒருவர் அதனை செலுத்துவதற்கான அடிப்படைகளை கற்காது, அதனை ஒட்டியதானல் மிகப் பயங்கரமான விபத்திற்கு உட்பட்டார் எனில் அது உயர்ரக காரின் தவறு என்று ஒரு போதும் கூறுவதில்லை. அதை முறையாக செலுத்தத் தவறியவரையல்லவா நாம் குற்றம் சுமத்துகிறோம். ஆகவே இதே கண்ணோட்டத்தில் இஸ்லாத்தையும் சில முஸ்லிம்களின் நடத்தையும் நாம் அனுகினால் அது முரண்பாடாக அமையமாட்டாது!

மேற்கத்திய அனுபவமானது, மத்திய காலத்தில் தேவாலயமும் அரசும் சேர்ந்து மக்களின் வளங்களை சுரண்டி அவர்களின் அறிவியலுக்கு எதிராக செயற்பட்டபோது அதற்கு எதிர்வினையாகும் முகமாக வெளிப்பட்ட ஒரு நிகழ்வாக உள்ளது. இஸ்லாமிய கோட்பாட்டின் நடைமுறையும் சீரிய தன்மையும் காரணமாக இஸ்லாமிய உலகானது இவ்வாறான சிக்கலை ஒரு போதும் எதிர்கொள்ளவில்லை.

உண்மையில் எமக்கு மனித வாழ்வின் எல்லா நிலைகளுடனும் பொருந்திப்போகும் உறுதியான இறை சட்டத்தின் தேவையே காணப்படுகிறது. வட்டி, ஓரினச்சேர்க்கை போன்றவற்றை ஹலாலாக்கும் நிலையிலுள்ள மனித இச்சைககள், அவனின் விருப்பு வெறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட அதிகார சட்டபீடங்களின் தேவை எமக்கில்லை. அதே போல் முதலாளித்துவக் கோட்பாட்டில் காணப்படுவது போல் பெரும் பலசாலிகள் மூலம் பலவீனர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்ட சட்ட ஏற்பாடுகளிலோ, தனிமனித சொத்துரிமையை தடுத்து, மனித இயல்பூக்கத்துடன் முரண்படும் விதத்தில் அமைந்த பொதுவுடமை கோட்பாடுகளிலோ எந்தத் தேவையும் கிடையாது.

ஒரு முஸ்லிமிடம் ஜனநாயகத்தைவிடவும் அதி சிறந்த ஷுரா அமைப்பொன்றுள்ளது.

ஜனநாயகம் என்பது உமது குடும்பம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் முன்பள்ளி குழந்தை முதல் அனுபவசாலியான தாத்தாவரை அவர்களின் அனுபவம் வயது, அறிவு ஆகியவற்றை கருத்திற் கொள்ளாது அவர்களின் கருத்தைப் பெறுவதைக் குறிக்கும். அதாவது முடிவெடுப்பதில் அவர்களின் கருத்துக்களை சரிசமமாக கருத்திற் கொள்வதைக் குறிக்கும்.

ஷூரா என்பது குறித்த விடயம் பொருத்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வயதிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவர்களிடமும் அனுபவ சாலிகளிடத்திலும் ஆலோசனை பெறுதலைக் குறிக்கும்.... More

குற்றவியல் தண்டனையானது இந்தப்பூமியில் குழப்பம் விளைவிக்க நாடி அட்டகாசங்கள் புரிவோரைத் தண்டித்து அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவே இயற்றப் பட்டுள்ளது. ஆனால் இந்தத் தண்டனைகள் பல்வேறு சூழ்நிலைகளின் போது ரத்துச் செய்யப்பட்டதாக மாறிவிடுகிறது. தவறாக ஒருவரைக் கொல்லுதல், பசி மற்றும் பட்டினியின் காரணமாக களவெடுத்தல் போன்றன தண்டனை ரத்துச் செய்யப்பட்டதாக மாறும் சில நிலைகளாகும். அதே போன்று குழந்தை, புத்திபேதலித்தோர், மனநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கும் தண்டனைகள் அமுல்படுத்தப் படமாட்டாது. இக்குற்றவியல் தண்டனைகள் யாவும் அடிப்படையில் சமூகத்தை பாதுகாப்பதற்கேயாகும். இத்தண்டனைகள் மிகவும் கடுமையானதாக இருப்பது சமூகத்தைப் பாதுகாக்கும் உண்ணத நலனோடு தொடர்பானதாகும். எனவே இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இதுகுறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறான தண்டனைகள் இருப்பது மனிதர்களுக்கான மிகப்பெரும் அருளாகும். இதன் மூலமே அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இந்த குற்றவியல் தண்டனைகளை தங்களது உயிர்களுக்குப் ஆபத்து வந்து விடும் என்ற பயத்தில் குற்றவாளிகளும், கொள்ளையர்களும், குழப்பக்காரர்களுமே குறுக்கீடு செய்து எதிர்க்கின்றனர். மரண தண்டனை போன்ற இஸ்லாமிய தண்டனைகளுள் பல மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிலும் காண்படுகின்றன.

இந்தத் தண்டனைகளைக் குறைகூறுவோர் குற்றவாளியின் நலனைக் கருத்திற்கொண்டு சமூக நலனை மறந்துவிடுகின்றனர். குற்றவாளியின் மீது அனுதாபப்படும் அவர்கள் பாதிக்கப்பட்டவரை மறந்து விடுகின்றனர். தண்டனை அதிகம் எனக்கருதுகின்றனர். குற்றச்செயலின் கொடூரம் குறித்து அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

உண்மையில் அவர்கள் தண்டனையை குற்றத்துடன் ஒப்பிடுசெய்து பார்ப்பார்களேயானால் இஸ்லாமிய தண்டணைகளின் நீதியையும் அவை குற்றச்செயல்களுக்கு சமாந்திரமாக இருப்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வர். இதனை மேலும் தெளிவு படுத்திட ஒரு கள்வனின் செயலை உதாரணமாகக் கொள்வோம். அவன் மாறுவேடம் பூண்டு இருளில் சென்று, பூட்டை உடைத்து, ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, வீட்டிலிருக்கும் அப்பாவிகளை பயமுறுத்தி, வீடுகளின் புனிதத்தை மீறி, உள்ளே நுழைந்து தன்னை எதிர்ப்பவர்களை கொன்று விடுவதாகவும் கூறுகின்றான். இவ்வாறான ஒரு கள்வனின் நிலையை சற்று மனக்கண்முன் கொண்டுவந்தால் இதன் அபாயத்தை சற்று புரிந்து கொள்ள முடியும். அதிகமான சந்தர்ப்பங்களில் திருடன் தனது திருட்டை முடிக்கவும் அல்லது அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பயன்படுத்தும் ஒரு வழிமுறையாகவே கொலை அடிக்கடி நிகழ்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வித வேறுபாடுமின்றி தனக்கு முன்னிருப்பவர்களை கொலை செய்துவிடுகிறான். இந்தத் திருடனின் செயலை சிந்திக்கும் போது இஸ்லாம் விதித்திருக்கும் கடுமையான தண்டனைகளின் உயர் நோக்கத்தை எம்மால் உணர முடிகிறது.... More

செல்வம் அல்லாஹ்வுக்குரியது, அதன் பிரதிநிதிகளாகவே மக்கள் உள்ளனர் என்பது இஸ்லாத்தில் பொது விதிகளில் -கோட்பாடுகளில் ஒன்றாகும். அதே போன்று செல்வமானது பணம் படைத்தவர்களிடம் மாத்திரம் சுழன்றுகொண்டிருப்பதும் கூடாது. ஸகாத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதாரன விகிதத்தை செலவு செய்யாது செல்வத்தை சேமிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஸகாத் என்பது ஒரு வணக்கமாகும். அது கஞ்சத்தனம், உலோபித்தனம் ஆகிய குணங்களை களைந்து ஈதல் மற்றும் கொடை கொடுத்தல் போன்ற உயரிய பண்புகள் குடிகொள்ள வகைசெய்கிறது.

"இவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்". (அல் ஹஷ்ர் : 07). تقدم

"ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு. (அல் ஹதீத்: 7). تقدم... More

உதாரணமாக இஸ்லாம், முதலாளித்துவம் மற்றும் சோசலிசத்தில் உள்ள பொருளாதார முறைகளை –கோட்பாடுகளை- ஒரு எளிமையான ஒப்பீடொன்றின் மூலம், இஸ்லாம் இந்த சமநிலையை எவ்வாறு அடைந்தது கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

சொத்து உரிமை தொடர்பாக பின்வரும் கருத்துக்களை அவதானிக்கமுடியும் :

முதலாளித்துவத்தில்: தனியார் உடைமை என்பது பொதுவான கொள்கை.... More

உண்மையில் தீவிரவாதம், கடும்போக்கு, பிடிவாதம் போன்ற பண்புகளை அடிப்படையில் சத்திய மார்க்கமான இஸ்லாம் தடை செய்துள்ளது. அல்குர்ஆனின் அதிகமான வசனங்கள் பிறருடன் உறவாடும் போது மென்மை மற்றும் கருணையை கடைப்பிடிக்குமாறும், மன்னிப்பு, சகிப்புத் தன்மை போன்ற பண்புகளை அணிகலனாகக் கொள்ளுமாறும் தூண்டுகிறது.

"(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்". (ஆல இம்ரான் : 159). تقدم

"(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் (விவேகத்தை) கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்". (அந்நஹ்ல் :125). تقدم... More

அடிப்படையில் மார்க்கமானது, மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவே வந்துள்ளது. உதாரணத்திற்கு, இஸ்லாத்திற்கு முன்னுள்ள ஜாஹிலிய்யாக் காலத்தை நாம் அவதானித்தால் பெண்குழந்தையை உயிரோடு புதைத்தல், உணவுகளில் சில ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், பெண்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் இருந்ததோடு, அனந்தரச் சொத்து பெண்களுக்கு வழங்கப்படாமை, இவைகளுடன் தானாகசெத்த மிருகங்களை சாப்பிடுதல், விபச்சாரம், மது அருந்துதல், அநாதைகளின் செல்வத்தை உண்ணுதல், வட்டி போன்ற மாபாதகமான மோசமான செயல்கள் பரவிக் காணப்பட்டன.

மக்கள் சிலரிடம் காணப்படும் மதக்கருத்துக்கள் தொடர்பான முரண்பாடுகளே, மக்கள் மதத்தை வெறுத்து விலகிச் சென்று அறிவியலை மாத்திரம் பிற்பற்றுவுதற்கு தூண்டும் காரணிகளில் ஒன்றாக காணப்படுகிறது. சரியான மதத்தை மக்கள் பின்பற்றத் தூண்டும் மிகப்பிரதான காரணிகளில் ஒன்றாகவும் முக்கிய அடையாளமாகவும் அந்த மதத்தின் மிதமான போக்கும் சமநிலைப்பேணும் பண்பும் காணப்படுகிறது. இதனையே நாம் இஸ்லாமிய மார்க்கத்தில் தெளிவாகக் காண்கிறோம்.

