Surah An-Nas ( Mankind )

தமிழ்

Surah An-Nas ( Mankind ) - Aya count 6

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿١﴾

(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

مَلِكِ ٱلنَّاسِ ﴿٢﴾

(அவனே) மனிதர்களின் அரசன்;

إِلَٰهِ ٱلنَّاسِ ﴿٣﴾

(அவனே) மனிதர்களின் நாயன்.

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ ﴿٤﴾

பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ ﴿٥﴾

அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ ﴿٦﴾

(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.