ஏனைய மதங்களில் உள்ள சிக்கல் என்வென்றால் தமது சரியான மார்க்கத்தை திரிவுபடுத்தி,... More

"நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்". (அல் அஹ்ஸாப்: 59). تقدم

முஸ்லிம் பெண்னை பொறுத்தமட்டில் 'தனியுரிமை' privarcy' என்ற சொல்லை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறாள். தன் தந்தை, சகோதரன், மகன், கணவன் என ஒவ்வொருவரின் அன்புக்கும் தனியுரிமை உண்டு என்பதை அவள் புரிந்துகொண்டுள்ளாள். அவள் தனது கணவன் மீது அன்புகொண்டாலும் தனது தந்தை அல்லது சகோதரன் மீது அன்பு கொண்டாலும் தனக்கு உரிமையுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை வழங்க கடமைப்பட்டுள்ளாள். எனவே தனது தந்தைதைக்கு மரியாதை செய்து அவருக்கு உபகாரம் செய்வது என்பது, தனது மகனை பராமரித்து பயிற்சிளிக்கின்ற கடமை போன்றல்ல. ஒரு முஸ்லிம் பெண் தான் எப்போது? எப்படி? யாருக்கு தனது அலங்காரத்தைக் காட்டவேண்டும் என்பதை நன்கறிவாள். தனது நெருங்கிய உறவுகளுடன் இருக்கும் போது அணிவது போல் அந்நிய ஒருவரை சந்திப்பதற்கு அணியமாட்டாள். இவ்வாறு அவளின் தோற்றத்தை அனைவருக்கும் வெளிக்காட்டமாட்டாள். முஸ்லிம் பெண் ஒரு சுதந்திர பெண்ணாவாள். அவள் தன்னை பிறரின் இச்சைக்கும் மற்றும் நவீன நாகரீகத்திற்கும் கைதியாக இருப்பதை புறக்கணிக்கிறாள். தன்னைப் படைத்தவனை திருப்திபடுத்தும் வகையில், தனக்குப் பொருத்தமானதாகவும், பிடித்தமானதாகவும் கருதுவதை அவள் அணிந்துகொள்கிறாள். மேற்கத்திய நாடுகளில் பெண்கள் பெஷன் மற்றும் ஆடையகங்களின் கைதியாக எப்படி உள்ளாள் என்பதைப் பாருங்கள். உதாரணமாக, இந்த வருட பெஷன் இறுக்கமான, குட்டையான காற்சட்டை அணிவது என்று அவர்களுக்கு சொன்னால், பெண்கள் அணியும்போது அந்த ஆடைகள் பொருத்தமானதா அல்லது வசதியானதா? என்பதையெல்லாம் பொருட்படுத்தாது அவற்றை அணிய முண்டியடிக்கிறார்கள்.

இன்றைய பெண்கள் பண்டங்களாக மாறிவிட்ட நிலையில், எந்த ஒரு விளம்பரமோ அல்லது பிரசுரமோ நிர்வாணப் பெண்ணின் உருவத்தில் இருந்து விடுபடாத நிலையில், இன்றைய காலத்தில் மேற்கத்தியப் பெண்களின் மதிப்பு மற்றும் கௌரவம் பற்றிய ஒரு மறைமுக செய்தியைக் கொடுக்கிறது என்பது யாருக்கும் இரகசியமல்ல. ஒரு இஸ்லாமியப் பெண் தனது அலங்காரத்தை மறைப்பதன் மூலம் தான் மதிப்புமிக்கவள், இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவள் என்ற ஒரு செய்தியை உலகிற்கு அனுப்புகிறாள். அவளுடன் பழகுபவர்- உறவாடுபவர் அவளின் அறிவு, கலாச்சாரம், இணக்கப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டுமேயன்றி, அவள் உடல் அழகின் அடிப்படையிலல்ல என்பதை புரிய வேண்டும்.... More

தலையை திறப்பதே பிற்போக்காகும். உண்மையில் தலையை மறைத்தல் பிற்போக்குவாதம் என்றிந்தால் முதல் மனிதர் ஆதம் அவர்களின் காலத்தையும் அவ்வாறுதான் குறிப்பிடவேண்டுமல்லவா? காரணம் ஆதமையும் அவரின் மனைவியையும் இறைவன் படைத்து சுவர்க்கத்தில் குடியிருக்க செய்தது முதல் அவர்களுக்கு மறைத்தலையும் ஆடை அணிவதையும் உத்தரவாதப்படுத்தினான்.

"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்". (தாஹா:118). تقدم

இவ்வாறேஆதமின் சந்ததியினருக்கு தங்களின் மானத்தை-வெட்கத்தளத்தை- மறைப்பதற்கும் அலங்கரித்துக் கொள்வதற்குமென அல்லாஹ் ஆடையை இறக்கினான். அப்போதிருந்தே மனிதகுலம் தங்களுக்கான ஆடை அணிகளன்களை விருத்திசெய்துள்ளது. இந்த அடிப்படையில் சமூகங்களின் வளர்ச்சியானது ஆடை மற்றும் அடக்கத்தின் முன்னேற்றத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. சில ஆபிரிக்க பழங்குடியினர் போன்ற நாகரீக வாசனையற்ற சில சமூகங்கள் தங்கள் மானத்தை –வெட்கத்தளத்தை- மறைக்கும் ஆடைகளை மட்டுமே அணிகின்ற வழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.... More

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த உடல் வேறுபாடுகளை உலகம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆண்களுக்கான நீச்சல் உடைகள் மேற்கத்திய பெண்களுக்கான நீச்சலுடைகளிலிருந்து வேறுபடுகின்றன. ஆண்களின் ஈர்ப்பைவிட்டும்-கவர்ச்சிக்குள்ளாகாது- தம்மை தடுத்துக் கொள்ளும் முகமாக பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மறைக்கிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணை பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வொன்றை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கத்திய நாடுகளில் பெண்கள் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்புக்கு உட்படாது பாதுகாப்பான வாழ்வுக்கான உரிமைகளைக் கோரி போராட்டங்களில் பங்கேற்கின்றனர். ஆனால் இதுபோன்ற போராட்டங்களை ஆண்கள் நடத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லையே! ஏன் சிந்திப்போமா?

முஸ்லிம் பெண், சமத்துவத்தை அல்லாது, நீதியையே தேடுகின்றாள்- ஏனெனில் ஆணுடான சமத்துவம் பெரும்பாலும் அவளின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இழக்கச் செய்து விடுகிறது. ஒருவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு ஐந்து வயது, மற்றவருக்கு பதினெட்டு வயது. அந்த நபர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டை வாங்க விரும்புகிறார். இந்த விடயத்தில் சமத்துவம் என்பது இருவருக்கும் ஒரே அளவிலான சட்டையை வாங்குவதைக் குறிக்கும். அவ்வாறு அவர் சமத்துவமாக நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு ஒரே அளவிளான சட்டையை வாங்கினால் அவர்களுககு சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இங்கே ஒவ்வொருவருக்கும் தகுந்த அளவு சட்டை வாங்கிக் கொடுப்பதே நீதியாகவும் அனைவரினதும் மகிழ்ச்சியை உறுதி செய்வதாகவும் அமையும்.!.

இன்றைய காலக்கட்டத்தில், ஆணால் செய்யக்கூடிய அனைத்தையும் பெண் தன்னால் செய்ய முடியும் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றாள். இருப்பினும், உண்மையில், இந்த விஷயத்தில் பெண் தனது தனித்துவத்தையும், வேறுபாட்டையும் இழந்து நிற்கினறாள். ஒரு ஆணிணால் செய்ய முடியாத பணிகளை நிறைவேற்றுவதற்காகவே அல்லாஹ் அவளைப் படைத்துள்ளான். பிரசவ வலி மிகவும் கடுமையான வலிகளில் ஒன்றாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக பெண்களை கௌரவப்படுத்தவே மார்க்கம் வந்துள்ளது. இந்த உரிமையை அவள் தொழில் செய்யாது, செலவுகளைப் பொறுப்பேற்காது தனது கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வாள். மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல் மனைவியின் செல்வத்தை அவளின் விருப்பத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் கணவனுக்கு உரிமை அளிக்கிறது. பிரசவ வலிகளைத் தாங்கும் சக்தியை அல்லாஹ் ஆண்களுக்குக் கொடுக்காத அதே வேளை மலைகளில் ஏறும் ஆற்றலை கொடுத்துள்ளான்.

ஒரு பெண் மலையேற ஆசைப்பட்டால், கடினமாக உழைத்து, ஆணைப் போலவே தன்னால் அதைச் செய்ய முடியும் என்று கூறினால், அவளால் அதைச் செய்ய முடியும். இருப்பினும், கடைசியில், குழந்தைகளைத் பெற்றெடுத்து பராமரிப்பதும், தாய்ப்பால் கொடுப்பதும் அவளே. எந்த சூழ்நிலையிலும் எந்த ஆணாலும் இதை செய்ய முடியாது. இவ்வாறான கடினமான செயற்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதானது அவளின் கூடுதல் முயற்சியே. இதனை அவளால் தவிர்த்துக் கொள்ள முடியும்.... More

சர்வதேச புள்ளிவிவரங்களின்படி, ஆண்களும் பெண்களும் சுமாராக சமமான விகிதத்தில் பிறக்கிறார்கள். பெண் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் ஆண்களை விட வாய்ப்புகள் அதிகம் என்பது அறிவியல் பூர்வமாக யாவரும் அறிந்த விடயமாகும். போர்க் காலங்களில் ஆண் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக இருக்கும். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக உள்ளது என்பதும் அறிவியல் ரீதியாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். இதன் விளைவாக மனைவியை இழந்த விதவை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே விதவைகளின் சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்ற முடிவுக்கு வருவோம். எனவே, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மனைவி என்று வரையறுப்பது நடைமுறையில் பொருத்தமான விடயமல்ல.!

பலதாரமணம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட சமூகங்களில், ஆண்களுக்கு கள்ளக்காதலிகள் மற்றும் திருமணத்திற்கு வெளியே பல உறவுகள் இருப்பது பொதுவான பரவலாக அறிய முடிகின்ற விடயமாகும். இந்நடைமுறையானது பலதார மணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காது, மறைமுகமாக அங்கீகரிப்பதற்கான குறியீடாக காணப்படுகிறது! இஸ்லாத்திற்கு முன் இதுவே பரவலாக காணப்பட்ட நடைமுறையாகும், இதைச் சரிசெய்து பெண்களின் உரிமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்து, அவர்களின் காதலியை சட்டபூர்வ மனைவியாக மாற்றி, அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கண்ணியம் மற்றும் உரிமைகளையும் பெற்றுத்தரவே இஸ்லாம் வந்தது.

இந்த சமூகங்களைப் பொறுத்தவரை திருமணமின்றியே உறவுகளை ஏற்றுக்கொள்வது, மற்றும் ஒரே பாலின திருமணங்கக்ளைக்கூட ஏற்றுக்கொள்வதில் எவ்விதப்பிரச்சினையும் இல்லை. அதே போன்று தெளிவான பொறுப்புப்புணர்ச்சி (கடமையுணர்வு) இல்லாமல் உறவுகளை ஏற்றுக்கொள்வது அல்லது தந்தை இல்லாத குழந்தைகளை ஏற்றுக்கொள்வது போன்றவற்றில் இந்த சமூகங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு ஆணுக்கும் பல பெண்களுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணபந்தத்தை இவர்கள் ஏன் பொறுத்துக்கொள்வதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமானவிடயமாகும்! அதே வேளை, இஸ்லாம் இந்த விடயத்தில் தீர்க்கமானதும் அறிவுபூர்வமானதுமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்களுக்கு பல மனைவிகளை வைத்திருக்க வெளிப்படையாக அனுமதிவழங்குகிறது. ஆனால் குறித்த ஆணுக்கு நான்கு மனைவிகளுக்கு குறைவாக இருந்து நீதியாக நடத்தல் மற்றும் பராமரிப்பதற்கான சக்தி பெற்றிருத்தல் போன்ற நிபந்தனைகளைப் பெற்றிருந்தாலே இந்த அனுமதி குறித்த ஆணுக்கு உண்டு. திருமணமாகாத ஆணை துணையாக பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பெண்ணின் பிரச்சனையை தீர்ப்பதற்கு, ஒன்று அவள் திருமணமான ஒரு நபரை திருமணம் முடித்தல்; அல்லது இன்னொருவருக்கு கள்ளக்காதலியாக இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுதல் எனும் இரண்டு வழிமுறைகளே காணப்படுகிறன.... More

நவீன சமுதாயத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு மிக முக்கியமான விடயங்களில் ஒன்று ஆண்களுக்கு வழங்கப்படாத, பெண்களுக்கு மாத்திரம் இஸ்லாம் வழங்கிய உரிமை பற்றியதாகும். ஒரு ஆண் தனது திருமணத்தை திருமணமாகாத பெண்களுடன் மாத்திரம் வரையறுத்துக்கொள்வான். மறுபுறம், ஒரு பெண், திருமணமாகாத ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது அவர் ஏலவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதாவது குழந்தைகளின் பரம்பரையை அவர்களின் உண்மையான தந்தைக்கு உறுதிப்படுத்தவும், மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனந்தரச் சொத்துக்களை பாதுகாக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது. இருப்பினும், இஸ்லாம் ஒரு பெண் திருமணமான ஆணை அவனுக்கு நான்கு மனைவிகளுக்குக் குறைவாக இருக்கும் நிலையில் திருமணம் முடிக்க அனுமதி வழங்கியுள்ளது, ஆனால் அந்த ஆண் மனைவியரிடத்தில் நீதம் பேணல் மற்றும் அதற்கான இயலுமை (சக்தி) போன்ற நிபந்தனைகள பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு பரந்த அளவிலான தேர்வுகள் உள்ளன. மற்ற மனைவி எப்படி நடத்தப்படுகிறாள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும், இந்தக் கணவனின் நெறிமுறைகளைப் பற்றிய அறிவுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அறிவியல் வளர்ச்சியுடன் டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தைகளின் உரிமைகளை காக்க முடியும் என்று கருதினாலும், தந்தையை இந்த சோதனை மூலம்தான் தாய் தனது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிலை என்ன? அவர்களின் உளவியல் நிலை எப்படி இருக்கும்? மேலும், இவ்வாறான தடுமாற்றமான மனோ நிலையைக் கொண்ட ஒரு பெண்ணால் நான்கு ஆண்களுக்கு மனைவியாக இருக்கும் பாத்திரத்தை எப்படி வகிக்க முடியும்? அது மாத்திரமா, ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் அவள் உறவு கொள்வதால் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

இஸ்லாத்தில் ஆண்கள் பெண்களை நிர்வகிக்கும் தகுதியை பெற்றிருப்பது என்பது பெண்களுக்கான மரியாதையையும் (கௌரவத்தையும்), ஆண்களுக்கான பொறுப்பையையுமே காட்டுகிறது. அதாவது பெண்களின் விவகாரங்களைக் பொறுப்பேற்று, கவனித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியை ஆண்கள் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் அரசி எனும் வகிபாகத்தை ஒரு முஸ்லிம் பெண் அடைந்து கொள்கிறாள். புத்திசாலித்தனமான பெண் தான் ஒரு மரியாதைக்குரிய அரசியாகவா அல்லது வாழ்க்கைப் பாதையில் கடின உழைப்பாளியாகவா இருக்க வேண்டும் என்பதைத் அவளே தேர்ந்தெடுப்பாள்.

சில முஸ்லிம் ஆண்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிர்வகித்தல் எனும் கருத்தை தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும், ஒரு போதும் இறைவனால் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தில் உள்ள குறையாக கொள்ளமுடியாது, மாறாக இதனை தவறாகப் பயன்படுத்துபவர்களின் குறைபாட்டைத்தான் அது பிரதிபலிக்கிறது.

இஸ்லாம் வருவதற்கு முன்பு பெண்களுக்கு வாரிசுரிமை பறிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இஸ்லாம் வந்தபோது, வாரிசுரிமையில் பெண்களையும் உள்ளடக்கியது. உண்மையில், அவர்கள் ஆண்களுடன் ஒப்பிடும்போது சமமான அல்லது அதிக பங்குகளைப் பெறுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், பெண்கள் வாரிசுப்பங்குகளை பெரும் நிலையில் அவை ஆண்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் உண்டு. அதாவது அந்நிலைகளில் பெண்களே வாரிசுப்பங்குகளைப் பெறுகின்றனர். குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேறு சில நிலைகளில் உறவு முறை மற்றும் பரம்பரை ரீதியிலான நெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்கள் வாரிசுத் சொத்தில் அதிக விகிதத்தைப் பெறுவர்.

''இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்''. (அந்நிஸா : 11). تقدم

ஒரு முஸ்லிம் பெண் தனது கணவரின் தந்தை இறக்கும் வரை இந்த விடயம் புரியவில்லை என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கணவனின் சகோதரி பெற்ற தொகையின் இரு மடங்கு தொகையை தனது கணவர் பெற்றார் என்று கூறுகிறாள். எனவே அவர் தனது சொந்த குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும், கார் வாங்கவும் இந்த வாரிசுச் சொத்தைப் பயன்படுத்தினார். அதே வேளை வீடு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வது கணவனின் பொறுப்பு என்பதனால், அவரது சகோதரி தனது வாரிசுத்சொத்தில் கிடைத்த பங்கின் மூலம் நகைகளை வாங்கி, மீதமுள்ள தொகையை வங்கியில் சேமித்து வைத்தார். அந்த நேரத்தில், இந்த தீர்ப்பின் பின்னால் உள்ள ஞானத்தை அவள் புரிந்துகொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன் என்று கூறினாள்.... More

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு பெண்ணையும் அடிக்கவில்லை. அடிப்பதைப் பற்றி குறிப்பிடும் அல் குர்ஆன் வசனம், பெண்ணின் கீழ்ப்படியாமை (மாறுபாட்டை) (நுஷூஸ்) போன்ற சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான எவ்விதக் காயமும் ஏற்படாது தண்டிப்பதையே இது குறிக்கிறது. இந்த வகையில் அடிப்பதானது அமெரிக்காவின் சட்டத்தின் படி எந்தவொரு உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒழுங்குமுறை என விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய தீங்கைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அதாவது இந்த விவகாரமானது ஒரு முக்கியமான பரீட்சையை தவறவிடாமல் இருக்க, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து குழந்தையின் தோளை அசைப்பது போன்றது.

ஒருவர், தன் மகள் யன்னல் ஓரத்தில் நின்று கொண்டு உயரமான இடத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள் என கற்பனை செய்து பார்ப்போம். உடனே, எதேச்சையாக அவளைப் பாதுகாகப்பதற்காக அவரின் கைகள் அவளை நோக்கி நீலுவது மாத்திரமின்றி; அவளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் அவளை பினனோக்கி தள்ளுவான். ஆக ஒரு பெண்ணை அடித்தல் எனும் அனுமதியின் பின்னணியில் உள்ள நோக்கமும் இது போன்றதே.! அதாவது ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படாது, குடும்பத்தை அழித்து அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துவதைத் தடுக்கும் கணவனின் முயற்சியாகவே 'பெண்களை அடித்தல்' எனும் அனுமதி வாசகத்தைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

அல் குர்ஆன்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த அனுமதியானது பல கட்டங்களுக்குப் பிறகு வருகிறது:... More

இஸ்லாம், ஏனைய மத நம்பிக்கைகளில் உள்ளது போன்று ஆதமின் பாவச் சுமையை சுமப்பதில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளித்து கௌரவித்தது மாத்திரமின்றி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது.

இஸ்லாத்தில், அல்லாஹ் ஆதமுக்கு மன்னிப்பளித்து, வாழ்க்கையில் தவறு செய்தால் மனம் திருந்தி அவனிடம் எவ்வாறு மன்னிப்புக் கோருவது என்பதை கற்றுக் கொடுத்தான். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :

"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று அதன் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாவான்". (அல் பகரா : 37). تقدم... More

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனையை வலுப்படுத்தியதில் யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களிக்கிடையே தெளிவான உடன்பாடு உள்ளது. (பழைய ஏற்பாடு, லேவியராகமம் 20:10-18). تقدم

கிறித்துவத்தில், இயேசு அவர்கள் விபச்சாரத்தின் கருத்து தொடர்பாக அழுத்தமாக குறிப்பிட்டதுடன், அதனை உடல் ரீதியிலான செயலுடன் மட்டுப்படுத்தாது அதனை தார்மீக அம்சத்துடன் தொடர்புபடுத்தி குறிப்பிடுகிறார். (புதிய ஏற்பாடு, மத்தேயு 5:27-30). கிறிஸ்தவம், விபச்சாரம் செய்பவர்கள் கடவுளின் (அல்லாஹ்வின்) ராஜ்யத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் எனக் கூறி விபச்சாரத்தை தடை செய்கிறது. இதன் பிறகு அவர்கள் நரகத்தில் நித்திய தண்டனை பெறுவது தவிர வேறுவழி கிடையாது. (புதிய ஏற்பாடு, 1 கொரிந்தியர் 6:9-10). இந்த வாழ்க்கையில் விபச்சாரத்திற்கான தண்டனை, மோசேயின் (மூஸாவின்) சட்டத்தின்படி, கல்லெறிந்து கொலைசெய்வதாகும்.(புதிய ஏற்பாடு, யோவான் 8:3-11). (புதிய ஏற்பாடு, மத்தேயு 5:27-30) (புதிய ஏற்பாடு, 1 கொரிந்தியர் 6:9-10) (புதிய ஏற்பாடு, யோவான் 8:3-11)

இயேசு விபச்சாரியை மன்னித்த சம்பவமானது உண்மையில் யோவான் நற்செய்தியின் பழமையான கையெழுத்துப் பிரதிகளில் இல்லை என்பதை இன்றைய விவிலிய அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பினும் நவீன மொழிபெயர்ப்புக்களால் பின்னர் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. (https://www.alukah.net/sharia/ 0/82804/). இவை அனைத்தையும் விட முக்கியமானது என்னவென்றால், இயேசு தனது பிரச்சாரப்பணியின் துவக்கத்தில் மோஸே (மூஸா) மற்றும் தீர்க்கதரிசிகளின் சட்டத்திட்டங்களை ஒழிக்க வரவில்லை என்றும், அவற்றை அமுல்படுத்தவே வந்ததாக அறிவித்தார். மேலும் மோஸேயின் (நியாயப்பிரமாணத்தின்) சட்டதிட்டங்களில் ஒரு புள்ளி வெற்றிடமாவதை விட வானமும் பூமியும் அழிந்து போவது எளிது என லூக்காவில் குறிப்பிடப்பட்டுள்ளது. (புதிய ஏற்பாடு, லூக்கா 16-17). இதன் படி விபச்சாரம் செய்த பெண்ணை தண்டிக்காமல் விட்டு விட்டு மோசேயின் (மூஸாவின்) சட்டத்தை இயேசு செல்லுபடி அற்றதாக மாற்றுவது சாத்தியமில்லை. تقدم تقدم... More

மக்களிடம் நீதியை நிலைநாட்டுமாறும் அளவை நிறுவைகளில் நியாயம் பேணுமாறும் இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது.

‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார். (அஃராப் : 85). تقدم

''நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலை நிறுத்துவோராகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள் அதுவே பயபக்திக்குமிக நெருக்கமானதாகும். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்''. (மாஇதா : 8). تقدم... More

"(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும், தாய் தந்தைக்கு உபகாரம் புரியும் படியும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்ட போதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!".(அல் இஸ்ரா :23, 24). تقدم

"மனிதன் தன் தாய் தந்தைக்கு உபகாரம் புரியும் படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, அவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. அவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்தி வைப்பாயாக. நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்". (அல்அஹ்காப்: 15). تقدم

"உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்". (அல் இஸ்ரா : 26). تقدم... More

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். அப்போது அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவனுடைய தீங்கிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்தான் என்று பதிலளித்தார்கள்".(புஹாரி, முஸ்லிம்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அண்டைவீட்டாரே தனது அண்டைவீட்டாரின் சொத்தை வாங்குவதற்கு மிகவும் அருகதை உடையவர். (வேறு நபர் ஒருவர் குறித்த சொத்தை உடமையாக்கிக்கொண்டால் அதனை பலவந்தமாக எடுப்பதற்கும் உரிமைபெற்றவராக அண்டை வீட்டார் மாறிவிடுகிறார்;). குறித்த நிலத்திற்கு செல்லும் பாதை ஒன்றாக இருந்து அண்டைவீட்டார் இல்லாதிருந்தால் அவருக்காக காணி உரிமையாளர் எதிர்பார்த்திருத்தல் வேண்டும்'' (முஸ்னதுல் இமாம் அஹ்மத்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!". (ஆதாரம் : முஸ்லிம்). تقدم... More

"பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்".(அல் அன்ஆம் : 38 ). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப் பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதற்கு அவள் உணவு, பானம் கொடுக்கவுமில்லை, பூமியிலுள்ள பூச்சி, புழுக்களைத் தானாகத் தேடி உண்ண அதனை விடுவிக்கவும் இல்லை. அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள்". (புஹாரி, முஸ்லிம்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒரு நாய் தாகத்தால் மண்ணை நக்கியதை ஒரு மனிதர் கண்டார். உடனே தனது காலணியை கழற்றி அது தாகத்தை தணித்துக் கொள்ளும் வரை அதில் நீரை அள்ளி கொடுத்தார். அல்லாஹ் இந்த செயலைப் பாராட்டி அவரை சுவர்க்கத்தில் நுழைவித்தான்''. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). تقدم... More

"(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு), பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது". (அஃராப் : 56). تقدم

"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகி விடக்கூடும்". (அர்ரூம் : 41). تقدم

"அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை". (அல்பகரா: 205). تقدم... More

சமூகக் கடமைகள் யாவும் அன்பு, இரக்கம் மற்றும் பிறருக்கு மரியாதை செய்தல் என்ற அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.

இஸ்லாம் இதற்கான அடிப்படைகள், அளவுகோள்கள் மற்றும் வரையறைகளை நிறுவியுள்ளதுடன், சமூகத்தை ஒன்றிணைக்கும் அனைத்து உறவுகளுக்குமான உரிமைகள் மற்றும் கடமைகளையும் வரையறுத்துள்ளது.

"அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு உபகாரம் புரியுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் உபகாரம் புரியுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை". (நிஸா : 36). تقدم... More

அனாதைகளை ஆதரிக்குமாறு இஸ்லாம் ஊக்குவிப்பது மாத்திரமின்றி, தங்கள் சொந்த குழந்தைகளை நடத்துவது போல் அவர்களை நடத்துமாறும் அனாதை பாதுகாவலரை வலியுறுத்துகிறது. இருப்பினும், தந்தையின் அனந்தரச்சொத்தில் அவ்வநாதைக்குரிய பங்கை பாதுகாக்கவும், பரம்பரை கலப்பை தவிர்ப்பதற்காகவும் அநாதைகள் தங்கள் உண்மையான குடும்பத்தைக் கண்டறியும் உரிமை உண்டு.

தான் தத்தெடுக்கப்பட்டதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக அறிந்து கொண்ட மேற்கத்திய யுவதி தற்கொலை செய்த சம்பவம், தத்தெடுப்புச் சட்டங்களில் உள்ள முறை கேட்டுக்கான மிகப்பெரும் சான்றாக உள்ளது. சிறுவயது முதலே அவளுக்கு இதனைத் தெரிவித்திருந்தால், அவளுக்கு கருணை காட்டி, அவளுடைய சொந்த குடும்பத்தைத் தேடும் வாய்ப்பைக் பெற்றிருப்பாள்.

"ஆகவே நீர் அநாதைகளைக் கடிந்துகொள்ள வேண்டாம்''. (அல்ழுஹா: 9). تقدم... More

இறைச்சி புரதச்சத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாகும். மேலும் மனிதர்களுக்கு தட்டையான மற்றும் கூர்மையான பற்கள் உள்ளன, அவை இறைச்சியை மெல்லவும் அரைக்கவும் ஏற்றாற் போல் அமைந்துள்ளது. தாவரங்களையும், விலங்குகளையும், சாப்பிடுவதற்கு ஏற்ற விதமாக பற்களை அல்லாஹ் மனிதர்களில் படைத்துள்ளான். மேலும் தாவர மற்றும் விலங்கு சார் உணவுகளை ஜீரணிக்கக்கூடிய செரிமான அமைப்பை உருவாக்கியுள்ளான். இவை யாவும் தாவரங்கள் மற்றும் மாமிசங்கள் உட்கொள்ளப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.

''கால் நடைகள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன'' . (அல்மாஇதா : 1). تقدم

உணவுகள் தொடர்பான சில விதிகளை அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது :... More

கூர்மையான கத்தியினால் அறுவைமிருகத்தின் உணவுக் குழாயையும், மூச்சுக் குழாயையும் மிக வேகமாக வெட்டி விடுவதே இஸ்லாத்தின் அறுப்பு முறையாகும். இந்த முறை மிருகங்கள் நோவினைப்படுவதற்கு காரணமாக அமையும் மின்அதிர்வு, மற்றும் கழுத்தை நெரித்துக் கொல்லல் போன்ற வழிமுறைகளை விடவும் கருணை நிறைந்தது. மூளைக்கான இரத்த ஓட்டம் தடைபட்டால், விலங்கு வலியை உணராது. ஒரு மிருகம் அறுக்கப்படும்போது ஏற்படும் துடிப்புக்கு வலி காரணம் அல்ல, மாறாக இரத்தத்தின் விரைவான வெளியேற்றமே இதற்கான காரணமாகும். இவ்வாறு துடிப்பது உடலில் இருந்து இரத்தம் முழுமையாக வெளியேற உதவுகிறது. இது விலங்குகளின் உடலுக்குள் இரத்தத்தை உரைய வைக்கும் ஏனைய அறுப்பு முறைகளுக்கு மாற்றமானது. இரத்தம் வெளியேறாத நிலையில் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியை புசிப்போரின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான். ஆகவே நீங்கள் கொலை செய்தால் அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் ஒரு மிருகத்தை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் அறுக்கும் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுவைப் பிராணிக்கும் ஆருதலைக் கொடுக்கட்டும்'. அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்கக்கட்டும்". (ஆதாரம் : முஸ்லிம்). تقدم

விலங்குகளின் உயிருக்கும் மனிதர்களின் உயிருக்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. ஒரு விலங்கின் உயிரானது அதன் உடலை இயக்கும் உந்து சக்தியாகும். அது மரணத்தின் மூலம் வெளியேறும் போது, உடல் உயிரற்றதாகி, வெறும் சடலமாக மாறிவிடுகிறது. அதாவது இது வாழ்க்கையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது. தாவரங்கள் மற்றும் மரங்கள் கூட வாழ்க்கையின் வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அது ஒரு உயிர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக, தண்ணீரின் உதவியுடன் அதன் உற்பகுதி வழியாக ஓடுவதனால் உயிர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் இல்லாமல் போனால் செடி வாடி விழுந்துவிடும்.

''உயிருள்ள அனைத்தையும் நீரிலிருந்தே நாம் படைத்தோம், அவர்கள் நம்ப வேண்டாமா?''. (அன்பியாஃ : 30). تقدم

இருப்பினும் அவை சிறப்பித்தல் மற்றும் கண்ணியப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்ட மனித உயிர் போன்றது அல்ல. அதன் யதார்த்தம் குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான், மேலும் அது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். மனித ஆன்மா –உயிர்- என்பது ஒரு தெய்வீக ஆணை, அதன் மூலத்தைப் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தேவை கிடையாது. அதாவது மனித உடலை இயக்குவதற்காக சக்தி ஒருங்கிணைந்து, அதனோடு சேர்த்து சிந்தனை (மனம்), புரிதல், அறிவு மற்றும் நம்பிக்கை ஒன்றாக கலந்த நிலையாகும், இவை தான் விலங்குகளின் உயிரிலிருந்து –ஆன்மாவிலிருந்து- மனித ஆன்மாவை வேறுபடுத்துகிறது.... More

அல்லாஹ் எமக்கு ஆரோக்கியமான, நல்லனவற்றை சாப்பிடுவதற்கு அனுமதித்து, ஆரோக்கியமற்ற அருவருப்பானவற்றை சாப்பிடுவதற்கு தடை விதித்தமை படைப்பினங்களுடனான அவனின் கருணை மற்றும் அன்பின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

"(ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ள தௌறாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். நல்லவற்றையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். மேலும், அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார். ஆகவே, எவர்கள் அவரை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவரை பலப்படுத்தி அவருக்கு உதவி செய்து, அவருக்கு இறக்கப்பட்ட பிரகாசமான (இவ்வேதத்)தைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்". (அல் அஃராப் : 157). تقدم

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பலர் தாம் இஸ்லாத்தை தழுவுவதற்கு பன்றியே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.... More

இஸ்லாத்தில் பணம் என்பது வர்த்தகம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பரிமாற்றம், அத்துடன் கட்டுமானம் மற்றும் நிர்மாணம் போன்றவற்றிக்கு பயன்படுத்தும் ஒரு அதிகாரம் அளிக்கப்பட்ட அடையாள அலகாகும். அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் கொடுக்கும்போது, அதன் அடிப்படை நோக்கங்களான பரிவர்த்தனை மற்றும் மேம்பாடு எனும் வழிமுறையிலிருந்து தவிர்த்து, அதையே ஒரு குறிக்கோளாக மாற்றுகிறோம். அதாவது பணத்தை கொடுத்து பணத்தை மேலதிகமாக பெரும் ஒரு வழிமுறையாக மாற்றிவிடுகிறோம்.

கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி அல்லது இலாபம் கடன் வழங்குபவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக செயல்படுவதோடு உறுதியான ஆதாயமாக கருதப்படுகிறது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக கடன் வழங்குபவர்களால் திரட்டப்பட்ட- பெறப்படுகின்ற- இலாபம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது. சமீபத்திய தசாப்தங்களில், அரசாங்கங்களும் நிறுவனங்களும் இந்தத் துறையில் பாரிய அளவில் ஈடுபட்டுள்ளன. இது சில நாடுகளின் பொருளாதார வீழச்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதை நாம் அறிகிறோம். அதற்கான பல உதாரணங்கள் உண்டு. எந்த குற்றச்செயல்களாலும் சாதிக்க முடியாத அளவிற்கு சமூகத்தில் ஊழலை பரப்பும் ஆற்றல் வட்டிக்கு மாத்திரமே உண்டு.

அல்லாஹ் கூறுகிறான் : கிறிஸ்தவ கொள்கைகளின் அடிப்படையில், தாமஸ் அக்வினாஸ் வட்டி அல்லது வட்டியுடன் கடன் கொடுப்பதைக்-வாங்குவதைக்- கண்டித்தார். கிறிஸ்தவ தேவாலயத்தின் குறிப்பிடத்தக்க மத மற்றும் உலக செல்வாக்கு காரணமாக, இரண்டாம் நூற்றாண்டில் மதகுருமார்கள் மீது மாத்திரம் இத்தடையை விதித்து, அதனைத் தொடர்ந்து குடிமக்கள் யாவருக்குமான தடையாக இதனை விஸ்தரித்தது. கடனளிப்பவரின் காத்திருப்பு காலத்திற்கான கட்டணமாக வட்டியைக் கருத முடியாது என்பது வட்டியைத் தடைசெய்வதற்கான நியாயங்களில் ஒன்று என்பது அக்வினாஸின் கருத்தாகும். இதனை நியாயப்படுத்துவோர் இதை வணிகப் பரிவர்த்தனையாகப் கருதுகிறாரகள். பண்டைய காலங்களில், தத்துவஞானி அரிஸ்டாட்டில் பணம் என்பது பரிமாற்றத்திற்கான ஒரு வழிமுறையாகும் தவிர வட்டியைப் பெறுவதற்கான வழிமுறை அல்ல என்று உறுதியாக கூறினார். மறுபுறம், பிளேட்டோ, சமூகத்தின் ஏழை உறுப்பினர்கள் மீது செல்வந்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டியை சுரண்டலாகக் கண்டார். கிரேக்கர்களின் காலத்தில் வட்டி பரிவர்த்தனைகள் மிக அதிகமாகக் காணப்பட்டன. இக்காலத்தில் கடனாளிகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அடிமைச் சந்தையில் கடனாளிகளை விற்க உரிமை உண்டு என்ற நிலை இருந்தது. இந்த விவகாரத்தில் ரோமானியர்களின் நிலைமையும் சற்றும் வித்தியாசமின்றி ஒன்றாகவே காணப்பட்டது. கிறிஸ்தவத்தின் வருகைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தடை ஏற்பட்டதால், இந்த தடை மதரீதியான எந்தத் தாக்கங்களுக்கும் உட்படவில்லை என்பது ஈன்று குறிப்பிடத்தக்க அம்சமாகும். இன்ஜீல் வேதத்தைப் பின்பற்றுவோர் வட்டியில் ஈடுபடுவதைத் தடைசெய்தது என்பதையும், தௌராத்தும் அதற்கு முன் அதையே செய்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.... More

இறைவன் மனிதனை பகுத்தறிவின் மூலம் ஏனைய படைப்பினங்களை விடவும் தனித்துவமானவனாக ஆக்கியுள்ளான். ஆகையால் அவன் எமது உடலுக்கும் பகுத்தறிவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவைகளை தடை செய்துள்ளான். இதனால் போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தையும் தடைசெய்துள்ளான். காரணம் அது புத்தியை மறைத்து அதில் பாதிப்பை ஏற்படுத்தி பல வகையான கேடுகளுக்கும் வழிவகுக்கும். மதுஅருந்தியவன் சிலவேளை இன்னொருவனை கொன்று விடமுடியும். சிலவேளை விபச்சாரம் செய்வான், சில வேளை களவெடுப்பான். இவ்வாறான மாபாதகச் செயல்கள் மது குடித்ததன் விளைவாக ஏற்படும்.

"நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றியடைவதற்காக இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்". (அல் மாஇதா : 90). - تقدم

பெயர் மற்றும் அதன் வடிவத்தை கருத்திற்கொள்ளாது போதையை ஏற்படுத்துவதற்கு வழிவகுப்பவை அனைத்தும் 'கம்ர்' மதூபானம் ஆகும். நபியவர்கள் கூறினார்கள் : 'போதையை ஏற்படுத்தும் அனைத்தும் மதூபானமாகும். போதையை ஏற்படுத்தும அனைத்தும் தடைசெய்யப் பட்டவைகளாகும்'. (ஆதாரம் : முஸ்லிம்). - تقدم... More

படைப்பாளன் ஒருவன் என்றும் அவனை மாத்திரமே வணங்கி வழிப்படுவது என்றும், முஹம்மத் அவனின் அடியாரும் தூதருமாவார் என ஒப்புக்கொண்டு சான்று பகர்வதாகும்.

தொழுகையின் மூலம் அகிலங்களின் இரட்சகனானுடன் தொடர்பில் எப்போதும் இருத்தல்.

நோன்பு நோற்பதன் மூலம் ஒருவரின் விருப்பத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் வலுப்படுத்துவதும், மற்றவர்களுடன் இரக்கம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை விருத்திசெய்து கொள்வதுமாகும்.... More

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக தொழுகையை ஆக்கி, தொழுமாறு கட்டளையிட்ட தனது இரட்சகனுக்கு கடடுப்பட்டு நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் தொழுகையை நிறைவேற்றுகிறான்.

ஒரு முஸ்லிம் தினமும் காலை ஐந்து மணிக்கு தொழுகைக்கு எழுவார். முஸ்லிமல்லாத அவரின் நண்பர்கள் அதே நேரத்தில் காலை உடற்பயிற்சிக்கு எழுவார்கள். முஸ்லிமின் தொழுகையானது உடல் மற்றும் ஆன்மீகரீதியான ஊட்டமாக அமையும், அதே நேரத்தில் அவர்களின் உடற்பயிற்சி உடலுக்கான ஊட்டமாக மாத்திரமே அமையும். ஒரு முஸ்லிம் இறைவனிடம் தனது தேவைகளை கேட்கும் பிரார்த்தனையை விட்டும் தொழுகை வித்தியாசமானது. இப்பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் எப்போதும் மேற்கொள்ளலாம். இதற்கு ருகூஊ ஸுஸுத் போன்றவைகள் தேவையில்லை.

ஆன்மாவை பட்டினியில் வதைத்து நம் உடம்பை கட்டாக வைத்துக் கொள்வதில் நாம் எவ்வளவு கவனம் செலுத்துகிறோம் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதன் விளைவுதான் உலகில் மிகவும் வசதி படைத்தவர்களின் எண்ணற்ற தற்கொலைகள் நிகழ்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.!... More

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை பின்பற்றுபவன் என்ற வகையில் தனது தூதரும் தீர்க்கதரிசியுமான முஹம்மத் தொழுதது போன்று தொழுவான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள்". (ஆதாரம் : புஹாரி). تقدم

'முஸ்லிம் தான் நாள் முழுவதும் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற தீவிர விருப்பத்தால்-ஆர்வத்தால் உந்தப்பட்டிருப்பதால், தொழுகையின் மூலம், ஒரு நாளைக்கு ஐந்து முறை தனது இறைவனுடன் உறவாடுகிறான். இது எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்புகொள்வதற்கு அவன் வழங்கிய வழிமுறையாகும். மேலும் இதனை கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என நமக்கு கட்டளையிட்டது எமது நலனுக்காகவே'.... More

'அல்லாஹ்; புனித ஆலயமான கஃபாவை முதல் வழிபாட்டு தளமாகவும், விசுவாசிகளின் ஒற்றுமையின் அடையாளமாகவும் ஆக்கினான். இது தொழுகையின் போது அனைத்து முஸ்லிம்களும் முன்னோக்கும் திசையாகும். மக்காவை மையமாகக் கொண்டு இந்தப் பூமியில் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் இதனைச்சூழ இணைகின்றனர். இறை வழிபாட்டாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் பல காட்சிகளை குர்ஆன் நமக்கு முன்வைக்கிறது. இதற்கு நபி தாவூதுடன் மலைகளும் பறவைகளும் இறைவனை துதிசெய்தது ஆதாரமாக அமைகிறது. ''நிச்சயமாக நாம் தாவூதிற்கு நம்மிடமிருந்து அருளை வழங்கினோம். மலைகளே பறவைகளே! அவருடன் சேர்ந்து துதிசெய்யுங்கள். மேலும் நாம் அவருக்கு இரும்பை எளிதாக்கிக் கொடுத்தோம்''. (ஸபஃ : 10). இஸ்லாம் அதிகமான இடங்களில் இப்பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள படைப்பினங்கள் யாவும் அகிலத்தின் இரட்சகனை துதிசெய்து மகிமைப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன. அல்லாஹ் கூறுகிறான் : تقدم

"(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது". (ஆல இம்ரான் : 96). تقدم கஃபா என்பது சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாயிலின் மத்தியில் அமைந்துள்ள பெட்டி வடிவிலான ஒரு சதுர கட்டிடமாகும். அதற்கு கதவு உண்டு, ஆனால் யன்னல்கள் இல்லை. அதன் உள்ளே ஒன்றும் இல்லை. மேலும் அது யாருடைய கல்லறையும் அல்ல. மாறாக, அது ஒரு தொழுகை அறை. கஃபாவிற்குள் தொழும் ஒரு முஸ்லீம் எந்தத் திசையிலும் தொழலாம். வரலாறு முழுவதும் கஃபா பலமுறை புனரமைக்கப் பட்டுள்ளது. நபி இப்ராஹீம் (ஆபிரகாம்) தனது மகன் இஸ்மாஈலுடன் சேர்ந்து அதன் அடித்தளத்தை முதலில் அமைத்தார். கஃபாவின் மூலையில், ஆதம் நபியின் காலத்திலிருந்தே இருந்ததாகக் கருதப்படும் கருப்புக் கல் உள்ளது. இருப்பினும், இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது உள்ளார்ந்த சக்தி வாய்ந்த கல் அல்ல. மாறாக, அது முஸ்லிம்களுக்கான அடையாளமாக விளங்குகிறது.

பூமியின் கோளவடிவத் தன்மையானது, தொடராக இரவு பகல் மாறி மாறி வருவதை குறிக்கறது. மேலும் முஸ்லிம்கள் கஃபாவைச் சுற்றி தவாப் செய்வதன் மூலம் ஒன்றிணைந்திருப்பதும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளில் மக்கா திசை நோக்கித் தொழுவதும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அகிலங்களின் இரட்சகனை மகிமைப்படுத்தி துதிப்பதில் எப்போதும் தொடர்பில் இருப்பதை பிரதிபலிக்கிறது. இதனை படைப்பாளனான அல்லாஹ் தனது நபி ஆபிரகாமுக்கு- இப்ராஹிமுக்கு- கஃபாவின் அஸ்திவாரங்களை உயர்த்தி அதனைத் தவாப் செய்யுமாறு கட்டளையிட்டான். அதே போன்று கஃபாவானது தொழுகையின் திசையாக இருக்க வேண்டும் என எமக்குக் கட்டளையிட்டுள்ளான்.... More

கஃபா ஆலயம் தொடர்பான குறிப்புகள் வரலாறு முழுதும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அரேபிய தீபகற்பத்திற்கு அப்பால் தொலைத்தூரத்திலிருந்து இதனை தரிசிப்பதற்காக மக்கள் வருடம் தோரும் வருகை தந்திருந்தனர். அத்துடன் முழு அரேபியத் தீபகற்பத்தில் உள்ளோரும் இதனைப் புனிதப்படுத்துகின்றனர். கஃபா குறித்து பழைய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: 'பாக்கா பள்ளத்தாக்கைக் கடந்து, அவர்கள் அதை நீரூற்றுகளின் இடமாக மாற்றுகிறார்கள்'. (பழைய ஏற்பாடு, சங்கீதம் 84).

அரேபியர்கள் இஸ்லாம் வர முன் கஃபாவை மிகவும் மதித்து புனிதப்படுத்துவோராக இருந்தனர். ஆரம்பத்தில், முஹம்மது நபி தூதுவராக அனுப்பப்பட்டவேளை, அல்லாஹ் ஜெரூசலத்தில் உள்ள பைத்துல் மக்திஸை நபியவர்களின் கிப்லாவாக ஆக்கினான். முஹம்மது நபியைப் பின்பற்றுவோரில் அவர்களை எதிர்போரிலிருந்து, அல்லாஹ்வுக்கு தூய்மையான முறையில் கட்டுப்படுவோரை வேறுபடுத்துவதற்கான சோதனையாக, புனித ஹரமை நோக்கி தொழும் திசையாக ஆக்கிக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இதயங்களைத் தூய்மைப்படுத்துவதும், அல்லாஹ்வில் மாத்திரம் உள்ளத்தைப் பற்றுக்கொள்ளச் செய்வதுமே கிப்லாவை (தொழுகையின் திசையை) மாற்றியதன் பின்னணியில் உள்ள பிரதான நோக்கமாகும். நபியவர்கள் வழிகாட்டலை ஏற்று முஸ்லிம்கள் கட்டுப்பட்டனர். யூதர்களோ தங்களின் கொள்கைக்கு நியாயம் கற்பிக்க நபியவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுததை சார்பாக கொண்டனர். تقدم

கிப்லாவின் மற்றமானது, அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கைகளை இஸ்ரவேலர்கள் மீறியதன் காரணமாக, மதத்தலைமையானது இஸ்ரவேலர்களிடமிருந்து அகற்றப்பட்டடு அரேபியர்களுக்கு மாறுவதற்கான அறிகுறியாகவும் திருப்புமுனையாகவும் காணப்பட்டது.... More

சிலைவழிபாட்டு மதங்களுக்கும் குறிப்பிட்ட சில இடங்கள், மற்றும் சடங்குகளை சிறப்பிப்பதற்குமிடையே பாரிய வேறுபாடுகள் உண்டு. அவை மத அல்லது தேசிய அல்லது கலாச்சாரமாக இருந்தாலும் சரியே!

உதாரணமாக, ஹஜ்ஜின் போது ஜமராத்துக்ளில் கல்லெறிவது, ஷைத்தனுக்கு முரண்படுவதையும் அவனைப் பின்பற்ற மறுப்பதையும் காட்டுகிறது. மற்றும் நமது நபி இப்ராஹிம் (ஆபிரகாம்) அவர்களின் செயலைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது. தனது இரட்சகனின் கட்டளைப்படி மகனை பலியிடுவதை ஷைத்தான் தோன்றி தடுக்க முயற்சித்தான். அப்போது இப்ராஹிம் நபி ஷைத்தானுக்கு கூழாங்கற்களால் கல்லெறிந்தார். இதனையே முஸ்லிம்கள் ஒரு கிரியையாக நிறைவேற்றுகின்றனர். (இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸ் முஸ்தத்ரக் ஹாகிமிலும் இப்னு குஸைமாவின் ஸஹீஹிலும் பதிசெய்யப்பட்டுள்ளது). இதேபோன்று, ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே ஓட்டமும் நடையுமாக செல்லும் வணக்கமுமாகும். தனது மகன் இஸ்மாயிலுக்காக அன்னை ஹாஜர் தண்ணீரைத் தேடி இரு மலைக்கிடையில் அவர்கள் ஓடியமையை நினைவு கூறும் ஒரு செயல். இதனை ஹஜ் மற்றும் உம்ராவின் போது நிறைவேற்றும் ஒரு கடமையாக இஸ்லாம் விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. تقدم

'முஸ்லிம் ஹஜருல் அஸ்வதை வணங்காதிருப்பின் அதனை ஏன் முத்தமிடவேண்டும்?. குறிப்பு: கறுப்புக் கல் (Black Stone, Hajarul Aswad, அரபு மொழி: الحجر الأسود‎) என்பது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பெரிய பள்ளிவாசல் நடுவில் அமைந்துள்ள கஃபா எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி ஆதம், ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும். இந்தக் கல் (முஹம்மது நபியின்) பிறப்புக்கு முன்னே, இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபியினால் கிபி 605 ஆம் ஆண்டு கஃபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605 இற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது. முஹம்மது நபி வழிமுறையைப் பின்பற்றி இன்றும் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையில் கஃபாவைச் சுற்றி வந்து தவாப் செய்யும் போது இக்கல்லை ஆர்வத்துடன் முத்தமிடுவார்கள். ((விகிபீடியா).

உதாரணத்திற்கு தனது தந்தையிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதத்தின் உரையை ஒரு நபர் முத்தமிடுகிறார் என்றால் அவரை நாம் குறைகூறுவோமா? மாட்டோமல்லவா?! இதே போன்றுதான் ஹஜருல் அஸ்வத் கல்லின் நிலையும் என்பதையும் மனம் கொள்ள வேண்டும்.! ஹஜ்ஜின் அனைத்து கிரியைகளும் அல்லாஹ்வை நினைவு கூறுவதையும், அகிலங்களின் இரட்சகனுக்கு அடி பணிந்து வழிபடுதலையும் குறித்துக்காட்டுவதுடன் அதனையே இலக்காகவும் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக அவர்கள் கற்களையோ, இடங்களையோ அல்லது தனி நபர்களையோ வணங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. (هذه الترجمة متكررة. ينظر : 1839) அதே வேளை வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தினதும் இரட்சகனும், எல்லாவற்றையும் படைத்தவனும், அவற்றின் இறையாண்மையும் கொண்ட ஒரே கடவுளை வணங்குவதற்கு இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது. هذا أيضا متكرر. ينظر رقم 1840)

‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றேன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்). (அல் அன்ஆம்: 80). تقدم

ஹஜ்ஜில் நெரிசல் காரணமாக குறிப்பிட்ட சிலவருடங்களில் மாத்திரமே மரணசம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் வழமையில் நெரிசல் காரணமாக மரணமடைவோரின் தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால் உதாரணத்திற்கு குறிப்பிடுவோமாயின் நாம் மது அருந்துவதன் விளைவாக இறக்கும் நபர்களை கணக்கிட்டால் அவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல மில்லியன்கலாகும். அதுமாத்திரமின்றி தென் அமெரிக்காவில் கால்பந்து அரங்கங்கள் மற்றும்; திருவிழாக்களில் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை இதை விட அதிகமாகும்! என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும், மரணம் தவிர்க்க முடியாத மாபெரும் உண்மையாகும், இறைவனை சந்திப்பது அது போன்ற உண்மையாகும். ஆகவே பாவத்தில் இறப்பதை விட நற்காரியத்தில் இறப்பது மிகவும் சிறந்தல்லவா!

மால்கம் எக்ஸ் கூறுகிறார்:

'இந்த பூமியில் எனது இருபத்தி ஒன்பது வருட வாழ்க்கையில் முதன்முறையாக, நான் எல்லாவற்றையும் படைத்தவன் முன் நின்று, ஒரு முழுமையான மனிதனாக இருப்பதை உணர்ந்தேன். அதே போன்று எல்லா நிறத்தவரும், இனங்களும் சங்கமமாகி ஓரிடத்தில் அணிதிரண்டு உண்மையான சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு சமூகத்தை நான் கண்டதில்லை. அமெரிக்கா இஸ்லாத்தை புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இனவெறிப் பிரச்சினைக்கான யதார்த்தமான தீர்வை தன்னகத்தே கொண்ட ஒரே மதமாக இஸ்லாம் மாத்திரமே திகழ்கிறது' (இவர் ஆபிரிக்க இனத்தை சேர்ந்த அமெரிக்க இஸ்லாமிய போதகர். மற்றும் மனித உரிமைகள் போராளி, அமெரிக்காவில் இஸ்லாமிய இயக்கத்தின் போக்கை சரிசெய்து, சரியான இஸ்லாமிய கொள்கையின் பால் அழைப்பு விடுத்தவர்). تقدم... More

அல் குர்ஆனில், இறைவனின் கருணையையும், அடியார்கள் மீது கொண்ட அன்பையும் குறிக்கும் பல வசனங்கள் உள்ளன. இருப்பினும், இறைவன் தம்முடைய அடியானிடம் அன்பு செலுத்துவது மக்கள் தங்களுக்கு மத்தியில் அன்பு பாராட்டிக்கொள்வது போன்றது அல்ல. ஏனென்றால் மனித அளவுகோளின் படி ஒரு காதலன் தான் இழந்த தேவையை காதலியிடமே பெற்றுக்கொள்கிறான். ஆனால் அல்லாஹ், எம்மில் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் நம்மீது கொண்ட அன்பானது பாசமும் அருளுமாகும். பலமானவன் பலவீனமானவனை விரும்புவது, வசதி படைத்தவன் ஏழைகள் மீது நிறைந்த அன்பு காட்டுவது, ஒரு பலசாலி ஆதரவற்றவரிடம் அன்பு காட்டுவது போன்ற நிலைக்கு ஒப்பானதாகும்.

எமது குழந்தைகளை நேசிக்கிறோம் என்ற அடிப்படையில் அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்குவோமா? எமது குழந்தைகளை நாம் நேசிக்கிறோம் என்பதனால் அவர்களை யன்னலினூடகாப் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதையோ, அல்லது திறந்த மின்னோட்டமுள்ள கம்பிகளைப் பிடித்து விளையாடவோ அனுமதிப்போமா?

நாட்டின் நலன்கள், சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், மதக் கருத்துகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, தனி நபரை முதன்மையாகக் கவனத்தில் கொண்டு, தனிப்பட்ட நன்மை மற்றும் மகிழ்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தனிநபர் முடிவுகள் எடுக்க முடியாது. அத்துடன் ஒருவர் தன் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்கும், விரும்பியதைச் செய்வதற்கும், ஆடை அணிந்து கொள்வதற்கும், பாதை பொதுவானது என்று சாக்குப் போக்கு கூறி அவர் விரும்பும் விதத்தில் நடந்துகொள்ளும் இப்போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.... More

"லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்' இவர்கள்தாம் மிக்க பரிசுத்தமான மனிதர்களாயிற்றே' என்று கூறியதைத் தவிர வேறெதுவும் அவரது சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை''. (அல்-அராஃப்: 80-82). تقدم

இந்த வசனம் ஓரினச்சேர்க்கை மனித மரபியலாக வந்த விடயமல்ல என்பதையும், இது மனித மரபணு குறியீட்டின் ஒரு பகுதியுமல்ல என்பதனையும் உறுதிப்படுத்துகிறது. ஏனெனில் லூத் சமூகமே இந்த வகையான ஈனச் செயலில் முதலில் ஈடுபட்டுள்ளனர். இது பாலியல் விலகலான ஓரிணச்சேர்க்கைக்கும் மரபியல் பரம்பரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரந்த அறிவியல் ஆய்வுகளுடன் ஒத்துப்போகிறது. (அல்குர்ஆன்,அஸ்ஸுன்னா கூறும் அறிவியல் அற்புதங்களுக்கான அல் கஹீல் கலைகளஞ்சியம் (https://kaheel7.net/?p=15851)). تقدم

திருடனின் திருடும் விருப்பத்தை-ஆர்வத்தை –( Interests) நாம் ஏற்று மதிக்கிறோமா? இதுவும் ஒரு வகை ஆர்வமே, ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இது ஒரு இயற்கைக்கு மாறான ஆர்வ- நிலையாகும். இது மனித இயல்புக்கு எதிரானதும், இயற்கை ஒழுங்கை மீறுகிற விடயமுமாக இருப்பதால், இது நெறிப்படுத்தப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.... More

மனித இயல்பையும், பலவீனத்தையும் கருத்தில் கொண்டு, விடாப்பிடியாக இன்றி பாவம் செய்வோரை அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால் இறைவன் மன்னிப்பவனாகவும் அவர்களுடன் இரக்கமுள்ளவனாகவும் இருக்கிறான். இதில் இறைவனை சவாலுக்குட்படுத்துவது என்பது கிடையாது. இருப்பினும், இறைஇருப்பை மறுத்து, தன்னை சிலைகள் அல்லது விலங்குகளின் வடிவில் சித்தரிப்போரை, அல்லது மனந்திருந்தாமல் பாவச்செயல்களில் விடாப்பிடியாக நிலைத் திருப்பவர்களை கடுமையாக தண்டிப்பான். ஒருவன் மிருகத்தை அவமதித்தால், யாரும் அவனை குறை கூற மாட்டார்கள், ஆனால் அவர்கள் பெற்றோரை அவமதித்தால், அவர்கள் கடுமையாக கண்டனத்துக்கு ஆளாகுவார். அப்படியாயின், இந்த சமன்பாட்டை அவமதிப்பை படைப்பாளனான இறைவன் விவகாரத்தில் பிரயோகித்தால்;? அது இதை விட மிகப்பெரும் குற்றமல்லவா?! ஆகையினால் நாம் பாவத்தை சிறியதாக கருதக்கூடாது. மாறாக யாருக்கு மாறு செய்கிறோம் என்பதைத்தான் நாம் அவதானிக்க வேண்டும்.

தீமையானது இறைவன் புறத்திலிருந்து வருவதில்லை. தீமைகள் அடிப்படையில இருப்பியல் சார்ந்த விடயமல்ல. ஆக, இருப்பானது நன்மையின் மொத்த வடிவமாகும்.

உதாரணத்திற்கு ஒருவர் இன்னொருவரை, எழுந்து நடமாட முடியாத அளவு மிகக்கடுமையாக தாக்கிவிட்டார் என்றால் அவர் அநியாயம் என்ற பண்பை பெற்றவராக மாறிவிடுகிறார். அநியாயம் என்பது தீமையுமாகும்.

இருப்பினும், ஒரு தடியை எடுத்து மற்றொரு நபரைத் தாக்கும் ஒருவரிடம் அதிகார ஆற்றல் இருப்பது இயல்பிலேயே தீமை அல்ல.... More

இறைவன் பௌதீக விதிகளையும் அவற்றை நிர்வகிக்கும் கோட்பாடுகளையும் வைத்துள்ளான். இப்பிரபஞ்சத்தில் முறைகேடு அல்லது சுற்றுச்சூழல் கோளாறு ஏற்பட்டால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்கின்றது. அத்துடன் பூமியில் சீர்திருத்தமும் மிகச் சிறந்த வாழ்வும் தொடர வேண்டும் என்ற நோக்கில் இந்த சமநிலையின் இருப்பை அது பேணிப்பாதுகாக்கிறது. மக்களுக்கும் வாழ்க்கைக்கும் நன்மையளிப்பவை –பயனளிப்பவை மாத்திரமே எஞ்சியிருக்கும். ஏனையவை அழிந்துவிடும். பூமியில் பேரழிவுகள் ஏற்படும் போது நோய்கள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்றவைகளால் , மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், இறைவனின் திருப் பெயர்களான வலிமைமிக்கவன், குணப்படுத்துபவன் பாதுகாப்பாளன் போன்ற பெயர்கள் பிரதிபலிக்கின்றன. அதாவது நோயாளியை குணப்படுத்துவதிலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோரை பாதுகாப்பதிலும் அவனின் உயரிய திருநாமங்கள் வெளிப்படுகின்றன. அதேபோல், நீதியாளன் எனும் அவனின் திருநாமமானது பிறருக்கு அநியாயம் செய்தவன், மற்றும் பாவியை தண்டிப்பதிலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் அவன் ஞானமிக்கவன் எனும் திருநாமமானது பாவியல்லாதோரை சோதிப்பதில் பிரதிபலிக்கிறது. அதாவது ஒருவன் இறைவனின் சோதனையில் பொறுமை காத்தால் அவனுக்கு வெகுமதி வழங்கியும், யார் அவனின் சோதனையில் வெறுப்போடு நடந்து கொள்கிறானோ அவனுக்கு தண்டனை வழங்குவதன் மூலமும் கூலி வழங்குவதாகும். ஒரு மனிதன் தனது இரட்சகனின் அழகிய கொடைகளை –வெகுமதிகளை அறிந்து கொள்வது போல், இந்த சோதனைகள் மூலம் அவனது மகத்துவத்தையும் தெரிந்து கொள்கிறான். இறைவனின் அழகிய இறை பண்புகளை அறிந்து கொள்வதால் மாத்திரம் அவனை அறியமுடியாது மாறாக ஏனைய எல்லாப் பண்புகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.

சமகால சடவாத தத்துவஞானிகளில் பலர் நாத்திகத்தை ஏற்றுக் கொள்வதில் இவ்வுலகில் நிகழும் இன்னல்கள், தீமைகள் மற்றும் வலிகள் பின்னணியாக அமைந்தது. அவர்களுள் தத்துவஞானி 'அந்தோனி ஃப்ளு'வும் ஒருவர், அவர் இறப்பதற்கு முன் கடவுள் இருப்பதை ஒப்புக்கொண்டு 'கடவுள் இருக்கிறார்' என்ற புத்தகத்தை எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் நாத்திகத்தில் ஒரு முக்கிய தலைவராக இருந்த போதிலும், கடவுள் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டபோது, அவர் பின்வருமாறு கூறினார்:

'மனித வாழ்க்கையில் தீமை மற்றும் துன்பம் இருப்பது கடவுளின் இருப்பை நிராகரிக்காது. ஆனால் தெய்வீக பண்புகளை மறுபரிசீலனை செய்ய நம்மை தூண்டுகிறது'. 'இந்த பேரழிவுகள் ஒரு நபரின் பௌதீகரீதியான திறன்களைத் தூண்டுவதால், பல நேர்மறையான அம்சங்களைக் கொண்டிருப்பதாக 'அந்தோனி ஃப்ளு', கருதுகிறார். அதாவது இந்தப் பேரழிவிலிருந்து காக்கவல்ல பல விடயங்களை புதிதாக கண்டுபிடிப்பதற்கான உத்வேகத்தை மனிதனுக்கு வழங்குவதுடன், சிறந்த உளவியல் பண்புகளைத் தூண்டி, மக்களுக்கு உதவ அவனை நிர்ப்பந்திக்கிறது. அத்துடன் வரலாறு முழுவதும் மனித நாகரிகங்களைக் கட்டியெழுப்பிய பெருமை தீங்கு மற்றும் இன்னலுக்கு உண்டு என்றும் அவர் கூறுகிறார். இந்த சிக்கலை தெளிவுபடுத்தவும் விளக்குவதற்கும் பல ஆய்வுக் கட்டுரைகள் தேவைப்படும். எனவே இதற்குரிய தெளிவை தரக்கூடியதாக மத விளக்கம் இருப்பதோடு அது மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், வாழ்க்கையின் இயல்புக்கு மிகவும் இணக்கமாகவும் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்'. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது). تقدم... More

இவ்வுலக வாழ்க்கையில் தீமைகள் இருப்பதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்பவர் கடவுளின் இருப்பை மறுப்பதற்கு நியாயம் தேடுவதையே நோக்காகக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவருடைய குறுகிய பார்வையையும் அதன் பின்னால் உள்ள ஞானத்தைப் பற்றிய அவரது சிந்தனையின் பலவீனத்தையும், உள்ளார்ந்த விஷயங்களைப் பற்றிய அறிவின்மையையும் நமக்கு வெளிப்படுத்துகிறார். மேலும் நாத்திகர் தனது கேள்வியின் மூலம் தீமை விதிவிலக்கு என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே, தீமை தோன்றியதன் நுட்பம் பற்றி கேள்வி கேட்க முன், 'முதன்முதலில் நல்லது எப்படி வந்தது?' என்ற மிகவும் யதார்த்தமான கேள்வியைக் கேட்க வேண்டும்.

இதைவிடவும் மிக முக்கிய கேள்வியான ' நல்லதை படைத்தவன் யார்? என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான கேள்வி என்பதில் சந்தேகமும் இல்லை. அத்துடன் தொடக்கப் புள்ளி அல்லது அடிப்படை அல்லது நடைமுறையில் பரவலாக உள்ள கொள்கையில் நாம் உடன்பட வேண்டும். இவ்வுடன்பாடுகளின் பின் விதிவிலக்குகளுக்கான காரணங்களை நாம் தேட முடியும்.... More

உதாரணத்திற்கு யாராவது ஒருவர் தங்கள் பெற்றோரை புறக்கணித்து, அவமானப்படுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றி, அவர்களை பாதையில் விட்டுவிட்டால் அந்த நபர் குறித்து எப்படி நினைப்போம்?

ஒரு நபர் இந்த நிகழ்வைத் தொடர்ந்து தான் அந்த நபரின் வீட்டிற்கு சென்று, அவனை கௌரவித்து, உணவு வழங்கி, அவரின் செயலுக்கு நன்றி பாராட்டுவதாக யாராவது கூறினால், மக்கள் அந்த நபரின் செயலை பாராட்டி அதனை ஏற்றுக்கொள்வார்களா?! அல்லாஹ்வுக்கே இதில் உயர் முன்மாதிரி உண்டு. படைப்பாளனை நிராகரித்து, அவனை நம்பாத ஒருவரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? நரக நெருப்பால் தண்டிக்கப்படுவோர் அவர்களுக்கே உரிய சரியான தண்டனையையே பெறுகிறார்கள். காரணம் குறித்த அந்நபர் பூமியில் அமைதியும், நன்மையும் விளைய வேண்டும் என்பதை விரும்பாது அதனை அற்பமாகக் கருதினார். ஆகவே பரலோகத்து சுவர்க்க இன்பத்தை பெறுவதற்கு தகுதியற்றவராக மாறி விடுகிறார்.

உதாரணமாக, இரசாயன ஆயுதங்களால் குழந்தைகளை சித்திரவதை செய்யும் ஒருவர் எவ்வித விசாரணையுமின்றி சுவர்க்கம் நுழைய வேண்டும் என நாம் எதிர்பார்ப்போமா?... More

உண்மையில், அல்லாஹ் தனது அடியார்கள் அவனைவரும் தன்னை விசுவாசிக்க வேண்டும் என விரும்புகிறான்.

"எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்". (அஸ்ஸுமர்:7) تقدم

இருப்பினும், அல்லாஹ் எவ்வித விசாரணையுமின்றி அனைவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பினால், நீதி வெளிப்படையாக மீறப்படும். அத்துடன் அல்லாஹ் தனது தீர்க்கதரிசி மூஸா (மோசஸ்) மற்றும் கொடுங்கோலன் பிர்அவனுக்கும் இதே வழிமுறையை பின்பற்ற நேரிடும். அது மாத்திரமின்றி ஒவ்வொரு அடக்குமுறையாளனும் -அநியாயக்காரனும்- அவனால் பாதிக்கப்பட்டோரும் எதுவும் செய்யாதது போல் சொர்க்கத்தில் நுழைவர். ஆகவே சொர்க்கத்தில் நுழைபவர்கள் தகுதியின் அடிப்படையில் நுழைவதை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையின் தேவை உள்ளது.... More

பல குற்றங்கள் சில போது ஆயுள் தண்டனைக்கு வழிவகுக்கும். குற்றவாளி தன் குற்றத்தைச் சில நிமிடங்களில் செய்ததால், ஆயுள் தண்டனை நியாயமற்றது என்று யாராவது கூறுவார்களா? குற்றவாளி ஒரு வருடம் மாத்திரமே பணத்தை கொள்ளை அடித்தான் என்பதற்காக பத்து வருட சிறைத்தண்டனை நியாயமற்ற தீர்ப்பு எனக் கூற முடியுமா? குற்றங்களுக்கான தண்டனைகள் காலத்துடன் தொடர்புடையவை அல்ல, மாறாக அக்குற்றங்களின் அளவு மற்றும் அவற்றின் கொடிய தன்மையைப் பொறுத்ததாகும்.

தாய் தன் பிள்ளைகள் பயணம் செய்யும் போதோ அல்லது வேலைக்குச் செல்லும் போதோ போய் வருகையில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்கொள்ளுங்கள் என அவர்களை எச்சரிப்பதன் மூலம் அவர்களை மிகவும் சோர்வுக் குள்ளாக்குகிறாள் என நாம் வைத்துக்கொள்வோம். இவ்வாறான ஒரு தாய் இரக்கமற்ற இருகிய மனம் படைத்தவள் எனக் கருதப்படுவாளா? இங்கு பாசமானது கடுமையின் வெளிப்பாடாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அல்லாஹ்வும் தனது அடியார்கள் மீதான கருணையினால் அவர்களுக்கு நல்லனவற்றை நினைவூட்டி, தீயனவற்றை எச்சரித்து, மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுக்கிறான். மேலும் அவர்கள் தமது பாவங்களிலிருந்து மீண்டு மனந்திருந்தி அவனிடம் முறையிடும் போது அவர்களின் பாவங்களை நன்மைகளாக மாற்றுவதாகவும் வாக்களிக்கிறான். இது அவனின் கருணையின் வெளிப்பாடல்லவா!

"யார் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கைகொண்டு நல்லறமும் புரிகிறாறோ அவர்களுக்கு அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான்". (அல் புர்கான்:70). تقدم

குறைந்த சில வணக்கங்களுக்கு நிகராக நிரந்தர சுவர்க்க இன்பங்களையும் உயர் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்கிறோம் இது குறித்து ஏன் எமது அவதானத்தை செலுத்துவதில்லை?... More

அல்லாஹ் தனது அடியார்கள் அனைவருக்கும் மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுத்துள்ளான். எனவே அவன் இறைநிராகரிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அத்துடன் இறை நிராகரிப்பு மற்றும் பூமியில் குழப்பம் விழைவித்தல் போன்ற மனிதன் செல்லும் பிழையான நடத்தையையும் அவன் விரும்ப மாட்டான்.

"அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்". (அஸ்ஸுமர் : 7). تقدم

நீங்கள் களவெடுத்தாலும் விபச்சரம் செய்தாலும் கொலை செய்தாலும் இந்தப் பூமியில் குழப்பம் விளைவித்தாலும், நீங்கள் அனைவரும் என்னைப்பொருத்தவரை நல்ல அடியாரைப் போன்றோர், உங்கள் அனைவரையும் நினைத்து நான் பெருமைப் படுகிறேன் என்று பிள்ளைகளுக்கு முன்னால் திரும்பத் திரும்பச் சொல்லும் தந்தையைப் பற்றி நாம் என்ன சொல்வது? எளிமையாகச் சொன்னால், இந்த தந்தை ஷைத்தானைப் போன்றவர், பூமியில் குழப்பங்கள் மற்றும் தீமைகளை செய்வதற்கு குழந்தைகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல முடியும்.... More

அகிலங்களின் இரட்சகனை விசுவாசம் கொள்ளுதல் மற்றும் அவனுக்கு கட்டுப்படுதல் ஆகிய இரண்டு விடயங்களையும் நாம் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

அகிலத்தின் இரட்சகனுக்கு செய்யவேண்டிய, எவரும் கைவிட முடியாத கட்டாயக்கடமை யாதெனில் அவனை ஒருவன் என்று ஏற்றுக் கட்டுபடுவதும், அவனுக்கு எவரையும் இணையாக்காது அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதும், அவன் ஒருவனே படைப்பாளன் என்றும் ஆட்சியும் அதிகாரமும் அவனுக்கே உரியன என நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஏற்றுக்கொள்வதாகும். இதுவே ஈமானின் -விசுவாசத்தின்- அடிப்படையாகும். (ஈமான்) இறைவிசுவாசம் என்பது சொல்லும் செயலுமாகும். இதை தவிர வேறு தெரிவொன்று கிடையாது. இதன் அடிப்படையிலேயே ஒரு மனிதன் விசாரிக்கப்படவும், தண்டனை வழங்கப்படவும் முடியும்.

கட்டுப்படுதலுக்கு எதிர் குற்றம்புரிவதாகும்.... More

மனிதனைப் பொறுத்தவரை அறிவைத் தேடுவதும், இப்பிரஞ்ச அத்தாட்சிகள் குறித்து ஆய்வு செய்வதும் அவனின் உரிமையாகும். இதற்காகவே அல்லாஹ் எமக்கு பகுத்தறிவைத்தந்து அதனை உரிய முறையில் பயன்படுத்துமாறு குறிப்பிடுகிறான். ஒவ்வொரு மனிதனும் தனது மூதாதையர்களின் மார்க்கத்தை குறித்து ஆய்வோ சிந்தனை செய்யாது மொத்தத்தில் பகுத்தறிவை உரிய முறையில் பயன்படுத்தாமலே கண்மூடித்தனமாக பின்பற்றுகிறான். இதனால் அல்லாஹ் அவனுள் வைத்திருக்கும் மாபெரும் அருளான பகுத்தறிவை அற்பமாகக்கருதி தனது ஆன்மாவுக்கு அநியாயம் இழைத்து தன்னையே சிறுமைப்படுத்திக் கொண்டவனாக மாறிவிடுகிறான்.

ஏகத்துவத்தை ஏற்ற குடும்பத்தில் வளர்ந்த எத்தனையோ முஸ்லிம்கள் சரியான பாதையை விட்டு விலகி அல்லாஹ்வுக்கு இணைவைப்போராக மாறியிருக்கிறார்கள். ஆனால் பல தெய்வக் கோட்பாட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் அல்லது திரித்துவத்தை நம்பிக்கைகொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பலர் இந்தக் கோட்பாடுகளை உதரித் தள்ளிவிட்டு ' லாஇலாஹ இல்லல்லாஹ் ' (உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை) எனும் திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாமிய கொள்கையை ஏற்றோர் பலர் உள்ளனர்.

பின்வரும் உருவகக் கதை இந்தக் கருத்தை விளக்குகிறது: ஒரு மனைவி தன் கணவனுக்காக ஒரு மீனை சமைத்தாள், ஆனால் அவள் அதை சமைப்பதற்கு முன்பு தலையையும் வாலையும் வெட்டினாள். தலையையும் வாலையும் ஏன் வெட்டினாய் என்று கணவன் கேட்டதற்கு. அவள், 'அப்படித்தான் என் அம்மா சமைப்பார்கள்.' அப்போது கணவர் தாயிடம், மீன் சமைக்கும் போது ஏன் வாலையும் தலையையும் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அம்மா, எனது அம்மா அப்படித்தான் சமைப்பார் என்றார். அப்போது கணவன் பாட்டியிடம் ஏன் தலையையும் வாலையும் வெட்டுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவள், 'எங்கள் வீட்டில் சமையல் பாத்திரம் சிறியதாக இருந்தது, பானையின் உள்ளே மீனைப் வைப்பதற்காகவே நான் தலையையும் வாலையும் வெட்ட வேண்டியிருந்தது.' என்று பதிலளித்தாள்.... More

இஸ்லாமியத் தூது கிடைக்கப் பெறாதோரை அல்லாஹ் ஒருபோதும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால் மறுமையில் அவர்கள் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.

இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாத மனிதர்களுக்கு எந்த நியாயமும் கிடையாது, ஏனென்றால் நாம் குறிப்பிட்டது போல, அவர்கள் அறிவைத் தேடுவதிலும் சிந்திப்பதிலும் கவனயீனமாக இருக்கலாகாது. மேலும் இஸ்லாமியக் கொள்கை சரியானது எனும் சான்று நிறுவப்படுவதும் அதை திட்டப்படுத்திக் கொள்வதும் சிரமம் என்றிருப்பினும் ஒவ்வொரு நபரும் இந்த விடயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டவர்கள். அறியாமை அல்லது சரியான சான்று கிடைக்காமை போன்றவற்றிற்கான முடிவு மறுமையில் இறை நாட்டத்துடன் தொடர்பான விடயமாகும். இவ்வுலகத்தீர்ப்புகள் யாவும் அவை வெளிப்படையான அம்சங்களைப் பொறுத்ததாகும்.

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கும் பகுத்தறிவு, இயற்பூக்கம், தூதுத்துவம், இப்பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளேயும் காணப்படுகின்ற அத்தாட்சிககள் ஆகியவற்றின் மூலம் நிறுவப்பட்ட சான்றாதாரங்களுக்குப் பின்; அவர்களின் மீது தண்டனை விதித்திருப்பதில் எவ்வித அநியாயமும் கிடையாது என்பதை அறிவுள்ளோர் உணர்வர். அல்லாஹ்வை அறிந்து அவனை ஒருவனாக ஏற்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளை கடைப்பிடித்து ஓழுகுவதே இவையனைத்திற்கு ஈடாக அவர்கள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச விடயமாகும். அப்படிச் செய்தால், அவர்கள் நித்திய நரக வாழ்விலிருந்து காப்பாற்றப்பட்டு, இம்மையிலும் மறுமையிலும் மகிழ்சியை- சுகத்தை- அனுபவிப்பார்கள். இது கடினமான ஓரு விடயம் என்று நீர் நினைக்கிறீரா?... More

ஆக வாழ்க்கைப்பயணத்தின் சிறப்பான மற்றும் பாதுகாப்பான முடிவும் மீட்சிக்கான சிறந்த வழியும் பின்வரும் இறைவசனங்களில் சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான் :

"பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும், இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது. மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். (அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக் கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென் பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களா கவும் உங்களிடம் வரவில்லையா? என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) உண்மையில் அவர்கள் (வந்தார்கள்) என்று கூறுவார்கள்; எனினும் வேதனை வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உண்மையாகி விட்டது. நரகத்தின் வாயில்களால் நீங்கள் நுழையுங்கள் என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடிப்போரின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும். தம் இரட்சகனுக்கு அஞ்சியோர் சுவர்க்கத்தின்பால் கூட்டங் கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: 'உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் நல்லவிதமாக இருங்கள். என்றென்றும் நிரந்தரமாக தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்(என்று அவர்கள் கூறுவார்கள்). தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்த, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி மிகவும் சிறந்ததாகும்". (அஸ்ஸுமர்: 69-74). تقدم

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை இல்லை என்று சான்று பகர்கின்றேன்.... More